Skip to main content

போராளி....!
















சற்றே ஒதுங்கி நில்லுங்கள்...
எம் ஏகாந்தக் கனவுகளே....!
நிரந்தரமாய் ஓய்வெடுங்கள்
புத்தி உலுக்கும் மாயைகளே...!
நிஜத்தில் எம் முன்...
ஒரு களம் உண்டு...
அங்கே எம் தலை கொய்யும்
தீரத்துடன் சுடும் அக்னியாய்
பல உண்மைகளுமுண்டு...

தூர நில்லுங்கள் வார்த்தைகளே
அவசரமாய் தாளிட்டுக் கொள்ளுங்கள்
எம் எழுதுகோல்களே..
ஏகாந்த உணர்விற்கு என்னை
எடுத்துச் செல்லாதீர் எம் கனவுகளே
என்னை கொஞ்சம்
எதார்த்ததில் நகர விடுங்கள்..!

முழு நிலவினை பார்க்காதீர்
எம் கண்களே...
சுவாசம் நிரப்ப கொஞ்சம்
பிராணன் கொடுத்து
என் மேனி தொடாமல்
ஒதுங்கிச் செல் காற்றே
நான் என் நிதர்சன
போர்க்களத்தில் வாள் வீச வேண்டும்!

சிலாகித்து சிலாகித்து
புல்லரித்து போன உடலைத்
தவிர என்ன கொடுத்து விட்டாய்
மழையே நீ?
நினைவுகளை புரட்டிப் போட்டு
கனவுப் பக்கங்களில்
குதிரையேறி உலகை வலம்
வரச் செய்ததில் என்ன
நிதர்சனத்தைப் படைத்து விட்டாய்
எம் நினைவுகளே...!

என்னை மறந்தே போ..
என் காதலே...!
மயக்கத்தைக் கொடுத்து
தனிமையில் பல நினைவுகள் கொடுத்து
உன்னால் விளைந்தது
சில, பல கவிதைகளும்
உறவென்ற சில சுமைகளும்தானே...
நிஜம் சுட்டெரிக்கும் பொழுதில்
உடன் வரா நீ...
எனைவிட்டு நகர்ந்தே நில்
எப்போதும்..!

என் வியர்வையில்...
நான் குளிக்கிறேன்...
சூட்டில் என் பாதங்களுக்கு
வலுவூட்டுகிறேன்...!
என் இரப்பை சுருங்கிக் கிடக்கையில்
புத்தி எப்படி சிறகு விரிக்கும்...?

அதனால்...

சற்றே ஒதுங்கி நில்லுங்கள்...
எம் ஏகாந்தக் கனவுகளே....!
நிரந்தரமாய் ஓய்வெடுங்கள்
புத்தி உலுக்கும் மாயைகளே...!
நிஜத்தில் எம் முன்...
ஒரு களம் உண்டு...
அங்கே எம் தலை கொய்யும்
தீரத்துடன் சுடும் அக்னியாய்
பல உண்மைகளுமுண்டு...


தேவா. S


Comments

யதார்த்த கவிதை.. பயமா இருக்கு :-)

Popular posts from this blog

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

முரட்டுக் காளை....!

தலைவரை பத்தி எழுத சொல்லிட்டு தம்பி அருண் பாட்டுக்கு போய்ட்டான்....! நாம ஏற்கனவே ரஜினினு சொன்னாலே பத்திகிட்டு எரிவோம்....இதுல பெட்ரோல வேற ஊத்துன எப்டி? ....சும்மா பத்திகிட்டு எரியும்ல..எரிமலை மாதிரி..ஹா...ஹா..ஹா...! தலிவர் படத்த லிஸ்ட் எல்லாம் பண்ண முடியாது.. என்ன பொறுத்த வரைக்கும்....எல்லாமே... நம்பர் 1 தான்...!!! இது எப்டி இருக்கு....ஸ்ட்ரெய்ட்டா மேட்ருக்குள்ள போவமா....இப்டிச் சூடு..... முரட்டுக்காளை (1980) படம் போட்ட கொஞ்ச நேரத்துல நான் பயந்தே போய்ட்டேன்....! ஒரு காளை மாடு முரட்டுத்தனமா நிக்கும் போது.. அத அடக்க சிங்கம் மாதிரி நம்ம சூப்பர் ஸ்டார்.....! என்னோட கவலை எல்லாம் தலிவருக்கு ஒண்ணும் ஆகக்கூடாதுன்னுதான்....அது எப்டி ஆகும் தலைவர் சும்மா பிரிச்சு மேஞ்சு காளைய அடக்குற வரைக்கும் பக்கத்து சீட்ல இருந்த ஆள டேமேஜ் ஆக்கிட்டேன்...ஜு ஜு பி....!எப்பவுமே தலிவர் படம்னா...அப்டிதான்...இஹ் ஹா...ஹா ஹா..! அதுக்கு அப்புறம் வர்ற பாட்டு...நான் சொல்ல தேவயில்ல..உங்க ஹிட் இல்ல எங்க ஹிட் இல்ல.. உலக ஹிட்.... தமிழ் சினிமாவுக்கே பஞ்சர் பாத்த படம்.... ! எங்க ஊர்..(எந்த ஊர்னு கேட்டா ரூட்டு மாறிடும்...ட்ராக்க ...