Skip to main content

அப்துல் கலாம் ஜனாதிபதி ஆக வேண்டியதில்லை....!




இது அநீதிகளின் அரசாட்சி நடக்கும் நாடாய் போய் விட்டது. மனித நேயத்தை மறந்த மதவாதிகளின் கூட்டம் சேர்ந்திருக்கும் கூடாரமாய் போய் விட்டது. லஞ்சத்திலும் ஊழலிலும் ஊறிப் போய் கிடக்கும் அரசியல்வாதிகளின் குவியலாய் போய் விட்ட ஒரு சந்தையாகி விட்டது. பொருளாதார வளர்ச்சியை அதாள பாதாளத்துக்குத் தள்ளி விட்டு கையடக்க கணிணியில் உலக அரசியலைப் பேசும் மேதவிகளின் பூமியாய் மாறிப்போய் விட்டது......

இப்படியான தேசத்தில் அப்துல் கலாம் போன்ற அறிஞர்கள், மதத்தை கடந்த புனிதர்கள், மனித நேயம் கொண்ட புருசர்கள் ஏன் நாட்டின் முதன்மைக் குடிமகனாக வரவேண்டும்...? 

அது இந்த தேசத்துக் கட்டமைப்புக்கு முரணாணது அல்லவா? இந்த தேசத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி என்னும் ஆதிக்க சக்திக்கும் அந்தக் கட்சியை ஆதரிக்கும் அல்லக் கைகளுக்கும் எதிரானது அல்லவா? பேய்கள் அரசாளும் போது சத்தியம் எப்படி தலைமை ஏற்க முடியும்... அதனால்...

பிரணாப் முகர்ஜி என்னும் பெருச்சாளியே இந்த தேசத்தின் அடையாளமாகட்டும்...!

அக்னிச் சிறகுகளை உணர்வோடு வாசித்திருக்கும் ஒவ்வொரு தேசத்து குடிமகனுக்கும் அப்துல்கலாம் அன்னியமானவர் அல்ல. வாழ்க்கையின் அடித்தட்டில் இருந்து மேலேறி தன் சுய முயற்சியால் தேசத்தின் தலைமை விஞ்ஞானி என்னும் இடத்தை எட்டிப் பிடித்த ஒரு புண்ணிய ஆத்மா அது. அவர் ஒரு போதும் தன்னை ஏதோ ஒரு அரசியல் கட்சிக்கு சொந்தமானவராகவும், அல்லது ஒரு இனத்துக்கு மட்டுமே உரிமை கொண்டவராகவும், ஒரு மதத்தின் அடையாளமாகவும் வெளிப்படுத்திக் கொண்டதில்லை. கொள்ளவும் மாட்டார்.

தன்னை மனிதனாக உணர்ந்த ஒருவன் சூழலை உள்வாங்கி எல்லா மானுடர்க்கும் சரியான் ஒரு கருத்தைதான் பகிர்வான். அதுவும் அப்துல் கலாம் போன்ற அடிப்படை ஞானவான்கள் ஒரு போது தன்னை ஒரு மதத்துக்கு சொந்தமானவராக காட்டிக் கொள்வது இல்லை. இவர்கள் எங்கே நன்மை இருக்கிறதோ அதை எப்போதும் ஆதரிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். உணர்ச்சி வசப்பட்டு கருத்தினை தெரிவித்து ஏதோ ஒரு சாராரை சாந்தப்படுத்தி தன் பக்கம் இழுத்து வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் புறம்போக்குத்தனத்துக்கு அப்துல் கலாம்கள் எப்போதும் எதிராய்த்தான் இருந்திருக்கிறார்கள்.

வெற்று அறிக்கைகள் விட்டு கவர்ச்சிகர அரசியல் செய்பவர்களையும், மேடைக்கு மேடை வார்த்தைகளை மாற்றிப் போட்டு அலங்காரமாய் பேசுபவர்களையும் பார்த்து, பார்த்து ரசித்து ரசித்து ஆதரித்து மண்ணாய்ப் போய்க் கொண்டிருக்கும் என் இந்திய தேசமே......! உனக்கு அப்துல் கலாம்கள் வேண்டாம்...,

ஊழல்களில் மூழ்கித் திளைத்து, இன அழிப்பு செய்த ஒரு தேசத்துக்கு கால் பிடித்து விட்டு பல உயிர்களைப் பறிக்க காரணமாய் இருந்த அழுகிய மூளைகள் போதும் இங்கே முதன்மைக் குடிமகன்களாக....

இந்த தேசம் சரியாக எதிர் திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது எம் மக்களே...! ஆங்காங்கே இருக்கும் ஓரிரு சுடர் விடும் அரசியல் தலைவர்களைத் தவிர சர்வ நிச்சயமாய் இது அநீதிகளின் கூடாரமாய்ப் போய் விட்டது....! இங்கே பிராணப்பை ஆதரிக்கும் அத்தனை மனிதர்களும் மனித நேயத்தோடு தத்தம் நெஞ்சிலே கை வைத்து சொல்லட்டும்....

இந்திய தேசத்தின் ஜனாதிபதி பதவிக்கு அப்துல் கலாம் தகுதியானவரா? இல்லை பிராணப் முகர்ஜி தகுதியானவரா?

