Skip to main content

நீதானே என் பொன் வசந்தம்...!


















சின்ன வயசுப் பசங்க எல்லாம் அடிதடி சண்டைன்னு படம் எடுக்க வந்துட்டதால, கிழவனுங்க எல்லாம் காதலை பத்தி படம் எடுக்க வந்து கொல்றாங்கன்ற ரேஞ்சுக்கு நம் ஆல் டைம் இளைஞர் சாரு மாமா அவரோட தளத்துல கீசி (அதாங்க எழுதின்னு அர்த்தம்...!!!!) இருந்தத பாத்ததுக்கு அப்புறமாதான் நான் நீதானே என் பொன்வசந்தம் படத்தப்  பார்த்தேன்றது எல்லாம் இருக்கட்டும்....

சாரு மாமா மட்டுமில்ல, நிறைய சீனியர் பிரகஸ்பதிகளுக்குமே இந்தப்படம் பிடிக்கலைன்றத நான் அங்க அங்க மேஞ்சுட்டு இருக்கும் போது இணையத்துல வாசிச்சு தெரிஞ்சுகிட்டேன். சாரு மாமா படம் பிடிக்கலேன்னு சொல்லிட்டு கதாநாயகிய அவரோட ஸ்வீட்டி, செல்லம்ன்ற ரேஞ்சுக்கு எழுதி இருந்தத பாத்துட்டு அவருக்கு ஏன் ஒரு பொம்பளப் புள்ள நேரத்தே காலத்தே பொறந்து இருந்திருக்க கூடாது...? மனுசன் கொஞ்சமாச்சும் அடங்கி இருப்பாரேன்னு எனக்குள்ள சட்டுன்னு தோணிச்சு...

அதாவது சாரு மாமா மாதிரி ஆளுங்க அடுத்த ஐயாயிரம் வருசம் கழிச்சு பொறக்கப் போற மாடர்ன் டுபாக்கூர் டண்டணக்க மனுசங்களுக்காக இப்பவே புரியாத கதைகளையும் கட்டுரைகளையும் எழுதி வச்சுக்கிட்டு, என் படைப்ப எல்லாம் படிக்க உங்களுக்கு எல்லாம் அறிவு வேணும்டா, புத்தி வேணும்டான்னு மப்புல மத்தாப்பு கொளுத்துறத கூட ஏத்துகலாம்ங்க...வாசகர் வட்டம், தாலுகா, ஜில்லா, பில்லா, கூட்டத்தையும் விமர்சிக்காம நாம மரியாதையா ஒதுங்கிக்கிடலாம்ங்க...

ஆனா.. இந்த போல்ட்ஸ் எல்லாம் எவர் க்ரீன் ஹீரோ கணக்கா, சின்ன சின்ன புள்ளைங்கள கனவுக்கன்னின்னு சொல்லி கிண்டல் பண்ணி விளையாடுற விஞ்ஞானம்தான் புடிக்க மாட்டேங்குது நமக்கு. என் இஷ்டம் நான் எழுதுவேன்னு ஏதாவது நாக்கு கேட்டுச்சுன்னா அந்த நாக்கையும் எழுதுன கையையும் அவன் அவன் அறைவீட்டுக்குள்ளயே வச்சு பூட்டிக்கத்தான் நான் சொல்வேன். பொதுவெளியில எழுதும் போது நாகரீகமா டீல் பண்ணத் தெரியாத டீட்டெய்ல்ஸ் எல்லாம்...படம் பாத்துட்டு பல்டி அடிக்கிற கோமாளித்தனத்தை என்னனு சொல்ல...

பொதுவாவே ஒரு ரேஞ்சுல படம் எடுக்குற கெளதம் சார். நீதானே என் பொன்வசந்தம் படத்தையும் அதே ஷேப்லதான் செஞ்சு இருக்கார். எப்பவும் ஹையர் மிடில் க்ளாஸ் பத்தி விலாவரியா பேசுறதுல சார் ரொம்பவே கில்லாடி. அதோட மட்டுமில்லாம தன்னோட படைப்புகள்ள வர்ற கதாபாத்திரங்களுக்கு கூடவே அப்பா பேரையும் சேத்து சொல்ற அவரோட வழக்கம் ரசிக்கிறமாதிரிதான் இருக்கு.

காதல் கதைன்னு இதுக்கு முன்னாடி எடுத்தவங்களும் சரி இனிமே எடுக்கப் போறவங்களும் சரி... புதுசா ஒரு ஜிப்பா ஜிம்ளாக்கோவையும் காட்ட முடியாது. ஆல்வேய்ஸ் எ காய் அண்ட எ கேர்ள்...! அவுங்க காதலுக்கு இருக்குற பிரச்சினை, இல்ல பெற்றோர்கள் சைட்ல வர்ற எதிர்ப்பு, பாத்து காதல், பாக்காமலேயே காதல், தோத்துப் போன காதல், சேர விரும்பாத காதல்...

