Skip to main content

சிறகடிக்கிறேன்...!



எங்கோ அழுது கொண்டிருக்கும்
ஒரு தூரத்து புல்லாங்குழலிலிருந்து
வழிந்தோடும் இசையின் அதிர்வுகளில்
படிந்திருக்கும் கரிக்கும் உப்பு
என் கண்ணீரிலிருந்து களவாடப்பட்டிருக்கலாம்!

முள்ளுக்குள் சிக்கிக் கொண்ட பட்டாம் பூச்சியாய்
சிறகசைக்க அசைக்க ரணப்பட்டுப் போகும்
வாழ்க்கையின் கணங்கள் அவ்வப்போது
அன்றொருநாள் புத்தியில் ஸ்தாபிக்கப்பட்ட
நரகத்தின் நெருக்கடியோடு
மூச்சு முட்ட வைக்கிறது;

விதிமுறைகளை உடைத்து போட்ட
உலகத்தின் உச்ச காதலோடு
வலிகளை வாளேந்தும் போராளியாய்
நொறுக்கும் உத்வேகத்தில்
ஒரு பயங்கர கனவொன்றில்
நான் முடவனாயிருந்தேன்..!

புள்ளியாய் இருந்த ஒரு
நெருப்புத் துளைக்குள் உள் நுழைந்து
தலை குப்புற நான் விழுந்து கிடக்கும்
வெளிச்சக்காட்டில் முழு வெளிச்சமும்
நானாய் பரவி இருக்கையில்
எங்கிருந்தோ பறந்து வந்த
அவளின் முகமொத்த ஒரு முகமூடி
எனை மீட்டெடுத்த நினைவுகளால்
முளைத்த சிறகுகள் கொண்டு
மீண்டும் சிறகடிக்கிறேன்...தொலைந்து போன
என் காதலை(லியை)த் தேடி...!


தேவா. S


Comments

Anonymous said…
Romba kastapattu purinjikira maathiri iruku deva... vaarthaigal innum elimaiyaaga irunthaal nandru.. keep posting..

raaga
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.
ஹேமா said…
//அவளின் முகமொத்த ஒரு முகமூடி
எனை மீட்டெடுத்த நினைவுகளால்
முளைத்த சிறகுகள் கொண்டு
மீண்டும் சிறகடிக்கிறேன்...தொலைந்து போன
என் காதலை(லியை)த் தேடி...!//

தொலைக்க முடியாதா முகங்கள் எத்தனையோ இருந்தும் காதலில் மட்டும்தான் இத்தனை அவஸ்தை !
vimalanperali said…
அவஸ்தையை வெளிப்படுதுகிற கனமான வரிகள்.நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...