Skip to main content

17M பாரிமுனை டு வடபழனி....!



அந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சரிந்து விட்டது. ஓட்டுனரின் கவனக்குறைவுதான் காரணம் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். விபத்துக்கள் எல்லாம் திட்டம் போட்டு காய்களை நகர்த்தியா நிகழ்கிறது. ஒரு கணத்தில் ஏற்படும் சறுக்கல் அது. இங்கே யாரையும் குற்றம் சொல்ல முடியாது.

17M பேருந்து பாரிமுனையிலிருந்து வடபழனிக்கு நகரும் முன்பு அந்த பேருந்தின் ஓட்டுனர் அந்த பயணத்தின் முடிவில் பணி முடிந்து வீடு திரும்ப திட்டமிட்டு இருக்கலாம். இல்லை அப்போதுதான் வீட்டிலிருந்து வந்த அலை பேசியை எடுத்து பேசி விட்டு பிறகு அழைக்கிறேன் என்று கூறி விட்டு பேருந்தினை நகர்த்தி இருக்கலாம். அவசரமாக பலமுறை வந்த அழைப்பினைக் கண்டு வேறு வழியில்லாமல் அந்த வளைவில் வண்டியை திருப்புகையில் ஒரு அவசரத்தில் அலை பேசியோடு கவனம் சிதறி வண்டியை தடுப்புச் சுவற்றில் மோதி இருக்கலாம்...

ஆமாம் அது நிகழ்ந்து விட்டது..சட்டென்று..! சட்டென்று நிகழ்ந்தால் தானே அது விபத்து...!

தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த அந்த பேருந்தினைப் பார்த்த பொழுது மனம் ஸ்தம்பித்து எதுவுமே கருத்து சொல்ல முடியாமல் முற்றிலுமாய் உள்ளுக்குள் முடங்கிக் கொண்டு தேம்பிக் கொண்டிருந்த போது....

எது கிடைத்தாலும் தத்ததம் தன் முனைப்பினை செய்தியாக்கும் ஆவலுடன் அலையும் மானுடக்கூட்டத்தின் நிலைத்தகவல்கள் சமூக வலைத்தளங்களில்  அலை பாய்ந்து கொண்டிருந்தன. ஆமாம்..செய்திகள் எல்லாம் செய்திகளாகப் போய் விடுகின்றன அந்த செய்தியில் நமக்கும் நமக்கு வேண்டியவர்களுக்கும்  நேரடியான தொடர்பில்லாத போது....!

என் சித்தப்பாவும், பெரியப்பாவும், அத்தையும், தம்பியும் மாமனும்...ஆத்தவும் அப்பாவும்... நண்பர்களும் அந்தப் பேருந்தில் சென்றிருந்தால் அது எனக்கோ அல்லது அப்படியாய் சென்றவரின் உறவுகளுக்கோ அந்த நிகழ்வு வாழ்க்கையின் சோகமாகிப் போகிறது. அந்த பேருந்தில் பயணப் பட்டவர்களின் பிள்ளைகளும், மனைவிகளும், கணவன்களும், சகோதரர்களூம் உறவுகளும்...இவர்களை வழியனுப்பி வைத்திருக்கலாம்...அல்லது வருகைக்காக காத்திருந்து இருக்கலாம்....

யாருக்கு அது பற்றி எல்லாம் கவலை...? பேருந்து கவிழ்ந்தது...ஒரு செய்தி...! 

அதை வாசித்து முதலில் நிறையப் பேருக்கு நாம் பகிர்வதும்,  அதில் இருக்கும் ஓட்டை உடைசல்களை ஆராய்ந்து சரி தவறுகளைப் பற்றி விவாதித்து சட்டாம்பிள்ளைத் தனம் செய்வதுமாய் நமது தினத்தின் சராசரியோடு கொஞ்சம் பரபரப்பாய் பேசித் திரியலாம். போக்குவரத்து காவலர்களின் கண்காணிப்பு போதாது என்றும், வண்டி ஓட்டும் போது செல் போன் பேசுவது தவறு என்றும்....,  பேருந்து பராமரிப்பு சுத்த மோசம் அதனால் அரசுதான் இதற்கு பொறுப்பு என்றும்..., அந்தப் பாலம் சரியில்லை உறுதியாயிருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது என்றும்...

கோணங்கள் மாற்றி நாம் பேசிப் பேசி நமது அறிவு ஜீவித்தனத்தை ஏதோ ஒரு வகையில் வெளிகாட்டலாம்...ஒரு பிரச்சினையும் இல்லை. விவாதிக்கவும், அறிவுரை கூறவும் நமக்கு ஏதோ ஒரு நிகழ்வு அவசிப்பட்டுப் போகிறது அதற்கு ஏற்றார் போல ஏதோ ஒன்று தொடர்ச்சியாய் நடந்து கொண்டும் இருக்கிறது...அவ்வளவுதான்..!

40 பேருக்கு மேல் காயம்பட்டிருப்பதாய் கூறும் அந்த விபத்திற்கு முன்பு வண்டி பாலத்தின் தடுப்புச் சுவற்றை மோதி தலைகீழாக கவிழ ஆரம்பித்த அந்த நொடியில், அத்தனை மனிதர்களின் மனோநிலைகள் எப்படி இருந்திருக்க்கும்...? செய்வறியாது உயிர் போகும் சூழல் உள்ள ஒரு நிலையில் எத்தனை பேருக்கு தத்தம் பிள்ளைகள் பற்றியும் குடும்பம் பற்றியும் கலக்கம் ஏற்பட்டிருக்கும்....