இப்டி கேமரா காதலை சுத்தியேதான் சுழன்று ஆகணும். நீதானே பொன் வசந்தத்திலேயும் அப்டிதான், ராஜா சாரோட செம ட்யூன்ஸோட..பெர்பெக்ட்டா ஸ்டார்ட் ஆகுற மூவில..ஒவ்வொரு சீனும் ப்ரேம் பை ப்ரேம் லவ்லி...! உணர்வுகள பத்தி பேசுற எந்தப் படமா இருந்தாலும் சரி அதை புறக்காட்சிகளை விட்டு நகர்ந்து தெளிவா விளங்கிகுற பக்குவம் நமக்கு வரணும். உணர்வுகளை உணர்வுகளால் சுட்டுத் தள்ளியிருக்கும் கெளதம் வாசுதேவ் மேனன்...... உங்களுக்கு ஒரு ஹேட்ஸ் அப்...!!!!!!

ஒவ்வொரு தடவை அந்தப் பொண்ண, கதாநாயகன் பிரியுற இடத்துலயும் ச்ச்சும்மா பக்கம் பக்கமா டயலாக்க லோட் பண்ணி எரிச்சல் படுத்தாம.. செமையா எக்ஸ்பிரஷனால அதை வெளிப்படுத்த வச்சு இருப்பது செம.. செம..செம...! இன்னும் சொல்லப்போனா பல சீன்ல ஜீவாவ சமந்தா செமயாவே ஒவர் டேக் பண்ணிடுறாங்க..!

குடும்பச் சூழல், அதனாலா அந்தக் காதலிய வெறுக்கவும் முடியாம, பொழுதேன்னிக்கும் கூட சுத்தவும் முடியாம, அவ எங்க வேணா சுத்தலாம் அவுங்க அப்பா கிட்ட காசு இருக்கு, நான் ஒழுங்க படிச்சாதானே என் குடும்பம்னு அழுத்தமா ஜீவா யோசிக்கிற இடம் கெளதம் மேனன் சாரோட அனுபவத்தைக் காட்டுது. அது வலி, அது வேறு மாதிரியான வேதனை.

ஜெயிக்கிற காதலுக்கும் தோற்குற காதலுக்கும் மத்திமத்துல் இது மாதிரி விவரிக்க முடியாத உணர்வுச் சூழல்கள் நிறைஞ்சு இருக்குன்றத எதார்த்தமா காட்சிப்படுத்தி இருக்கும் விதத்தை நாம் பாரட்டியே ஆகவேண்டும். எப்பப் பாத்தாலும் வித்தியாசமான கதை வேணும்னு, உலகப்படத்தை எல்லாம் மேஞ்சு முடிச்சுட்டு அதை ஒப்பிட்டு இது சரி இல்லன்னு சொல்றவங்களுக்கு வேணும்னா இந்தப் படம் சப்பையா தெரியாலாம். ஆனா எப்போ பாத்தாலும் கதையை, வித்தியாசமான புறக்காட்சிகளையே எதுக்கு நாம தேடி ஓடணும்..?னுதான் நான் கேக்குறேன்...!

கதையோ அல்லது ஏதோ ஒரு முடிவோ அல்ல ஒரு படைப்பு என்பது. அது பல தரப்பட்ட உணவுகளைக் கொண்ட சூழல்களின் தொகுப்பு. நீதானே பொன் வசந்தம் எப்போதும் போல ஏதோ ஒரு வித்தியாசமான கதை அல்ல அது உணர்வுப் பூர்வமான சம்பவங்களின் தொகுப்பு.

எம்.ஜி.ஆர் படம் எத்தனை படம் வந்துச்சோ அத்தனையிலும் எம்.ஜி.ஆர் ரொம்ப நல்லவர், கடைசியில் வில்லன்களைக் அடித்து புரட்டி தன் குடும்பத்தைக் காப்பாற்றி எல்லோரும் வரிசையாய் நின்று கும்பிட சுபம் என்று போட்டவுடன் கைதட்டி எழுந்து வந்தவர்கள் தான் நாம். அதையே எல்லா நடிகர்களும் பெரும்பாலும் கையில் எடுத்துக் கொள்ள...ஒரு கதை என்பதின் கட்டமைப்பை நம்ம மூளை தன்னிச்சையாக கட்டியமைத்துக் கொண்டு விட்டது.

இதே மாதிரிதான் உலக சினிமாக்களை பார்ப்பவர்களும் கூட. ஈரானிய, ரஷ்ய, மற்றும் ஆங்கில படங்களை மிகுதியாக பார்ப்பவர்களும் இப்படியான ஒரு கட்டமைப்பை மனதிற்குள் கட்டியமைத்துக் கொண்டு தாங்கள் பார்க்கும் படம் சரி இல்லை என்று உடனே முடிவெடுக்கறதோட மட்டுமில்லாமல் அதற்கு விமர்சனத்தையும் எழுதி விடுகிறார்கள்.

