Skip to main content

ஹாய்...12.07.2011!



















ஹோ...ன்னு இருக்கு மனசு...! பதிவுகள் எழுத ஆரம்பிச்ச காலத்துல இருந்து இப்போ வரைக்கும் இதை, இதை எழுதணும்னு ஒரு நாள் கூட திட்டமிட்டது கிடையாது. ஒரு வருசத்துக்கு 365 நாள்னு வச்சுக்கிட்டா எழுத்துன்னு எழுத ஆரம்பிச்சதுல இருந்து இன்னிக்கு வரைக்கும் தினமும் நான் எழுதிட்டு இருக்கதாதான் கணக்கு வழக்கு சொல்லுது.

ஒவ்வொரு தடவையும் எழுதும் போதும் ஒரு அழுத்தமனா வலி மனசுக்குள்ள இருந்துகிட்டுதான் இருக்கு. அது என்ன ஏதுன்னு தெளிவா என்னால சொல்ல முடியாது ஆனா எழுதி ஏதோ சொல்லிட்டேன்னு சொல்லிகிறத விட எழுதினதால நான் பக்குவப்பட்டேன் அப்டீன்றது ஒரு நிதர்சனமான உண்மை.

வாழ்க்கையில பெரிய கஷ்டமான விசயமா நான் பாக்குறது உள்ளுணர்வு உறுத்தலோட வாழ்க்கைய வாழ்றது. எழுத்துன்னு எழுத வந்த உடனே அது தனிப்பட்ட வாழ்க்கையை விட பளிச்சுன்னு நம்மள காட்டிக்கிற மாதிரிதான் எல்லோரும் எழுதுவாங்க, நானும் அதைதான் செய்றேன். ஏன்னா இது பொது வெளி.

ஒரு கல்யாண வீட்டுக்கு போகும் போது வெள்ளையும் சொள்ளையுமா, அலங்காரங்கத்தோடதான் போவோம், ஏன்னா அது பொதுவெளி அந்த மாதிரி இடத்துல நம்மை பளீச்சுனு காட்டிகணும்னுதான் விரும்புவோம். பொது வெளில எழுதும் போதும் அப்டீதான் நம்மளால முடியாத, நாம பின்பற்றாத பலதையும் எழுதுவோம். வெளியே இருக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம், சமூக நீதி பற்றி பேசுவோம் இப்டி, எல்லாமே...இருக்கும்னு வச்சுகோங்களேன்

இப்டி எழுதி முடிச்சுட்டு எதிர்மறையா வாழ்றவங்க எல்லாம் ஆத்மார்த்தமா எழுதி இருக்க மாட்டங்களோன்றது என்னோட எண்ணம். ஏன்னு கேட்டிங்கன்னா எழுதும் நிலையில் மனம் கிளர்ந்து ஒரு பரிசுத்த நிலையில கருத்துக்கள் வருது அதை எழுதி முடிச்சுட்டு நாம படிக்கும் போதே அது நமக்கு புதுசாதான் தெரியுது.

எழுத்துக்களின் வலிமையும், இன்னமும் எழுதணும்ன்ற ஆசையும் சேர்ந்து ஒரு வித பொறுப்புணர்ச்சியைக் கொடுக்கணும்னு நான் நினைக்கிறேன். அந்த பொறுப்புணர்ச்சியில் விளையும் தெளிவுகள் ஒரு நல்ல மனுசனா நம்மள மாத்திக்கறதுக்கு உதவுது என்பதும் நிதர்சனமான உண்மை.

என் எழுத்துக்கள் எனக்குள் கொன்று போட்ட முரண்கள் ரொம்ப அதிகம். அது இன்னமும் இருக்குற அரக்க குணங்களை கொன்னு குவிச்சுட்டு மொத்தமா ஆள விட்டுச்சுன்னா டாட்டா...பாய்..பாய்னு நாம பெட்டிய தூக்கிட்டு போயிடப் போறோம். என்னிடம் குறைகள் இருக்கிறது. அந்த குறைகள் ததும்புகின்றன ததும்பல் எழுத்தாகி நான் இப்டி எழுதிட்டேன் எல்லோரும் என்னைய பாருங்க அப்டீன்னு தற்சமயம் வெளிக்காட்டிக் கொள்கிறேன். இது கொஞ்சம் உறுத்தலா இருக்கு...

