Skip to main content

கஜமுகன்....!




















நிறைய பேருக்கு பிடித்த கடவுள் என்று சொன்னால் அது விநாயகர்தான். கணேசா, கணேசா என்று தலையில் குட்டிக் கொள்வதும், தோப்புக் கரணம் போட்டு வணங்குவதும் என்று என்னதான் செய்தாலும் விநாயகர் எல்லோருக்கும் செல்லப்பிள்ளைதான். எல்லா செயலுக்கும் முன்பு விநாயகப் பெருமானை வணங்கி விட்டுத்தான் வேலைகளை துவக்குகின்றனர்.

பூஜைகள் செய்யும் போது மஞ்சளால் பிடித்து சிறிய பிள்ளையாரை செய்து அதை வணங்கி எல்லாம் சரியாக நடக்க உதவவேண்டும் என்று வேண்டியும் கொள்கிறார்கள். இது மட்டுமல்ல மற்ற எல்லா கடவுள்களின் வடிவங்களையும் விட பிள்ளையாரின் வடிவம் கஜ முகத்தையும் மனித உடலையும் கொண்டிருப்பதால் கூடுதல் ஈர்ப்பு அனைவருக்கும்....ப்ரண்ட்லி காட் என்று கூட சொல்லலாம்.

புராணங்களில் விநாயகர் பற்றி நிறைய கூறியிருப்பார்கள். சரி...அது ஓ.கே.... அதையும் மைண்ட்ல வச்சுக்கோங்க நான் சொல்றதையும் கொஞ்சம் யோசிச்சுக்கோங்க...!

அதாவது....

எதுவுமற்ற பூரணமான சூன்யத்திலிருந்து பிரபஞ்சம் என்ற ஒன்று ஜனிப்பதற்கு முன் வெளிப்பட்ட சப்தம் ஒங்காரம் என்றழைக்கப்படும் அ + உ +ம் என்ற மூன்றின் கூட்டான ஓம் என்னும் நாதம். இந்த சப்தம் தான் ஆதியில் இருந்தது அதாவது முழு முதலில் தோன்றிய ஓங்கார சப்தத்தை நினைவில் கொள்ள கொண்டுவரப்பட்ட ஒரு மெட்டிரியல் தோற்றம்தான் பிள்ளையார். அவரின் முகம் மற்றும் துதிக்கை எலாம் சேர்த்து வைத்துப் பார்த்தால் ஓங்காரத்தை நினைவு படுத்தும்.

இப்போ சொல்லுங்க....எல்லா வேலையும் செய்றதுக்கு முன்னால ஏன் விநாயகரை கும்பிடுறாங்கன்னு? அதாவது முழு முதலாய் ஆதியில் வெளிப்பட்ட ஓங்காரத்துக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு என்னுடைய செயலும் செம்மையாய் நிறைவேற உடன் நிற்க வேண்டும் பெருஞ்சக்தியே அப்டீன்ற ஒரு ரிக்வெஸ்ட் கொடுத்துட்டு அந்த பூஸ்ட்லயே நாம வொர்க் பண்ணிடலாம்.

அடுத்து பெரிய காதுகள், கேள்வி ஞானம் நிறைய வேணும் அப்டீன்றத தெளிவா சொல்றதுக்கான ஒரு சிம்பல். பேசிட்டே இருக்கறவங்களை விட மெளனமா கேக்குறவங்க நிறைய பக்குவமா இருப்பாங்கதானே...> இதைதானே வள்ளுவர் கூட "செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை...." ன்னு கூட சொல்லி இருப்பாங்க....

