Skip to main content

சிங்கம் 2 வோட நிறுத்திக்குங்க ப்ளீஸ்...!

























வூட்டுக்குள்ள குடும்பத்துல இருக்க அம்புட்டுப் பேரையும் வச்சுப் பூட்டிப்புட்டு, துப்பாக்கியவும் விவேக்கிட்ட கொடுத்துப்புட்டு...தக்குணூன்டு சூர்யா இருபது முப்பது பேரை பிரிச்சு மேயுறாரு பாருங்க ச்சும்மா சொல்லக்கூடாது சூர்யா ரொம்பவே மெனக்கெட்டு இருக்காப்ல....! அதுலயும் பாருங்க உசரமான ஆளுகள அடிக்க எம்பி எம்பி அந்த தம்பி போடுற சண்டை க்ளாஸ்தான் போங்க....! 

ஹலோ....ஹலோ....ஹலோ ஒக்க செகண்டு....படம் புடிக்கலேன்னா பாக்காம போகவேண்டியதுதானேன்னு கேக்குறீங்களா? டோரண்ல படம் ரிலீஸ் ஆன அன்னிக்கே படத்தை ரிலீஸ் பண்ணாம நிறுத்தச் சொல்லுங்க, நான் நிறுத்துறேன் அப்புறமா..! காசு கொடுத்து பாத்த படத்துல லாஜிக் இருக்கோ இல்லையோ இரண்டே முக்கால் மணி நேரம் விறு விறுப்பா இருந்துச்சுன்னு சொல்லிட்டு விமர்சனம் எழுதி, படத்தை ஆகா ஓகோன்னு புகழ்ந்துட்டு இருக்காங்களே அவங்கள நிறுத்தச் சொல்லுங்க முதல்ல அப்புறம் நான் நிறுத்துறேன்...

படம் என்ன கண்றாவியா இருந்தாலும் சரி குப்பைக் கதையா இருந்தாலும் சரி படத்துல வர்ற ஹீரோ காட்டுக் கத்தலா கத்தி தொடை தட்டி, கர்ஜிச்சு, நம்ம நாடி நரம்பு எல்லாம் புடைச்சு உடம்புல ச்ச்சும்மா ரத்தம் ஜிவ்வுன்னு சூடேறினா போதும்னு நினைச்சு தியேட்டர்ல கை தட்டி விசிலடிச்சு படம் பாக்குறானே ரசிகன் அவன நிறுத்தச் சொல்லுங்க நான் நிறுத்துறேன்...

அவ்வளவு ஏன் சார்...? படத்துக்குப் படம் ஏதாச்சும் ஒரு வேசம் கெடச்சா நடிச்சி ஒப்பேத்தலாம்னு ஒரு போலிஸ்காரன் கேக்குறான்றதுக்காக சட்டத்தை எல்லாம் மாத்தி வளைச்சு, ஒரு சி.எம்ம நைட்டோட நைட்டா கன்வினியன்ஸ் பண்ணி ஆப்பரசேன் டி....ஒரு திட்டத்துக்கு அப்ரூவ் கொடுத்து ச்சும்மாவே சீறிக்கிட்டு இருந்த மிஸ்ட்டர் துரைசிங்கம் டிஎஸ்பிக்கு இன்னும் சூடு வைக்கிறாரே....அப்பாவி மந்திரி விஜயகுமார் அவரை நிறுத்தச் சொல்லுங்க நான் நிறுத்துறேன்...! 

திருநெல்வேலி மாவட்டத்துக்காரர் ஆன ரகுமான் தமிழ் பேசும் போது மலையாள வாசனையோடயே இழுத்து, இழுத்துப் பேசலாம் அதை நீங்க ஒத்துக்கிட்டுப் பாப்பீங்க..., பன்னெண்டாவது படிக்கிற பாப்பா...மூணு தலைமுறையா போலிஸ்ல வேலை பாக்குற துரை சிங்கம் சார டாவடிக்கிறத ஒத்துக்குவீங்க..., சந்தானம் அறுக்குற அறுவையே தாங்லேன்னு இருக்கும் போது, விவேக்கையும் கூட சேத்து உப்புக்குச் சப்பாணியா ஓட விட்டத ஒத்துக்குவீங்க....

