Skip to main content

வார்த்தைகளற்ற மொழிகள்!


















மொழி - I


மூச்சுக் காற்றின் ஓசை
கேட்கும் தருணங்கள்;
காதோரம் காற்று சொல்லிச்
செல்லும் ரகசியத்தின் கூச்சங்கள்;
கடும் காய்ச்சல் ஓய்ந்து
போன தினத்தின் அயற்சியான
எண்ணமற்ற நினைவுகள்;
விடியலில் எழுந்து மீண்டும்
போர்வை போர்த்திக் கொண்டு
உறங்கத் தொடங்கும் அதிகாலை
பகுதி விழிப்பு நிலையின் ஓரங்கள்;
கூச்சலற்று தனித்தமரும்
தருணங்கள் கொடுக்கும் ஞானங்கள்;

அவள் விழிகளிலிருந்து புறப்பட்டு
என் விழி சேர்கையில் காதலாய்
உருமாறி சிறகு முளைக்க வைக்கும்
பார்வை வீச்சுக்களின் தாக்கங்கள்;
நிலை குலைத்துப் போடும் வாழ்க்கையின்
வலிகள் அழுந்தப் பதிக்கும் தடங்கள்;
கெட்ட சொப்னங்கள் கிழித்து
தாயின் மடி தேடி எழுந்து
கண்ணீரோடு நெஞ்சு கட்டிக் கொண்டு
பால்யத்தை கனவு காணும் இரவுகள்;
லெளகீக துரத்தல்களில் பணத்திற்காய்
பிசாசாய் வேலை செய்யும்
அலுவலக அயற்சிகள் ஏற்றி வைக்கும்
மனச் சுமைகள்; மூளை அழுத்தங்கள்.....

என்று

என் அனுபவித்தல்களின் ஆழங்களில்
நான் மட்டுமே தனியாய்தானிருக்கிறேன்...
என் இருப்பினைச் சுமந்த படி....!

***

மொழி - II

கடந்து போன
ரயிலொன்றின்
தூரத்து சத்தம் சுமந்து
வந்த காற்று..
விட்டுச் செல்கிறது
அடர்த்தியான நிசப்தத்தை!

வெறித்த விழிகளில்
வழிந்தோடும்
தண்டவாளங்கள் சப்தமின்றி
பகிரும் மொழிகளில்
எதிர்ப்படுகின்றன எத்தனையோ
முடிந்து போன பிரயாணங்கள்!


தேவா. S


Comments

என் அனுபவித்தல்களின் ஆழங்களில்
நான் மட்டுமே தனியாய்தானிருக்கிறேன்...
என் இருப்பினைச் சுமந்த படி....!


தண்டவாளங்கள் சப்தமின்றி
பகிரும் மொழிகளில்
எதிர்ப்படுகின்றன எத்தனையோ
முடிந்து போன பிரயாணங்கள்!

இரண்டு கவிதைகளையுமே முடித்த விதம் மிகவும் பிடித்திருந்தது!
இரண்டும் அருமை....

இரண்டாவது ரசிக்க வைத்த்து.

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...