அந்த பேருந்தினுள் நானிருந்தால் என்ன ஆகி இருப்பேன்...? என் தலை உடைந்திருக்குமோ...? கை கால் உடைந்து ஊனனாகி மூலையில் கிடக்கும் வாய்ப்பொன்றை சப்தமில்லாமல் அந்த சம்பவம் கொடுத்து அதனால் என் குடும்பம் வழியற்று சோகத்திற்குள் தூக்கி வீசப்பட்டிருக்குமோ...? கூச்சல்களுக்கும், இரத்தத்துக்கும் நடுவே....தப்பிப் பிழைக்க என்ன வழியென்று எல்லோரும் அங்கும் இங்கும் அலை பாயும் அந்த மரண நொடி.... எப்படி இருந்திருக்கும்...? 

வாழ்க்கை அழகானாது....ஆனால் அவ்வப்போது படு பயங்கரமானதும் கூட...!

இதையெல்லாம் யாரும் யோசித்து பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படி யோசித்துப் பார்க்கவேண்டிய அவசியமுமில்லை. ஏனென்றால் இது நாம் தொடர்புப்படாத ஒரு செய்தி...அவ்வளவுதான்....! 

வாழ்க்கையின் ஓட்டத்தில் நம்மைச் சுற்றி நிகழ்பவைகளை எல்லாம் செய்தியாய்ப் பார்க்கும் ஒரு அரக்க மனோநிலைக்கு நாம் மாறிப்போய் விட்டோம். அந்தப் பேருந்தில் போனவர்களின் உறவுகளாய், சொந்த பந்தங்களாய்,  நண்பர்களாய் நாம் இருந்திருந்தோமானால் என்ன செய்திருப்போம்......?

பேசவும், விமர்சிக்கவும்...ஆராய்ச்சிய செய்யவும் குற்றம் சொல்லவும் வார்த்தைகளின்றி..... ஓ.....கடவுளே.ஏன் இப்படி எல்லாம் நிகழ்கிறது..? என்று இல்லாத ஒரு கடவுளை நோக்கி மண்டியிட்டு...  கண்ணீர் விடுவோம்தானே....!

ஆமாம்...

திட்டமிட்டு, கவனமுடன் இருக்கும் போது நிகழ்வது எப்படி விபத்தாகும்...? கவனக் குறைவில் எதிர்பாராமல் நிகழ்வதுதானே விபத்து...! 

அந்தப் பேருந்தில் சென்ற அத்தனை பேரும் நலம் பெற்று வரவும்..., அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் வலுவாய் திடமாய் இருந்து இந்த சூழலை எதிர் கொண்டு....மீண்டு வரவும் இல்லாத ஒரு கடவுளை பார்த்து வேண்டி நானும் கேட்கிறேன்....

ஓ.....கடவுளே.....ஏன் இப்படி எல்லாம் நிகழ்கிறது...?!!!!!


தேவா.  S

Comments

அந்தப் பேருந்தில் சென்ற அத்தனை பேரும் நலம் பெற்று வரவும்..., அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் வலுவாய் திடமாய் இருந்து இந்த சூழலை எதிர் கொண்டு....மீண்டு வரவும் கடவுளை பார்த்து வேண்டி நானும் கேட்கிறேன்....
நாமும் பிரார்த்திப்போம்...எனக்கும் எப்பவாவது இது போல தோன்றும்.நாம் சம்பந்த படாத வரை இது ஒரு நிகழ்வே
Kousalya Raj said…
//தலைகீழாக கவிழ ஆரம்பித்த அந்த நொடியில், அத்தனை மனிதர்களின் மனோநிலைகள் எப்படி இருந்திருக்க்கும்...?//

விபத்து நிகழ்ந்ததை டிவியில் பார்த்தபோது எனக்கு இப்படி தோணியது, கூடவே மனதும் நடுங்க தொடங்கிவிட்டது. அந்த மரண நொடியை வாழ்நாள் முழுதும் அவர்களால் மறக்க இயலாது. :(

ஆனால் வேடிக்கை பார்க்கும் இடத்தில் இருக்கும் நமக்கு இது ஒரு செய்தி. நாளை வேறு ஒன்று வந்துவிட்டால் இது மறந்தே போய்விடும். உண்மைதான்.

நடந்த விபத்தை குறித்த உணர்வை உடனே பதிந்துவிட்டீர்கள். வருத்தத்தை,சஞ்சலத்தை எழுதிவிட்டால் ஓரளவு அமைதி அடைந்துவிடும் மனம்.

விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் மனம், உடல் இரண்டும் பூரண குணம் பெற்று நலமடைய இறைவனை வேண்டுகிறேன்.
Unknown said…
Tamilpanel.com தளத்தின் மூலம் உங்கள் இணையத்திற்கு , மிக எளிதான முறையில் நூற்றுக் கணக்கான வாசகர்களை எளிதில் பெறலாம் .இதில் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் நீங்கள் , ஓட்டுப் பட்டையோ , வாக்குகளோ அல்லது உங்கள் தளத்தின் செய்திகள் முன்னணி இடுகையாகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை .

எங்கள் இணையத்தின் ஓர் விட்ஜெட்டை மட்டும் உங்கள் இணையத்தில் இணைத்து விட்டால் போதும் . எந்த ஓட்டும் இல்லாமலே உங்களுக்கு எம் இணையத்தின் மூலம் டிராபிக் கிடைக்கும்


விட்ஜெட்டை இணைப்பது பற்றி அறிய



www.tamilpanel.com







நன்றி
நலம்பெற எங்கள் பிரார்த்தனைகள்..

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...