பைக்ல வர்றவன் பைக்க பிடிங்கி பைக்குக்கு பின்னால வர்றவங்கள எல்லாம் பைக்காலயே அடிக்கிறத பாத்துட்டு கை வலிக்க கை தட்டுவீங்க, நான் இன்னாட படம் இதுன்னு எழுதுனா விறு விறுப்பு இருந்துச்சா இல்லையான்னு என்னை எதிர் கேள்வி கேப்பீங்க அப்டிதானே..? இருந்துச்சு சார் விறு விறுப்பு இருந்துச்சு....

முந்தா நாள் நைட் டாஸ்மாக்க  க்ராஸ் பண்ணி நான் போயிட்டு இருந்தப்ப ரெண்டு பேரு குடிச்சுட்டு கைலிய வலிச்சு கட்டிக்கினு நடு ரோட்ல புரண்டு கிட்டு இருந்தத பாத்தப்ப எனக்கு விறு விறுப்பா இருந்துச்சு....., ஏசி தியேட்டர்ல ஏண்டா ஏசி போடலேன்னு ரெண்டு பேரு ஆப்பரேட்டர அடிக்க போனதை பாத்தப்ப ரொம்ப விறு விறுப்பா இருந்துச்சு, இன்னும் சொல்லப் போனா...ராஜ்ய சபா தேர்தல்ல ஓட்டுப் போடுறதுக்கு மட்டும் சட்டசபைக்குப் போன கலைஞர பாத்தா விறு விறுப்பா இருந்துச்சு....,  தோக்கப்போறமுன்னே தெரிஞ்சு வேட்பாளர நிப்பாட்டிப் புட்டு ஓட்டுப் போடுறதுக்கு முன்னாடி பண்ருட்டியார் கிட்ட டவுட் கேட்டு அப்புறம் ஓட்டுப் போட்ட விஜயகாந்த பாத்தாலும் விறு விறுப்பா இருந்துச்சு..., 

எதிர் கட்சி எம்.எல்.ஏக்கள் ஏழு பேரை டாகல்டி பண்ணி தன் பக்கம் இழுத்து ராஜ்ய சபா தேர்தல்ல மேக்ஸிமம் எம்பிக்கள பேக் அப் பண்ணிட்டு....கொடநாட்டுக்கு ரெஸ்ட் எடுக்கப் போன சி.எம் அம்மாவ பாத்தப்பவும் விறு விறுப்பா இருந்துச்சு...., சாதிப் பேரச் சொல்லி காதல் ஜோடிகள பிரிச்சு அநியாயமா இளவரசன கொன்னங்களே அவனுங்கள நினைச்சப்பா எனக்கு உயிரே போய்ட்டு திரும்ப வந்துச்சு....

நான் தெரியாமத்தான் கேக்குறேன் தங்கத் தமிழர்களே....ஒங்க வாழ்க்கையில ஒரு விறு விறுப்பும் இல்லேன்னு சொல்லிட்டா மூணாவது சீன்லயே யாரு வில்லன்னு நமக்கெல்லாம் தெரிஞ்சு போய்ட்ட இன்டர்நேசனல் ஸ்மக்ளிங் டான் டானிய பிடிக்க படாத பாடு படுற துரை சிங்கம் சாரை பாக்கப் போனீங்க....? இல்லை சென்டிமென்ட் வேணும்னே விருப்பப்பட்டு அந்த பாவி மக ஹன்சிகாவ சாகடிச்ச ஹரி சாரோட டைரக்சன் சூப்பர்னு சொல்லி பாக்கப் போனீங்க...?

சிங்கம் 2 ல வர்ற மாதிரி ஒரு போலிஸ்க்கார் நிஜ வாழ்க்கையில் நம்ப முன்னாடி வந்து நான் சொல்றதுதாண்டா மவனே சட்டம்...எனக்கு அரசியல்வாதி சப்போர்ட் இருக்குன்னு சொன்னா ஏத்துக்கிடுவியளா மக்களே...? ஏதோ ஹரி சார் நல்லவரு, அவர் படத்துல நடிக்க வந்த அண்ணன் சூர்யாவும் நல்லவரு....அவுங்க கடத்தல்காரங்கள பிடிக்க......அதிகாரத்தைக் கையிலெடுத்தாங்க.....அது சினிமா கையத் தட்டி பாத்தோம்...நெசத்துல அப்படி ஒரு ஆபிசரு வந்த நல்லா இருக்குமா மக்களே...? இதுல என்ன கொடுமைன்னா தமிழ் சினிமாவுல ஹீரோவா வர்ற போலிஸ தவிர பாக்கி அம்புட்டு போலிஸுமே கெட்டவங்கெளாவே இருக்கறதுதான். போலிஸ் டிப்பார்ட்மெண்ட்க்கு கெளரவம் சேக்குற படமா இது...? ஒரு போலிஸ நல்லவனா காட்டிட்டு மொத்த போலிஸையும் களவாணித்தனம் பண்ற மாதிரி காட்றதுதுதான் இந்திய காவல்துறைக்கு ஹரி சார் அண்ட் டீம் கொடுக்குர கெளரவமா...? நல்லா இருக்கு ராஜா ஒங்க டீலிங்கு...!