பெரிய தலை - மிகப்பெரிய கேள்வி ஞானம் இருப்பவர்களின் புத்தி மிகப்பெரியாதாய் இருக்கும் அப்டீன்றத சொல்லாமல் சொல்றதா வச்சுக் கோங்க. (விலங்குகளில் டால்பினுக்கு அடுத்த அறிவாற்றல் கொண்டது யானை)

துதிக்கை - மூச்சு என்பது மிக முக்கியம். நம்மில் நிறைய பேர் சரியாகவே சுவாசிப்பது இல்லை. சுவாசம் நமது எண்ணங்களோடு சம்பந்தப்பட்டது அதனாலதான் கோபமா இருக்கும் போது ஒரு வித சுவாசமும், சந்தோசமா இருக்கும் போது ஒரு வித சுவாசமும், காமத்தில் இருக்கும் போது ஒரு மாதிரியும், காதலில் இருக்கும் போது ஒரு மாதிரியும் சாந்தமா இருக்கும் போது ஒரு மாதிரியும் நம்ம சுவாசம் இருக்கும். (வேணும்னா நீங்க உங்க சுவாசத்தை கவனிச்சுப் பாருங்களேன்..)

இங்கே சுவாசம் என்பதை ஆழமா சுவாசிக்கணும் அப்டீன்னு சொல்றதுக்கு காரணம் இருக்கு. அதாவது ஆழமா சுவாசிக்கும் போது ஆக்ஸிஜன் உடம்புக்குள்ள போய் எல்லா நாடிகளுக்குள்ளும் சீரா பரவி...அவற்றின் இயக்கத்தை முடுக்கி விடுது.

நாடிகள் ஒழுங்கா இயங்கும் போது சீரான இரத்த ஓட்டம் ஏற்படுவதோட நம்ம உடல்ல இருக்குற சுரப்பிகள் எல்லாம் சரியா வேலை செய்ய ஆரம்பிக்கும். மூலாதாரத்துல ஆரம்பிச்சு சகஸ்கரம் வரைக்கும் எல்லா சக்கரங்களும் விழிச்சுக்கணும்னா சுவாசம் சீரா இருக்கணும்.

மிக நீண்ட துதிக்கையினால் சுவாசிக்கும் யானைகள் எல்லாம் ஆழமான சுவாசத்தை மேற்கொள்வதால் பெரும்பாலும் அவை நிதானத்தில் இருக்கின்றன. (மதம் பிடிச்சா என்ன ஆகும்னு கேக்கப்பிடாது...முரண் எல்லாத்துலயும்தான் இருக்கு..)அதனால ஆழமா சுவாசியுங்கன்னு சொல்ற ஒரு சிம்பலா துதிக்கையும்...

அது மட்டுமல்லாமல் முழுக்க, முழுக்க பார்ப்பதை மட்டுமே வைத்து எதையும் நம்பக்கூடாது. காணும் காட்சிகளை மட்டுமே வைத்து உண்மை நிலையை அறிய முடியாது, விசாரித்து தெளிந்து உணர்ந்தே உண்மையை உணர முடியும் (கவனிக்க, உண்மை என்பது அறிவது அல்ல உணர்வது) என்பதை உணர்த்த சிறிய கண்களையும் கொண்டிருக்கிறார் கஜமுகனான விநாயகப் பெருமான்.

விநாயகரை வணங்கும் போது தலையில் குட்டிக்கொள்வது விளையாட்டுக்காக இல்லை அதாவது முன்நெற்றியில் இருக்கும் அமிர்த நாடியை இரண்டு கைகளாலும் தட்டி உசுப்பி விடும் போது அற்புத நினைவாற்றல் நமக்குக் கிடைக்கிறது.

தோப்புக் கரணம் போடுங்கன்னு நமக்குச் சொல்லிக் கொடுக்க ஒரு ஆப்ஜக்ட்டா விநாயக்பெருமானை வச்சு சொல்லிக் கொடுத்துட்டாங்க. நாமளும் காலம் காலமா தோப்புக்கரணம் போட்டுட்டு போய்கிட்டே இருக்கோம். நிறைய பேரு இதை கிண்டல் கூட செஞ்சு இருக்காங்க...

