Skip to main content

17M பாரிமுனை டு வடபழனி....!



அந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சரிந்து விட்டது. ஓட்டுனரின் கவனக்குறைவுதான் காரணம் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். விபத்துக்கள் எல்லாம் திட்டம் போட்டு காய்களை நகர்த்தியா நிகழ்கிறது. ஒரு கணத்தில் ஏற்படும் சறுக்கல் அது. இங்கே யாரையும் குற்றம் சொல்ல முடியாது.

17M பேருந்து பாரிமுனையிலிருந்து வடபழனிக்கு நகரும் முன்பு அந்த பேருந்தின் ஓட்டுனர் அந்த பயணத்தின் முடிவில் பணி முடிந்து வீடு திரும்ப திட்டமிட்டு இருக்கலாம். இல்லை அப்போதுதான் வீட்டிலிருந்து வந்த அலை பேசியை எடுத்து பேசி விட்டு பிறகு அழைக்கிறேன் என்று கூறி விட்டு பேருந்தினை நகர்த்தி இருக்கலாம். அவசரமாக பலமுறை வந்த அழைப்பினைக் கண்டு வேறு வழியில்லாமல் அந்த வளைவில் வண்டியை திருப்புகையில் ஒரு அவசரத்தில் அலை பேசியோடு கவனம் சிதறி வண்டியை தடுப்புச் சுவற்றில் மோதி இருக்கலாம்...

ஆமாம் அது நிகழ்ந்து விட்டது..சட்டென்று..! சட்டென்று நிகழ்ந்தால் தானே அது விபத்து...!

தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த அந்த பேருந்தினைப் பார்த்த பொழுது மனம் ஸ்தம்பித்து எதுவுமே கருத்து சொல்ல முடியாமல் முற்றிலுமாய் உள்ளுக்குள் முடங்கிக் கொண்டு தேம்பிக் கொண்டிருந்த போது....

எது கிடைத்தாலும் தத்ததம் தன் முனைப்பினை செய்தியாக்கும் ஆவலுடன் அலையும் மானுடக்கூட்டத்தின் நிலைத்தகவல்கள் சமூக வலைத்தளங்களில்  அலை பாய்ந்து கொண்டிருந்தன. ஆமாம்..செய்திகள் எல்லாம் செய்திகளாகப் போய் விடுகின்றன அந்த செய்தியில் நமக்கும் நமக்கு வேண்டியவர்களுக்கும்  நேரடியான தொடர்பில்லாத போது....!

என் சித்தப்பாவும், பெரியப்பாவும், அத்தையும், தம்பியும் மாமனும்...ஆத்தவும் அப்பாவும்... நண்பர்களும் அந்தப் பேருந்தில் சென்றிருந்தால் அது எனக்கோ அல்லது அப்படியாய் சென்றவரின் உறவுகளுக்கோ அந்த நிகழ்வு வாழ்க்கையின் சோகமாகிப் போகிறது. அந்த பேருந்தில் பயணப் பட்டவர்களின் பிள்ளைகளும், மனைவிகளும், கணவன்களும், சகோதரர்களூம் உறவுகளும்...இவர்களை வழியனுப்பி வைத்திருக்கலாம்...அல்லது வருகைக்காக காத்திருந்து இருக்கலாம்....

யாருக்கு அது பற்றி எல்லாம் கவலை...? பேருந்து கவிழ்ந்தது...ஒரு செய்தி...! 

அதை வாசித்து முதலில் நிறையப் பேருக்கு நாம் பகிர்வதும்,  அதில் இருக்கும் ஓட்டை உடைசல்களை ஆராய்ந்து சரி தவறுகளைப் பற்றி விவாதித்து சட்டாம்பிள்ளைத் தனம் செய்வதுமாய் நமது தினத்தின் சராசரியோடு கொஞ்சம் பரபரப்பாய் பேசித் திரியலாம். போக்குவரத்து காவலர்களின் கண்காணிப்பு போதாது என்றும், வண்டி ஓட்டும் போது செல் போன் பேசுவது தவறு என்றும்....,  பேருந்து பராமரிப்பு சுத்த மோசம் அதனால் அரசுதான் இதற்கு பொறுப்பு என்றும்..., அந்தப் பாலம் சரியில்லை உறுதியாயிருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது என்றும்...

கோணங்கள் மாற்றி நாம் பேசிப் பேசி நமது அறிவு ஜீவித்தனத்தை ஏதோ ஒரு வகையில் வெளிகாட்டலாம்...ஒரு பிரச்சினையும் இல்லை. விவாதிக்கவும், அறிவுரை கூறவும் நமக்கு ஏதோ ஒரு நிகழ்வு அவசிப்பட்டுப் போகிறது அதற்கு ஏற்றார் போல ஏதோ ஒன்று தொடர்ச்சியாய் நடந்து கொண்டும் இருக்கிறது...அவ்வளவுதான்..!

40 பேருக்கு மேல் காயம்பட்டிருப்பதாய் கூறும் அந்த விபத்திற்கு முன்பு வண்டி பாலத்தின் தடுப்புச் சுவற்றை மோதி தலைகீழாக கவிழ ஆரம்பித்த அந்த நொடியில், அத்தனை மனிதர்களின் மனோநிலைகள் எப்படி இருந்திருக்க்கும்...? செய்வறியாது உயிர் போகும் சூழல் உள்ள ஒரு நிலையில் எத்தனை பேருக்கு தத்தம் பிள்ளைகள் பற்றியும் குடும்பம் பற்றியும் கலக்கம் ஏற்பட்டிருக்கும்....

