Skip to main content

நானிருக்கிறேன்...!



















வெறிச்சோடி கிடக்கும்
நீயில்லாத மனதில்
ஒரு பெரு மழைக்குப்
பின்னான தெருவோர
நீர்த்தேக்கமாய் தேங்கிக் கிடக்கிறது
உன் நினைவுகள்!

கரையைத் தொடும்
அலைகளின் வாடிக்கையான
நிகழ்வைப் போல
மீண்டும் மீண்டும் வரும்
உன் நினைவுகளை எல்லாம்
எரித்து போட்ட இடத்திலிருந்து
சிரிக்கிறது என் இயலாமை.

ஒற்றைப் பாறையில்
உரிமைகளற்ற ஒரு பந்தத்தில்
ஒன்றிக் கிடக்கிறேன் ஒரு
பேடைக் குயிலின் குரலோடு...
ஒரு ஈரக் காற்றின் துணையோடு!

விடியும் பொழுதே பெய்யும்
மழையாய் நச நசக்கும்
உன் ஞாபகங்களை எல்லாம்
எழுத்துக்களாக்கும் அளவில்
இருக்கிறது என் முயற்சிகள்!

ஒரு நெல் பிடித்த நாற்று
மெல்ல தலையசைத்து
என்னை வா என்கிறதா
இல்லை போ என்கிறதா
என்ற குழப்பத்திலேயே
வரப்புகளில் வழியறியாமல்
பறப்பதைப் போலவே
நடக்கிறேன்!

வழக்கம் போலவே
சில சிட்டுக்குருவிகளின்
வரப்போர வாய்க்கால்
நீரோடான சில்மிசங்களும்
உச்சி வானில் ஒரு
கழுகின் சிறகடிப்பும்
புற்களைக் கடிக்கும்
பசுக்களின் பின்னால்
மோகித்து நிற்கும் காளைகளும்
என்று வாழ்க்கை மட்டும்
வாழ்க்கையாகவே இருக்கிறது
ஒரு ஓரத்தில் என்னையும்
கூட சேர்த்துக் கொண்டு....

நானிருக்கிறேன்...!


தேவா. S




Comments

//விடியும் பொழுதே பெய்யும்
மழையாய் நச நசக்கும்
உன் ஞாபகங்களை எல்லாம்
எழுத்துக்களாக்கும் அளவில்
இருக்கிறது என் முயற்சிகள்!//


:)
Chitra said…
ஒற்றைப் பாறையில்
உரிமைகளற்ற ஒரு பந்தத்தில்
ஒன்றிக் கிடக்கிறேன் ஒரு
பேடைக் குயிலின் குரலோடு...
ஒரு ஈரக் காற்றின் துணையோடு!


......அருமை, தேவா.... அருமையாக எழுதி இருக்கீங்க. ரசித்தேன்.
மனதை வருடும் கவிதை...
வாழ்த்துக்கள்..
//கரையைத் தொடும்
அலைகளின் வாடிக்கையான
நிகழ்வைப் போல
மீண்டும் மீண்டும் வரும்
உன் நினைவுகளை எல்லாம்
எரித்து போட்ட இடத்திலிருந்து
சிரிக்கிறது என் இயலாமை.//

வாவ் கவிதை சூப்பர்....
//விடியும் பொழுதே பெய்யும்
மழையாய் நச நசக்கும்
உன் ஞாபகங்களை எல்லாம்
எழுத்துக்களாக்கும் அளவில்
இருக்கிறது என் முயற்சிகள்!//

ரொம்பதான் அடிபட்டுருக்கீங்க போல...
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள் தேவா.
ஒரு ஓரத்தில் என்னையும்
கூட சேர்த்துக் கொண்டு....
அழகு .

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...