அப்டீன்னா எழுதாம இருக்க வேண்டியதுதானேனு ஒரு எண்ணமும் வருது. இங்க எழுதுறதும் எழுதாததும் பிரச்சினையே இல்லை. எழுதிட்டு இந்த எழுத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைன்ற ஒரு மனோநிலையை நாம இன்னும் அடையலையேன்றது தான் ஆதங்கமா இருக்கு. சரி.. எழுதி எழுதி இந்த ஆதங்கத்தையும் தீத்துக்குவோம். ஏதோ ஒரு கணத்தில் தொடர்புகள் அறுப்பட்டுத்தான் போகும் அப்டீன்ற நம்பிக்கையோட தோணுறத எழுதிட்டே இருப்போம்னு ஒரு மனசு சொல்லுது.

பாத்தீங்களா....? நான் ஒரு மனுசன் ஆன உள்ள இருக்குற மனசு எவ்ளோ இழுத்தடிக்குதுன்னு. காலமும், சூழலும் மாற, மாற மனோ நிலைகளும் மனுசங்களுக்கும் மாறித்தான் போயிடுது. ஒரு ஆர்ப்பாட்டமான பிரயாணமா தொடங்கின இந்த வலைப்பூ வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்கள் எல்லாம் ரொம்ப கூட்டத்தோட, குதுகலாமா சந்தோசமா ஒரு வித எதிர்ப்பார்ப்புகளோட இருந்தோம். ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல நிதானம் வந்து நம்மளை சூழ ஆரம்பிச்சுடுது. அதுக்கு காரணம் சூழலை உள்ளது உள்ள படி விளங்கிக் கொள்ளும் ஒரு பக்குவம் கிடைச்சதுன்னு வச்சுக்கோங்களேன்.

அப்டிப்பட்ட நேரத்துல ஒடுற ஓட்டத்த கொஞ்சம் ஸ்லோ பண்ணிகிட்டு மெளனமா சுத்தி இருக்கவங்கள பாக்குற மனோநிலை வந்துடுது. நானும் ஒரு கூட்டத்தின் அங்கமாவும் அதே நேரம் தனியாவும் உணர முடிஞ்சுது. ஒரு சினிமா படத்தை தியேட்டர்ல பாக்கும் போது திரையில் வர்ற காட்சியோடு லயிச்சுப் போயி கை தட்டி விசிலடிச்சு, சிரிக்கும் போது சிரிச்சு, அழும் போது அழுது, சண்டை போடுறப்ப கோபப்பட்டு....ஒரு மாதிரி நாமளும் திரையிலேயே வாழ ஆரம்பிச்சுடுவோம்....

டக்குனு ஒரு நிமிசம் எல்லாம் நிறுத்திட்டு....

திரையில இருந்து விலகி அடா...அடா...இது படம்னு ஒரு உணர்வு வரும், அப்டியே மெதுவா திரும்பி பக்கத்து சீட்ல இருக்க மனுசங்க..பின்னால படம் பாத்துட்டு இருக்க மனுசங்க, ஆப்பரேட்டர் கேபின், இப்டி அந்த சினிமா தியேட்டரின் சூழலையும் பாத்துட்டு, நம்மளையும் பாத்துகிட்டு திரையில சினிமாவையும் பார்க்கும் போது அப்போ கிடைகிறது வேற உணர்வு....

அப்டீதான் நான் இப்போ உணர்றேன். எழுத்து, எழுத்தின் மூலம் கிடைக்கும் நட்புகள், இப்டி இந்த ஒரு உலகத்துக்குள்ளயும் நின்னுகிட்டு வெளில இருக்குற நிதர்சனத்தையும் சேர்த்து வச்சு பார்க்கும் போது வேறு ஒரு மனோநிலை கிடைக்குது. எந்தவித ஆரவாரமும் அவசரமும் இல்லாமல் ஒரு வித சீரான வேகத்துல பயணிப்பதே சிறந்ததா படுது.

காலம் ஓடிட்டே இருக்கு...வாழ்க்கை கொண்டு வந்து இப்போ இங்க நிறுத்தி இருக்கு....! இன்னும் என்னவெல்லாம் இந்த காலம் சொல்லப் போகுதோ அப்டீன்ற ஒரு ஆர்வம் மனசு ஓரம் தேங்கிக் கிடந்தாலும், எல்லா விசயமும் தாண்டி முதுமையை அனுபவிக்கணும்ன்ற ஒரு ஆசை ஆயாசமா மனசுக்குள்ள ஒட்டிகிட்டும் இருக்கு.......