நான் ஏற்கெனவே ஒரு முறை சொன்னது போல விமர்சனம் என்பது நாகரீகமான சர்வாதிகாரம். என் கருத்து சரி என்று சொல்ல, எனது ஆளுமையை கடை விரிக்கும் ஒரு தீவிரவாதம். அதுலயும் கெளதம் மேனனை தனிப்பட்ட முறையில் கிழவன், காதலைப் பற்றி எடுக்க அவருக்கு ருகதை இல்லை என்று விமர்சிப்பது என்பது அப்பட்டமான தனி மனித தாக்குதல்.

ஓ.கே...!!!! யூ டர்ன் பண்ணி மறுபடியும் படத்துக்குள்ள போவோம்...

பாட்டு, பின்னணி இசை, காட்சிகள் என்று தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்கும் படம் ஒரு இடத்கில் சிறிதாய் தொய்வு விழுந்ததாக எனக்குப் பட்டது. அதாவது ஜீவா எம்பிஏ எல்லாம் முடிச்சுட்டு..மறுபடி சமந்தாவ தேடிப் போகும் போது அவுங்க சுனாமில பாதிக்கப்பட்டவங்களுக்கு நிவரண உதவிகள் செய்ய ஒரு கடற்கரை கிராமத்துல தங்கி இருக்காங்கன்ற மாதிரி காட்டி இருப்பாங்க...

அதை பார்க்கும் போது மட்டும்...மூவி இஸ் எ மூவி....அதுல இப்டி எல்லாம் சொல்லித்தான் ஆகணும் வேற வழி இல்லன்ற ரேஞ்சுக்கு கெளதம் மேனன் சார் கீழ வழுக்கி விழுந்துட்ட மாதிரிதான் எனக்கு தோணிச்சு...! நல்ல டீக்கான டிரஸ்ல பட்ட சகதி மாதிரி இதைத்தான் நான் ஃபீல் பண்ணினேன். பட் ஸ்டில்...வேற வழி இல்ல ஏதோ ஒண்ணு பண்ணித்தான் கதைய நகர்த்தியாக வேண்டும்ன்ற எதார்த்த கயிறை பிடிச்சுக்கிட்டு நான் மேல ஏறி வந்துட்டேன்.

குறிப்பா சொல்லணும்னா லாஸ்ட் சீன் சார்.....ஹ்ம்ம்ம்ம்ம்...நோ வே....சமந்தா தடுமாறி, உருகி, மருகி மெல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாம, ஜீவாவோட கல்யாண ரிசப்சனுக்கு வந்துட்டு (அஃப்கோர்ஸ் வேற பொண்ணோடதான்..)கல்யாணத்துக்கு முதல் நாள் இரவுல ஜீவா கூட அவுங்க லவ் பண்ணினப்ப சுத்துன இடத்துக்கு எல்லாம் போய் சுத்திட்டு....

கடைசில அந்த கார்ல ஏறி வீட்டுக்கு வர முடியாம வர்றதும்..., இனிமே என்ன செய்ய முடியும்ன்ற மனோநிலையில ஜீவாவும் தடுமாறி வீட்டுகு திரும்பி வர்ற இடமும்.....க்ளாஸ்!!!!!!! ஹவ் த ஈ கோ இஸ் ப்ளேயிங்னு ச்ச்சும்மா நச்சுன்னு சொல்லி இருப்பாங்க..!

எப்டி இருந்தாலும் ரெண்டு பேரும் ஒண்ணாயிடுவாங்கன்றது எல்லோராலயும் கெஸ் பண்ண முடிஞ்சாலும், பட் செமையா லாஸ்ட் சீன்ல ஜீவா கல்யாணத்த நிறுத்திட்டு சமந்த வீட்டுக்குள்ள என்ட்ரி ஆகி, அவுங்க அப்பாகிட்ட காதலைச் சொல்ல்ல்ல்ல்லி....

தென்...கடைசில...

சமந்தா வீட்டு வாசலில்...ஜீவாவும் சமந்தாவும் முத்தமிட்டுக் கொள்ள...மொத்த திரைப்படத்தின் காட்சிகளும், இசையும், குறிப்பாய் பாடல்களும் நம்மை சூட்சுமமாய் முத்தமிடுகின்றன....!

நீதானே என் பொன் வசந்தம் சராசரியான கதை சொல்லும் திரைப்படம் அல்ல....

அது ஒரு கவிதை...!

வெறுமனே திரைப்படம் என்று அதைப் பார்க்காமல்... மெளனமாய் அது பகிரும் உணர்வுகளை வாசியுங்கள்...!


தேவா. S





Comments

// நீதானே என் பொன் வசந்தம் சராசரியான கதை சொல்லும் திரைப்படம் அல்ல.... அது ஒரு கவிதை...! வெறுமனே திரைப்படம் என்று அதைப் பார்க்காமல்... மெளனமாய் அது பகிரும் உணர்வுகளை வாசியுங்கள்...! //

சரியாகச் சொன்னீர்கள் !!
Anonymous said…
Super review...I like the movie...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...