ஆனால்... மேலை நாட்ல இருக்கவங்க எல்லாம் இதை ஆராய்ந்து, இதற்கு பின்னால இருக்குற அறிவியல் பூர்வமான விளைவுகள் என்னவென்று தெளிவா கண்டு பிடிச்சு சொன்னதுக்கு அப்புறம்தான் நம்ம ஆளுகளுக்கு அடடே....இது இப்டியான்னு யோசிக்கத் தோணியிருக்கு.

லாஸ் ஏஞ்சலைச் சேர்ந்த உடற்கூற்று வைத்தியர் எரிக் றொபின்ஸ் (Dr.Eric Robins) தோப்புக்கரணப் பயிற்சியால் மூளையிலுள்ள நரம்புக் கலங்கள் சக்தி பெறுவதாக கூறுகிறார். பரீட்சையில் குறைந்த புள்ளிகளை எடுத்த மாணவன் தோப்புக்கரணப் பயிற்சியின் பின் நல்ல புள்ளிகளைப் பெற்றதாகக் காட்டுகிறார்.

யேல் பல்கலைக்கழக (University of Yale) நரம்பியல் நிபுணர் யூஜினியஸ் ( Dr.Eugenius Aug) அங் இடது கையால் வலது காதையும் வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொள்வதால் அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுவதுடன் மூளைக்கலங்களும் சக்தி பெறுவதாகக் கூறுகிறார்.

சரி அதையெல்லாம் விடுங்க....மண்ணை எடுத்து பிள்ளையார் செஞ்சு அதை மூணு நாள் வச்சு இருந்துட்டு மறுபடியும் கடல்ல கொண்டு போய் ஏன் தூக்கி போடுறாங்க தெரியுமா? எதுவுமே நம்மகிட்ட இருக்கப் போறது இல்லை இந்த வாழ்க்கையில், எல்லாமே ஆர்ப்பாட்டமா வந்து உருவமா வெளிப்பட்டு விட்டு மீண்டும் தன்னுடைய பழைய நிலைக்கே திரும்பி போய் உருவமில்லாம ஒண்ணுமே இல்லாம ஆகிடும் அப்டீன்றத சிம்பாலிக்காச் சொல்லத்தான்...!

அட விநாயகர் சதுர்த்தியும் அதுவுமா ரொம்ப பேசிட்டு இருக்கேன்ல..........போங்க போங்க போய் விநாயகரைக் கும்பிடுங்க.......ஆனா தெளிவா விளங்கிகிட்டு கும்பிடுங்க...!

அனைத்து உறவுகளுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

அப்போ வர்ர்ர்ர்ட்டா!

தேவா. S


Comments

உங்களுக்கும் கஜமுக சதுர்த்தி வாழ்த்துக்கள்!! :)
//எதுவுமே நம்மகிட்ட இருக்கப் போறது இல்லை இந்த வாழ்க்கையில், எல்லாமே ஆர்ப்பாட்டமா வந்து உருவமா வெளிப்பட்டு விட்டு மீண்டும் தன்னுடைய பழைய நிலைக்கே திரும்பி போய் உருவமில்லாம ஒண்ணுமே இல்லாம ஆகிடும் //


...முற்றிலும் உண்மை. பார்ட் பார்ட்-ஆ பிரிச்சு சூப்பர்-ஆ விளக்கம் சொல்லிட்டீங்க.. தேங்க்ஸ். :)
Prabu Krishna said…
அட இவ்ளோ விஷயங்களா...

இந்த அளவுக்கு எல்லாம் நான் யோசித்தது இல்லை அண்ணா. கோவிலுக்கு போனாதானே.
Unknown said…
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
சூப்பர் விளக்கம்.
வாழ்த்துக்கள் தலைவரே.. இந்நேரம் படையல் முடிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.. என் சார்பா இன்னொரு கொழுக்கட்டை எடுத்துக்கங்க..
VELU.G said…
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...