Skip to main content

டிசம்பர் 6....!















மதமேறிப் போன
மிருகங்கள் வடித்து வைத்த
இரணத்தைக் வருடந்தோறும்
கிளறிச் செல்கிறது
இந்த டிசம்பர் 6...!

நம்பிக்கை என்ற
பெயரில் மிருகங்களின்
வெறியாட்டத்தை பொறுத்துக் கொண்ட
தியாக நாளாய் எப்போதும்
இரணங்களை மறைத்துக் கொண்ட
புனிதனாய் புன்னகை செய்கிறது
இந்த டிசம்பர் 6!

கடவுளைத் தேடி
பயணிக்கையில் இடையில்
மனிதன் மிருகமாய் மாறி
சீரழிந்த ஒரு கறுப்பு தினத்தின்
கறையை அழிக்கவே முடியாமல்
இன்னமும் இடிந்தே கிடக்கிறது
என் சகோதரர்களின் நம்பிக்கை!

கடவுளை மனதுக்குள்
வைக்கத் தெரியாதவர்கள்
அரசியலுக்குள் அழைத்தின் கோரமா?
இல்லை...
கடவுளென்றால் யாரென்று அறியாத
விலங்கு மனத்தின் அகோரமா?

விடை தெரியா கேள்வியோடு
விடியலைத் தேடும் மனிதனாய்
மனதுக்குள்ளேயே பிரார்த்திக்கிறேன்...
இறைவா...என்றாவது ஒரு நாள்
மனிதர்களின் மனதில்
பூ பூக்கச் செய்து...
அன்பால் உயிர்த்தெழச் செய்
மனித நேயத்தையும்...
இடிந்து போன நம்பிக்கையையும்....!


தேவா. S


Comments

Mohamed Faaique said…
நன்றி அண்ணா..
அஸ்மா said…
//கடவுளைத் தேடி
பயணிக்கையில் இடையில்
மனிதன் மிருகமாய் மாறி
சீரழிந்த ஒரு கறுப்பு தினத்தின்
கறையை அழிக்கவே முடியாமல்
இன்னமும் இடிந்தே கிடக்கிறது
என் சகோதரர்களின் நம்பிக்கை!//

நடந்த நிகழ்வுகளை தத்ரூபமாய் வெளிக்கொண்டுவரும் வார்த்தைகள்!! மிக்க நன்றி சகோ.
ஆமினா said…
எந்த வரிகளும் இதுவரை மெய்சிலிர்க்க வைத்ததாக எனக்கு தெரியவில்லை.

இந்த வரிகளை கண்டதும் உடல் முழுவதும் இனம்புரியாத உணர்வு சுற்றிக்கொண்டிருப்பது போல் உள்ளது...

வாழ்த்துகள்
Anonymous said…
What happened was a sad instance. However, how long is this day going to be remembered every year, seeding religious fanatism? I would guess that it is better to forget and forgive what happened and move on. We are doing a hater politics between religions by remembering this day.

If demolishing a mosque needs to be answered with bombs to be exploded every year, how many bombs have to explode for the thousands of temples destroyed in Malaysia in the past decade?

By,

A Human (Trying to be), Tamilan, Indian and Hindu (in that order)
ஸலாம் சகோ.தேவா...

//இன்னமும் இடிந்தே கிடக்கிறது
என் சகோதரர்களின் நம்பிக்கை!//
---இல்லை சகோ..!

இதோ இதுபோன்ற மாற்று சமய சகோதரர்களின் பதிவுகளின் மூலம் அந்த நம்பிக்கை துளிர்க்கிறது..!
Jaleela Kamal said…
மிக அருமை/
rishvan said…
Thanks nice.. kavithai... www.rishvan.com
மிக அருமையான வரிகளில் வலிகள் பிரதிபலிக்கின்றன. அருமையான பகிர்வுக்கு நன்றி பங்காளி.

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...