ஓட்டங்கள் எல்லாம் அனுபவமாகிப் போக ஒரு ஈசி சேர்ல சாஞ்சுகிட்டு வாழ்க்கையோட எல்லா கூத்தையும் மனதுக்குள்ள அசை போட்டுகிட்டு ஒரு தனிமையை உள்ளே சுகமா அனுபவிச்சுக்கிட்டு வாழலாமே, அப்டீன்ற ஏக்கம் தான் அதுன்னு மெதுவா உணர முடியுது.

பரோட்டோ சிக்கன் 10 வயசுல இருந்து பிடிக்குது...34 வயசு வரைகும் திரும்ப திரும்ப சாப்டுகிட்டே இருக்கோம்...சாப்ட்டு, சாப்ட்டு அதுல ஒரு திருப்திய அடைஞ்சு அதை அழகா கடந்து வந்துட்டம்னா...ஒரு நேரத்துல பாதி வாழைப்பழம் சாப்டுட்டு கம்முனு இருக்குற பக்குவம் வந்துடணும். அப்டி வராம எனக்கு சாகுற வரைகும் பரோட்டோ சிக்கன்னு சொன்னா உயிருன்னு சொல்லி அடம்பிடிச்சேன்னு வச்சுக்கோங்க...அப்போ எனக்கு ஆசை தீரலன்னு அர்த்தம்....அதோட இல்லாம ஒவ்வொரு தடவையும் நான் சாப்டப்ப அதை ஏதோ மேலோட்டமா செஞ்சு இருக்கேனே தவிர ஆத்மார்த்தமா செய்யலைன்னு அர்த்தம்.

ஆத்மார்த்தமா ஈடுபடுற காரியங்கள் சீக்கிரமே ஒரு நிறைவைக் கொடுத்துடும்ங்க..! நிறைவை எட்டாமலேயே இருந்தா, நாமா ஈடுபாடு இல்லாம இருந்திருக்கோம்னு அர்த்தம். அழகானதுதான் வாழ்க்கை ஆனால் அபத்தங்கள் நிறைஞ்சதுன்னு இன்னிக்கு மனசு ஓரமா படுது...

வாழ்க்கையின் தூரங்கள் அழைத்து சென்று கொண்டே இருக்குங்க...! வாழ்க்கை முழுதும் மனுசங்க...மனுசங்கன்னு......நிறைஞ்சு போயி இருக்காங்க...! சந்தோசமா நாம வாழறதோட சேத்து, சந்தோசமா எல்லோரையும் வச்சிக்கிட்டோம்ன்ற திருப்தில போயி சேர்ந்துட்டா முடிஞ்சு போச்சுங்க எல்லாம்...!

ஒவ்வொரு தடவை எழுதி முடிக்கும் போது நிறைவே இருப்பது கிடையாது. எதையோ சொல்ல வர்றேன் அதை சொல்றதுக்கு அனுமதி மறுத்துகிட்டே இருக்குது இயற்கை. தெளிவான வாழ்க்கை வாழணும் நிறைஞ்ச உறவுகளோட, திருப்தியா.....இதை எனக்கும், உங்களுக்கும், இந்த உலகத்துல இருக்குற எல்லோருக்கும் அசையாமல் ஆடிக்கொண்டிருக்கும் இந்த சக்தி ஓட்டம் கொடுக்கணும், கொடுக்கும்....அப்டீன்றது தீர்மானமான எனது வேண்டுதல்.

அழகான பயணத்தில் போய் கிட்டே இருப்போம்...........! என்ன, என்ன தோணுதோ அதை எல்லாம் பகிர்ந்துக்கணும்னு எனக்கு தோணுற வரைக்கும் எழுதிகிட்டே இருக்கேன்....., ஏதோ ஒரு வகையில என் எழுத்து உங்களை சந்தோசப்படுத்தி இருக்கு அப்டீன்றத உணர்றதே பெரிய நிறைவாயிருக்கும் எனக்கு அவ்ளோதான்....

மத்த படி....உங்களுக்கும், வீட்டிலுள்ளவர்களுக்கும் மற்ற நம் எல்லா உறவுகளுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளை என் மனம் குவித்து எல்லாம் வல்ல பெருஞ்சக்தியிடம் வேண்டுகிறேன்....!

ரொம்ப பேசிட்டேன்.....! கேட்ச் யூ ஆல் லேட்டர்...!


தேவா. S










Comments

ஹேமா said…
மனதின் பகிர்வு எல்லோருக்கும் எப்பவும்போல தேவா.இன்னும் சொல்லுங்க !
நல்ல பதிவு.
நன்கு யோசிக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள் தேவா
நல்ல பதிவு.
இன்னும் சொல்லுங்க.

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...