Skip to main content

நீ எனக்கு யாராம்...?






















கிழக்கும் மேற்கும் திசைகளென்றேன்
நீ திசைகளென்ற ஒன்றே இல்லையென்றாய்,
வானம் முழுதும் நட்சத்திரம் என்றேன்..
வானம் என்பதே பொய் என்றாய்....
பூமியின் சுழற்சி இடமிலிருந்து வலமென்றேன்
அதுவும் ஒரு நாள் மாறுமென்றாய்,
பகலில் அத்தனையும் அழகு என்றேன்
பகலென்பதும் மட்டுமன்றி பகலவனே பொய்யென்றாய்!

நான், நேரென்பேன், நீ கோணலென்பாய்
நான் சந்தோசமென்பேன் நீ துக்கமென்பாய்
நான் காதல் என்பேன் அது மாயை என்பாய்
நான் வாழ்க்கை என்பேன் நீ மரணமென்பாய்

எல்லாம் முரண்களாக கொண்டு
எப்படி இயங்குகிறோம் ஒன்றாய் என்பேன்?
இயக்கம் என்பதில் முரணில்லை என்பாய்
நான் உன்னிடம் நெருங்கி வருவேன்
என் நெஞ்சினில் கூராய் கத்தியைச் சொருகுவாய்
உன்னை விட்டு தூரப் போவேன்...
தாயாய் என்னைக் கட்டியணைப்பாய்..!

நட்புமில்லை என்றாய், காதலுமில்லையென்றாய்
உறவுகளற்ற உணர்வென்றாய்
தளிர்களற்ற செடி என்றாய்
கனவுகளற்ற உறக்கமென்றாய்
கவிதைகள் இல்லா காதல் என்றாய்
சொல்லும் போதே செத்து விடும்
வார்த்தைகளை நீ மதியேனென்றாய்;
நான் இருக்கிறேன் என்றாய்
உடனேயே நான் இல்லை என்றாய்;
சோகம் என்றாய் ஆனால்...
அதில் சந்தோசம் என்றாய்!

எப்படி உன்னை கணிப்பதென்றேன்?
என்னை ஏன் கணிக்கிறாய் என்றாய்..?
நீ எனக்கு யாரென்றேன்?
காற்று உனக்கு யாரென்றாய்?
நான் திகைக்கிறேன் என்றேன்..
நீ நகைக்கிறேன் என்றாய்!

கடைசியில்...

எனக்கான காத்திருப்புகளில்
வராத என்னைத் தேடி தேடி
அழுதேன் என்றாய்...?

இப்போதாவது சொல்...
நீ எனக்கு யாராம்?


தேவா. S


Comments

.....ஹம்ம்ம்ம் சூப்பர் கவிதை.. எதிர் எதிர் துருவம் தான் ஒன்றை ஒன்று ஈர்க்கும் என்பது இது தானோ?? :-))
நான், நேரென்பேன், நீ கோணலென்பாய்
நான் சந்தோசமென்பேன் நீ துக்கமென்பாய்
நான் காதல் என்பேன் அது மாயை என்பாய்
நான் வாழ்க்கை என்பேன் நீ மரணமென்பாய்///

இதெல்லாம் நீங்க சொல்றதாச்சே...!!!
எனக்கான காத்திருப்புகளில்
வராத என்னைத் தேடி தேடி
அழுதேன் என்றாய்...?

இப்போதாவது சொல்...
நீ எனக்கு யாராம்?////

அதானே தேடிட்டு தேடிட்டு .......அவங்க அழுதாங்க சரி

நீங்க ஏன் சொல்லு சொல்லு அழுவுறீங்க....

@@@யாரோக்கோ

அட நீங்க யாருன்னு சொல்லுங்க.....
Chitra said…
இப்போதாவது சொல்...
நீ எனக்கு யாராம்?


..... ஒண்ணு விட்ட அக்கா மகள் என்று நினைக்கிறேன். ஹா,ஹா,ஹா,ஹா....
Chitra said…
அருமையான கவிதைங்க, தேவா.
dheva said…
//ஒண்ணு விட்ட அக்கா மகள் என்று நினைக்கிறேன். //

Chitra @ ROFL
Mohamed Faaique said…
யாருண்ணே அவ? ரொம்ப குழப்புறா??/? கோக்கு மாக்கா பேசனும்’னு நேர்த்திக் கடனோ!!!!

அருமையான வசன நடை.. போட்டோவும் சூப்பர்...
சிசு said…
நல்லாருக்கு....

//நீ எனக்கு யாராம்?//
அவுங்களா இருப்பாங்களோ... :-)

Popular posts from this blog

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

முரட்டுக் காளை....!

தலைவரை பத்தி எழுத சொல்லிட்டு தம்பி அருண் பாட்டுக்கு போய்ட்டான்....! நாம ஏற்கனவே ரஜினினு சொன்னாலே பத்திகிட்டு எரிவோம்....இதுல பெட்ரோல வேற ஊத்துன எப்டி? ....சும்மா பத்திகிட்டு எரியும்ல..எரிமலை மாதிரி..ஹா...ஹா..ஹா...! தலிவர் படத்த லிஸ்ட் எல்லாம் பண்ண முடியாது.. என்ன பொறுத்த வரைக்கும்....எல்லாமே... நம்பர் 1 தான்...!!! இது எப்டி இருக்கு....ஸ்ட்ரெய்ட்டா மேட்ருக்குள்ள போவமா....இப்டிச் சூடு..... முரட்டுக்காளை (1980) படம் போட்ட கொஞ்ச நேரத்துல நான் பயந்தே போய்ட்டேன்....! ஒரு காளை மாடு முரட்டுத்தனமா நிக்கும் போது.. அத அடக்க சிங்கம் மாதிரி நம்ம சூப்பர் ஸ்டார்.....! என்னோட கவலை எல்லாம் தலிவருக்கு ஒண்ணும் ஆகக்கூடாதுன்னுதான்....அது எப்டி ஆகும் தலைவர் சும்மா பிரிச்சு மேஞ்சு காளைய அடக்குற வரைக்கும் பக்கத்து சீட்ல இருந்த ஆள டேமேஜ் ஆக்கிட்டேன்...ஜு ஜு பி....!எப்பவுமே தலிவர் படம்னா...அப்டிதான்...இஹ் ஹா...ஹா ஹா..! அதுக்கு அப்புறம் வர்ற பாட்டு...நான் சொல்ல தேவயில்ல..உங்க ஹிட் இல்ல எங்க ஹிட் இல்ல.. உலக ஹிட்.... தமிழ் சினிமாவுக்கே பஞ்சர் பாத்த படம்.... ! எங்க ஊர்..(எந்த ஊர்னு கேட்டா ரூட்டு மாறிடும்...ட்ராக்க ...