Skip to main content

இசையோடு இசையாக...தொகுப்பு 8!


























ஓடி வந்து உன்னைச் சந்திக்க தேக்கி வைத்திருக்கும் ஆசைகள்தான் எத்தனை எத்தனை...!!! என் வாழ்க்கையின் சொர்க்க நிமிடங்கள் எல்லாம் உன் நினைவுகளால்தான் நிரம்பிப் போயிருக்கிறது. காதலைச் சொல்ல வார்த்தைகள் தேவையில்லை என்று நான் என் விழிகளால் உனக்கு சொன்ன செய்தியை வாங்கிக் கொண்டு புன்னகைத்த உன் விழிகளை விட ஒப்பற்ற கவிதையொன்றை இது வரையில் நான்  வாசித்திருக்கவில்லை. ப்ரியங்களைச் சுமந்த ஒரு கவிதை ஒன்றை உனக்காக எழுதிவிடத் துடிக்கும் என்  உணர்வுகள் எல்லாம் தோல்வியில் உன் முன் மண்டியிட்டு உன் பாதங்களை முத்தமிட்டு மெளனத்தையே கவிதையாக உன் பாதங்களில் சமர்ப்பிக்கின்றன.

உடலைத் தொலைத்து விட்டு உணர்வுகளோடு வாழும் வாழ்க்கை ஒன்றை உன்னோடு வாழ்ந்து தொலைப்பதில் இருக்கும் செல்லமான அவஸ்தையை எப்படி நான் வர்த்தைகளுக்குள் கொண்டு வருவது.....? எதுவுமே பேசாமல் உன் விழிகளைப் பார்த்துக் கொண்டே நான் அடைந்த பரவச நிலையை எப்படி மொழி பெயர்ப்பது? காதலென்ற அற்புத  உணர்வை ஒரு சிற்பியாய் நான் செதுக்குகையில் கிடைக்கும் அற்புத சிலையை ஒத்த வார்த்தைக் கோர்வைகள் எல்லாம் மிக சாதாரணமானவைகள்தான்....

இளஞ்சூரியனின் கதிர்களை உடலெல்லாம் வாங்கிக் கொண்டு ஒரு கடற்கரை மாலையில் உன்னோடு கவிதையாய்ப் பேசிக் கிடக்கும் சுகத்தினை உணர்ந்த எனக்கு சொர்க்கம் கூட நரகம்தான்...! ஸ்பரிசங்களில் தொலையும் காதலை நீ தூரங்களிலேயே வாழ வைப்பதுதான் எனக்கு மிகவும் பிடித்தமானதாய் இருக்கிறது என்பதாலேயே உன் தூரங்களை நீ அதிகப்படுத்திக் கொள்வது இன்னும் அழகானது....

உதடுகள் சேர்க்கும் ஸ்தூல முத்தங்கள் கூட்டிச் செல்லும் காமம் காதலை கொன்று போட்டு பிரபஞ்ச நகர்விற்குப் பயன் படும் கருவிகளாய் நம்மை மாற்றிவிடுமென்றறிந்துதான் நாம் கருவிகளாய் மாறப் பிறந்தவர்கள் இல்லை கர்த்தாவின் மூலத்தை அறியப்பிறந்தவர்கள் என்று நீ சொன்ன போதுதான் நான் மோட்சமடைந்தேன் என்பது உனக்குத் தெரியுமா? மோட்சமென்பது உடல் மறந்து ஒரு பஞ்சு பறப்பது போல இலக்குகளின்றி காற்றில்  தாவித் தாவி பறப்பது போன்றதென்று உன்னால் தானே உணர்ந்தேன்..

ஒரு நாள் அனிச்சையாய் உன் கை கோர்த்து நடந்த அந்த நேரத்தில் காலம் நின்று போக, ஐன்ஸ்டீன் பிராயசைப்பட்டு கண்டு கொண்டு பெரும் அறிவியல் சாதனையாய்ச் சொன்ன காலம் பற்றிய சார்புக் கொள்கையை நாம் அசாதரணமாய் கடந்து சென்றோம்...என்பதை நீ இல்லாதபோது நீண்டு கொண்டே சென்று தன் கோரப்பற்களைக் காட்டிய காலம் உறுதி செய்தது. கவிதைகள் செய்வது ஒரு ஆண் பெண்ணைக் கவர்வதற்காக மட்டும் அல்ல.. ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தான் இருப்பதை உணர்வதற்காக என்று நீ சொன்ன நிமிடத்தில் நான் எழுதிய வார்த்தைகள் எல்லாம் உயிர் பெற்று எழுந்து உனக்காய் ஒரு நடனமாடியேதான் முடிந்திருந்தன...

இரவுகளைக் கொளுத்திக் கொளுத்தி நான் பற்ற வைக்கும் பகல்களில் உன் நினைவுகள் எல்லாம் குளிர்ச்சியாய் என்னைத்  தழுவ உதயமாகும் அந்தி நேரத்தில்தான் எனக்குள் பூக்கும் உன் நினைவுகள் இரவைத் தருவித்து விடுகின்றன. உன்னோடான நிமிடங்கள் அற்புதமென்றால் நீயில்லாத பொழுதுகள் அதி அற்புதமாகிப் போய்விடுவதால்தான்...

நான் காற்றைக் கொஞ்சம் நிற்கச் சொன்னேன், பூப்பறித்துக் கோர்க்கச் சொன்னேன்... ஓடிவந்து உன்னைச் சந்திக்க, மெத்தை ஒன்று தைக்கச் சொன்னேன், மேகம் அள்ளி வைக்கச் சொன்னேன், கண்ணை மூடி உன்னைச் சிந்திக்க....

நீதானே என் பொன் வசந்தெமென்று காலங்கள் கடந்தும்  காதல் பேசும் இசை ராட்சசனின் ஆளுமையில் சிக்குண்டுப் போய் என்னிடமிருந்து வார்த்தைகள் பிறந்து வந்த கதையை நான் சொல்லித்தான் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமா.. என்ன? காதலின் இசை வடிவத்தை ப்ரியங்களோடு அள்ளிப் பருகும் உங்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்லிக் கொண்டு நான் தற்காலிகமாக வாய் மூடிக் கொள்வதுதானே நாகரீகம்...!!!!

இனி...காதலை இசையாய் பருகுங்கள்....!


'  நேரில் பார்த்து பேசும் காதல் ஊரில் உண்டு ஏராளம்...
நெஞ்சில் பார்த்து பேசும் காதல் நின்று வாழும் எந்நாளும்.
தள்ளி தள்ளி போனாலும்
 உன்னை எண்ணி வாழும்
ஒரு ஏழை இதயம் நெஞ்சத்தை பாரடி..
தங்க மெத்தை போட்டாலும்
உன் நினைவில் என்றும் தூக்கம் இல்லை
ஏன் என்று சொல்லடி…
சாத்தி வைத்த வீட்டில் தீபம் ஏற்றி வைக்க நீ வா...
மீதி வைத்த கனவை எல்லாம் பேசி தீர்க்கலாம்.. .. '


தேவா. S


Comments

ஆத்மா said…
அருமையான பதிவு....
பொன்வசந்தம் பொன் வசந்தம்தான்
காதல் பூ மணம்பரப்பி நிற்கின்றது.
Unknown said…
காவியமா கட்டுரையா கவிதை வடிவா
காணுமிரு கண்களுமே கண்டக் காட்சி ஓவியமாய் உயிர்பெற்று வரவும் முடிவா
உணர்வுதனை தூண்டும் உரிய மாட்சி


Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...