அப்துல் கலாம் மீது மதவாதிகள் வைக்கும் ஒரு குற்றச்சாட்டு குஜராத் கலவரத்தின் போது அவர்தானே குடியரசுத் தலைவர் அவர் ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்பது....! இந்திய தேசத்தின் முதன்மைக் குடிமகனாக மட்டும் அல்ல, ஒரு இஸ்லாமியர் என்பதால் மட்டுமல்ல.... ஒரு சாதாரண மனிதராகவே கலாம் போன்றவர்கள் எந்த ஒரு மத வன்முறைக்கும் எதிரானவர்கள்தான் என்பதை ஏன் நீங்கள் இன்னமும் உணரவில்லை...?

வெட்ட வெளி மைதானத்திலே ஒரு பந்தல் அமைத்து கூட்டம் கூட்டி உங்கள் மதத்தவரை ஒன்று சேர்த்து ஒரு கூட்டம் போட எத்தனை பிரச்சினைகளை, மன வேறுபாடுகளை நீங்கள் சந்திக்கிறீர்கள்...? நிர்வாகிக்க எவ்வளவு பிராயசைப்பட்டு நிற்கிறீர்கள்...?

ஒரு ஜனாதிபதியாய் இருந்து கொண்டு அதுவும் பல மதம், மொழி, இனம் கொண்டவர்கள் மத்தியில் ஒரு கருத்து சொல்வது என்பது எவ்வளவு கூர்மையான விசயம் என்று எப்போதாவது நீங்கள் யோசித்துப் பார்த்து இருக்கிறீர்களா? ஒரு தீயை அணைக்கிறேன் பேர்வழி என்று ஊரைப் பற்ற வைப்பவன் முட்டாள்.....

ஆனால் அப்துல் கலாம் பேரறிவாளி.... ! அவருக்கு சூழல்களை எப்படி கடந்து போவது என்று தெரியும்....!

அவர் அரசியலுக்கு சரியாய் வரமாட்டார் என்று சொல்லும் அரசியல் மேதாவிகளே.....! இந்த தேசத்தில் அரசியல் செய்யும் அத்தனை பேரும் புண்ணிய ஆத்மாக்கள்தானா? அரசியல் என்றால் அடுத்தவனை கவிழ்த்து தான் மேலே வருவது என்று இங்கே பழகிப்போன நாறிப்போன ஒரு நடைமுறைதான் அரசியல் எனில்....

அப்துல் கலாம்கள் இந்த அரசியலுக்கு எதிரானவர்களே...!

எந்த சூழலிலும் தனது பொறுப்பையும், பதவியையும் சூழலையும், மனித நேயத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு கவனமாய் நடந்து கொள்ளும் ஒரு அக்னி மனிதன் அப்துல் கலாம்....! கூடங்குளம் பிரச்சினையில் அவர் கருத்து தெரிவித்தது ஒரு பிரேதசவாதியாகவோ அல்லது அரசியல்வாதியாகவோ அல்ல.. அது....ஒரு அறிவியல் விஞ்ஞானியின் பார்வை என்பதை எப்படி மறந்து போகீறீர்கள் எம் மக்களே...!

அப்துல் கலம் ஒரு வைரம். சம காலத்தில் எந்த ஒரு குறுகிய அடைப்புக்குள்ளும் தன்னை அடைத்துக் கொள்ளாத ஒரு புயல். இந்த தேசத்தின் விடியல் இன்றைய இளையர்கள் கையில் என்று உணர்ந்த ஒரு மேதை.....

நீங்கள் அவரை முதன்மைக் குடிமகனாக்கிப் பார்க்கும் யோக்கியதைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதுதான் உண்மை....! தயவு செய்து... அவரைப் பற்றிய விமர்சனங்களை நிறுத்தி விட்டு....அவரைப் பற்றி இன்னும் அறிந்து கொண்டு ஒரு மானுடராய் அவரைப் போற்றுங்கள்....!

இந்த தேசம் சுதந்திரத்துக்குப் பிறகு அரசியல்வாதிகளால் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. தேசம் முன்னேறியிருக்கிறது, வல்லரசாகப் போகிறது என்று எந்த ஒரு சாமனியனும் இங்கே சொல்வது கிடையாது......அப்படியாய் சொல்வது எல்லாம் அரசியல்வாதிகள் மட்டுமே....!

அநீதியின் ஆட்டத்திற்கு சத்தியம் தலைமை ஏற்பது முரணான விசயம்தான்....

ஆதலால்.....அப்துல்கலாம் போன்ற அறிஞர்கள்....இந்த தேசத்தின் முதன்மைக் குடிமகன்களாக வேண்டாம்....அதற்கு இந்த தேசத்திற்கு தகுதி இல்லை.


தேவா. S



Comments

// இந்த தேசத்தில் அரசியல் செய்யும் அத்தனை பேரும் புண்ணிய ஆத்மாக்கள்தானா?///

உங்கள் கேள்விக்கு சரியான பதில் உங்களாலேயே கொடுக்கப்பட்டுள்ளது!

"அவர் அரசியலுக்கு சரியாய் வரமாட்டார் என்று சொல்லும் அரசியல் மேதாவிகளே.....!அரசியல் என்றால் அடுத்தவனை கவிழ்த்து தான் மேலே வருவது என்று இங்கே பழகிப்போன நாறிப்போன ஒரு நடைமுறைதான் அரசியல்.."

வாழ்க ஜனநாயகம்!
அநீதியின் ஆட்டத்திற்கு சத்தியம் தலைமை ஏற்பது முரணான விசயம்தான்....

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...