Skip to main content

சொல்லாமல்...!



















உணர்வுகளை காதலாக்கி
என்னின் ஒவ்வொரு
நிமிடத்துக்குள்ளும் பதித்து விட்டு
உன்னை தொலைத்துக் கொள்கிறாய்... நீ!

என் உதடுகளுக்குள்
சிக்கிக் கொண்டு தவிக்கும்
வார்த்தைகளை உன்னிடம்
நேரே சொல்லும் திரணியற்று
கவிதைகளில் கடை விரிக்கிறேன் நான்!

சப்தங்களில் தொலையும் காதல்
மெளனத்தில் வாழும்
என்று என்றோ நீ சொன்னது
இன்று எப்போதும் எனக்குள்
சப்தமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது!

ஒரு மொட்டை மாடி
நிலவை தனியே நான் ரசித்த பொழுதில்
ஆழமாய் வந்து உரசி நின்ற
உன் நினைவுகளை விட்டுக் கூட
நான் தள்ளிதான் நின்றேன்!

காணப்படாமலேயே இருக்கும்
ஒரு அழகிய கனவாய்
என் நினைவுகளில் சிக்கிக் கிடக்கும்
ஒரு அழகிய காதலை
வார்த்தைகளுக்குள் கொண்டு வரும்
என் முயற்சிகள் எப்போதும்
தோல்வியைத் தான் தழுவுகின்றன!

ஆழமாய் உன் விழிகள் பார்த்து
மெளனத்தால் கதைகள் பகின்று
மனதால் கரங்கள் பற்றி
தூர நிற்கும் இடைவெளிகளிலேயே
எப்போதும் சிறகடிக்கும்
உன் மீதான உற்சாக காதலை
சொன்னால்தான் என்ன....?
சொல்லா விட்டால் தான் என்ன?

தேவா. S

Comments

Chitra said…
சப்தங்களில் தொலையும் காதல்
மெளனத்தில் வாழும்
என்று என்றோ நீ சொன்னது
இன்று எப்போதும் எனக்குள்
சப்தமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது!


...very nice. :-)
Kousalya Raj said…
உணர்வுகளை கொட்டி வடித்த கவிதை !
படிப்பவர்களை உற்சாகம் கொள்ள செய்வதின் பின்னணியில் ஒளிந்து கொண்டிருக்கிறது காதல் என்னும் அற்புதம்...!

கவிதைக்குள் சிக்கிக்கொண்ட மனதை மெல்ல வருடுகிறது சைந்தவியின் குரல் !!
ஹேமா said…
மெல்லக் காதல் வருடும் காதல் சப்தம் இங்குவரை !
Anonymous said…
//சப்தங்களில் தொலையும் காதல்
மெளனத்தில் வாழும்//

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...