Skip to main content

நிராயுதபாணி...!


















நினைவுகளுக்குள் நிறைந்து...
என்னை கலைத்துப் போடும்
உன்னை இமைத்து இமைத்து
விரட்ட முயன்றும் பிம்பமாய்
விழிகளுக்குள் பரவி...
நின்று கொண்டு, முரண்டு பிடித்து
மாட்டேன் என்கிறாய்!

ஒரு காற்று வந்து
என் தலை கலைக்க,
என் தவம் கலைந்து,
அனிச்சையாய் நினைவில்
வந்து செல்கிறது நீ விரல் நுழைத்து
விளையாடிய தருணங்கள்! !

அணைக்கிறேன் என்று
நீ மூட்டிவிட்டு சென்ற
தீயின் ஜுவாலைக்குள்
உஷ்ணமேறிய நினைவுகளோடு
எரிந்துக் கொண்டிருக்கும்
என் கனவுகளை
நீ காதலென்று சொல்கிறாய்
நான் உன்னை
கள்ளி என்று சொல்கிறேன்...,
ஆமாம்...
அதிரடியாய் உள் நுழைந்து
ஆக்கிரமிப்பு செய்து
என்னை அள்ளிக் கொண்டு
சென்றவளை பின்...
எப்படித்தான் அழைப்பதாம்?

கவிதை எழுதுவேன் என்றாய்...
எங்கே காட்டு என்று...
நான் சொல்லி விட்டு
நான் பார்த்த பாவத்திற்கா
என்னை கட்டிக் கைதியாய்
இழுத்துச் செல்கின்றன
உன் வார்த்தைகள்?

சப்தமில்லாமல் சிரிக்கிறாய்;
யுத்தம் இல்லாமல் அடிக்கிறாய்;
மிச்சமில்லாமல் கொல்கிறாய்;
சொச்சமில்லாமல் அழிக்கிறாய்;
கத்தி முனையில் நிர்ப்பந்திக்கும்
போர் வீரன் போல..
என்னை கவிதை முனையில்
மண்டியிடச் செய்து..
காதலை கொள்ளையடிக்கும்
உன் நினைவுகளோடு
தோற்றுப் போய்தான் நிற்கிறேன்
நிராயுதபாணியாய்!


தேவா. S

PS: சத்தியமா அடுத்து " கழுகு என்னும் போர்வாள்...! " (ஸ்ஸ்ஸ்ஸ் பா எவ்வளவு பில்டப் அப்டீன்றீங்களா... உங்க மைண்ட் வாய்ஸ் கேட்டுருச்சு!)

Comments

Kousalya Raj said…
///எங்கே காட்டு என்று...
நான் சொல்லி விட்டு
நான் பார்த்த பாவத்திற்கா///

கவிதையை பார்த்ததுக்கே இப்படினா, படிச்சிருந்தா ?!! :)

சப்தம்
யுத்தம்
மிச்சம்
சொச்சம்

நல்ல ரைமிங்கா இருக்கே !! :)

//தோற்றுப் போய்தான் நிற்கிறேன்
நிராயுதபாணியாய்!//

போராளி இங்கே தோற்றுத்தான் ஆகவேண்டும்...?!! :))

இயல்பான நடையில் அழகிய மெல்லிய உணர்வுகள் கோர்த்த மிக ரசிக்க வைத்த கவிதை இது !
//கவிதை எழுதுவேன் என்றாய்...
எங்கே காட்டு என்று...
நான் சொல்லி விட்டு
நான் பார்த்த பாவத்திற்கா
என்னை கட்டிக் கைதியாய்
இழுத்துச் செல்கின்றன
உன் வார்த்தைகள்?//

ரசிக்க வைத்த கவிதை.
//சப்தமில்லாமல் சிரிக்கிறாய்;
யுத்தம் இல்லாமல் அடிக்கிறாய்;
மிச்சமில்லாமல் கொல்கிறாய்;
சொச்சமில்லாமல் அழிக்கிறாய்;//


...நிராயுதபாணி உங்களின் காதல் நீண்ட நாள் நீடூழி வாழ வாழ்த்துக்கள்!! :)

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த...