அந்த பேருந்தினுள் நானிருந்தால் என்ன ஆகி இருப்பேன்...? என் தலை உடைந்திருக்குமோ...? கை கால் உடைந்து ஊனனாகி மூலையில் கிடக்கும் வாய்ப்பொன்றை சப்தமில்லாமல் அந்த சம்பவம் கொடுத்து அதனால் என் குடும்பம் வழியற்று சோகத்திற்குள் தூக்கி வீசப்பட்டிருக்குமோ...? கூச்சல்களுக்கும், இரத்தத்துக்கும் நடுவே....தப்பிப் பிழைக்க என்ன வழியென்று எல்லோரும் அங்கும் இங்கும் அலை பாயும் அந்த மரண நொடி.... எப்படி இருந்திருக்கும்...? 

வாழ்க்கை அழகானாது....ஆனால் அவ்வப்போது படு பயங்கரமானதும் கூட...!

இதையெல்லாம் யாரும் யோசித்து பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படி யோசித்துப் பார்க்கவேண்டிய அவசியமுமில்லை. ஏனென்றால் இது நாம் தொடர்புப்படாத ஒரு செய்தி...அவ்வளவுதான்....! 

வாழ்க்கையின் ஓட்டத்தில் நம்மைச் சுற்றி நிகழ்பவைகளை எல்லாம் செய்தியாய்ப் பார்க்கும் ஒரு அரக்க மனோநிலைக்கு நாம் மாறிப்போய் விட்டோம். அந்தப் பேருந்தில் போனவர்களின் உறவுகளாய், சொந்த பந்தங்களாய்,  நண்பர்களாய் நாம் இருந்திருந்தோமானால் என்ன செய்திருப்போம்......?

பேசவும், விமர்சிக்கவும்...ஆராய்ச்சிய செய்யவும் குற்றம் சொல்லவும் வார்த்தைகளின்றி..... ஓ.....கடவுளே.ஏன் இப்படி எல்லாம் நிகழ்கிறது..? என்று இல்லாத ஒரு கடவுளை நோக்கி மண்டியிட்டு...  கண்ணீர் விடுவோம்தானே....!

ஆமாம்...

திட்டமிட்டு, கவனமுடன் இருக்கும் போது நிகழ்வது எப்படி விபத்தாகும்...? கவனக் குறைவில் எதிர்பாராமல் நிகழ்வதுதானே விபத்து...! 

அந்தப் பேருந்தில் சென்ற அத்தனை பேரும் நலம் பெற்று வரவும்..., அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் வலுவாய் திடமாய் இருந்து இந்த சூழலை எதிர் கொண்டு....மீண்டு வரவும் இல்லாத ஒரு கடவுளை பார்த்து வேண்டி நானும் கேட்கிறேன்....

ஓ.....கடவுளே.....ஏன் இப்படி எல்லாம் நிகழ்கிறது...?!!!!!


தேவா.  S

Comments

அந்தப் பேருந்தில் சென்ற அத்தனை பேரும் நலம் பெற்று வரவும்..., அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் வலுவாய் திடமாய் இருந்து இந்த சூழலை எதிர் கொண்டு....மீண்டு வரவும் கடவுளை பார்த்து வேண்டி நானும் கேட்கிறேன்....
நாமும் பிரார்த்திப்போம்...எனக்கும் எப்பவாவது இது போல தோன்றும்.நாம் சம்பந்த படாத வரை இது ஒரு நிகழ்வே
Kousalya Raj said…
//தலைகீழாக கவிழ ஆரம்பித்த அந்த நொடியில், அத்தனை மனிதர்களின் மனோநிலைகள் எப்படி இருந்திருக்க்கும்...?//

விபத்து நிகழ்ந்ததை டிவியில் பார்த்தபோது எனக்கு இப்படி தோணியது, கூடவே மனதும் நடுங்க தொடங்கிவிட்டது. அந்த மரண நொடியை வாழ்நாள் முழுதும் அவர்களால் மறக்க இயலாது. :(

ஆனால் வேடிக்கை பார்க்கும் இடத்தில் இருக்கும் நமக்கு இது ஒரு செய்தி. நாளை வேறு ஒன்று வந்துவிட்டால் இது மறந்தே போய்விடும். உண்மைதான்.

நடந்த விபத்தை குறித்த உணர்வை உடனே பதிந்துவிட்டீர்கள். வருத்தத்தை,சஞ்சலத்தை எழுதிவிட்டால் ஓரளவு அமைதி அடைந்துவிடும் மனம்.

விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் மனம், உடல் இரண்டும் பூரண குணம் பெற்று நலமடைய இறைவனை வேண்டுகிறேன்.
Unknown said…
Tamilpanel.com தளத்தின் மூலம் உங்கள் இணையத்திற்கு , மிக எளிதான முறையில் நூற்றுக் கணக்கான வாசகர்களை எளிதில் பெறலாம் .இதில் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் நீங்கள் , ஓட்டுப் பட்டையோ , வாக்குகளோ அல்லது உங்கள் தளத்தின் செய்திகள் முன்னணி இடுகையாகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை .

எங்கள் இணையத்தின் ஓர் விட்ஜெட்டை மட்டும் உங்கள் இணையத்தில் இணைத்து விட்டால் போதும் . எந்த ஓட்டும் இல்லாமலே உங்களுக்கு எம் இணையத்தின் மூலம் டிராபிக் கிடைக்கும்


விட்ஜெட்டை இணைப்பது பற்றி அறிய



www.tamilpanel.com







நன்றி
நலம்பெற எங்கள் பிரார்த்தனைகள்..

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...