அட கூறுகெட்ட குக்கரு படத்த படமா பாருலேன்னு நீங்க சொன்னா...படத்தை நீங்க என்னமா நினைச்சுப் பாத்தீங்கன்னு  நான் கேப்பனா..?  மாட்டேனா....?சொல்லுங்க ரசிக பெருமக்களே...!!!! சரி படத்தை எல்லாம் வுட்டுத்தள்ளுங்க.. ஏதோ ஓடித்தொலையட்டும்...ஆக்ஸிடெண்ட் ஆகப்போற காரு மாதிரி லபோ திபோனன்னு பயணிக்கிற திரைக்கதை கண்டிப்பா பாத்தவங்களுக்கு எல்லாம் ச்ச்சும்மா ஜிவு ஜிவுன்னு  த்ரில்லாத்தான் இருந்திகிருக்கும்.., அதோட இல்லாம பாட்டு எல்லாம் படு மொக்கைன்ற கதைக்கு எல்லாம் நான் வரலை....என் கேள்வி எல்லாம்...

அம்புட்டு பெரிய ஆளான பாய் உள்ளூர்ல ஆள் கிடைக்காம ஒரு மொண்ணை சிங்களத்துக்காரன கொலை பண்றதுக்காக இலங்கைல இருந்து ஏன் கூட்டிக்கிட்டு வர்றார்னுதான் எனக்குப் புரியலை....கூட்டிட்டு வந்ததோட இல்லாம அவுகளுக்கு சிங்களத்துலயே டயலாக் வேற.....

மிஸ்டர் ஹரி க்ளாரிஃபை ப்ளிஸ்....!

ஆப்பரிக்காவுல போய்...டேனிய கைது பண்ணிக் கொண்டாந்து செல்லுக்குள்ள போட்ட தொரை சிங்கம் ஐயா...அனுஷ்காவ கல்யாணம் பண்ணித் தொலைச்சிருக்கக் கூடாதா....

பாருங்க இப்ப சிங்கம் 3 வருமான்ற பயத்தோடயே படத்தைப் பாத்து முடிச்சுருக்கேன்...! எது எப்படியோ படம் தமிழ்நாட்ல செம ஹிட்ட்டாம்....அதுல என்ன ஆச்சர்யம் இருக்கு...இந்த மாதிரி மசாலா படங்கள் நம்மூர்ல ஹிட் ஆகாம இருந்தாதான் ஆச்சர்யம்...!

ஹரி சார்...வேணும்னா சிங்கம் பார்ட் 3ல நேரடியாவே ஒரு சிங்கத்தை நடிக்க வைக்க ட்ரை பண்ணுங்களேன்....படம் இன்னும் விறு விறுப்பா இருக்கும் (நற...நற....நற...)


அப்போ வர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்டா!!!!!!!


தேவா சுப்பையா....




Comments

ஹா... ஹா... முடியலே... ம்...
Unknown said…
அட ஆமா தல ஆளாளுக்கு படத்த ஆஹா ஓஓஹோ அப்படினு எழுதி கடுபெதுரங்க
SUUUPER .SUPER.But people will never change.
அட்டகாசம் தம்பி . . .


கலக்கி புட்டிங்க . .
ஹா.... ஹா... போட்டுத் தாக்கிப்புட்டீங்களேண்ணே...

கலக்கல்...
அட்டகாசம் !!!
Balaji.D.R said…
நம்ம ஊரு மக்கள் தொகையில பத்து சதவிகிதம் பேரு படத்த பார்த்தாலே அந்த படம் ஹிட்டுங்க தேவா!!!!

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...