Skip to main content

ஏரிக்கரை பூங்காற்றே....!


வாழ்க்கையின் எல்லா பக்கங்களிலும் நிறைந்து கிடக்கும் உணர்வொன்றை மொத்தமாய்  என்னுள் திணித்துப் போட்டிருக்க்கும் உனது பேரன்பினை விவரிக்க இயலாமல் ஒரு குருடனாய் தட்டுத் தடுமாறி உனக்கான வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். எத்தனை முறை இயம்பினாலும் தீராத காதலொன்றை என் வார்த்தைகளுக்குள் கொண்டு வரும் பிராயத்தனத்தை நான் வலி என்பதா சுகம் என்பதா இல்லை இரண்டும்  பிசைந்தெடுத்த கலவை என்பதா?

அடர் இரவொன்றின் நீண்ட பயணத்தில் துணைக்கு வரும் நிலவாய் என்னை துரத்தும் உன் நினைவுகளை மென்று கொண்டே என் ஜன்னலோரப் பேருந்தில் நகர்ந்து கொண்டிருக்கும் சொர்க்க நிமிடங்களின் ஏக்கத்தை காதலென்று அடையாளப்படுத்தியபடியே தூரத்தில் சிறகடிக்கும் ஒற்றை பறவை ஒன்று தன் துணையத் தேடி சென்று கொண்டிருக்கலாம்....ஆழமான பேரமைதியை உள்வாங்கிக் கொண்டு ஏதேனும் ஒரு மரக்கிளையில் அதன் துணை காத்துக் கொண்டுமிருக்கலாம்..

இறக்க முடியாத சிலுவையினை சுமக்கும் தேவனாய் உன்னை மறக்க முடியாமால் நகரும் என் பொழுதுகளை எல்லாம் நீயே விடியவைக்கிறாய்...நீயே அணைத்தும் வைக்கிறாய்.  எடுத்தியம்ப இயலாத உணர்வுகளைத்தான் எப்போதும் போல இப்போதும் எழுதி வைக்கிறேன்....! 

ப்ரியங்கள் எப்போதும் சொல்லிக் கொள்வதில் முடிந்து விடுவதில்லை. நேசங்கள் ஒரு போதும் மேடையேறி தன்னை கோடி பேருக்கு அது அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. எதையும் பகிரவேண்டிய அவசியமற்று மெளனமாய் சுற்றும் இந்த பூமியையும், தூரத்தில் எரிந்து கொண்டிருக்கும் சூரியனையும் இருக்கிற்தென்று சொல்லி நியாயங்கள் பேச வேண்டியதும் இல்லை. 

காதலென்ற ஒற்றை சொல்லுக்குள் 
அடைபட முடியாமல் துடிக்கும்
என் உணர்வுகளை பிரம்மாண்டமாய்
விரித்துப் போட்டிருக்கிறேன்
இந்த பிரபஞ்சப் பெருவெளியெங்கும்
திறந்து கிடக்கும் வானத்தின்
நட்சத்திரங்களாய் கண்சிமிட்டும்
உன் மீதான என் காதலுக்கு
மறுமொழி பகிராவிடினும்
இமைகள் சிமிட்டி விழிகளாலாவது
நீ சிரித்து விட்டுப் போ....!!


இப்படியாய் கிறுக்கிக் கொண்டே பின்னணியில்  இசைத்துக் கொண்டிருக்கும் இளையரஜாவின் இசைக்குள் சிக்கிக் கொண்டு திணறிக் கொண்டிருக்கிறேன். இந்த பாடலுக்காக நான் ஏதோ எழுதினேன் என்று சொல்ல முடியாது ஆனால் பாடல் கொடுத்த உணர்வுகள் எங்கோ இழுத்துச் சென்று என்னை நிறுத்தியதால் எழுதினேன் என்பது உண்மை. அட்டகாசமான ஒரு சூழலை எடுத்துச் சொல்லும் இது போன்ற பாடலின் சூழல்கள் எல்லாம் கவிதைத்தனமானது. தன்னுடைய துணையை நினைத்து படத்தின் ஹீரோ பாக்கியராஜ் சோகமாய் பாடிக் கொண்டிருக்கையில் நம்பியார் அப்படியே ப்ளாஸ் பேக்கில் தன்னுடைய காதலியோடு டூயட்  பாடுவார். ஒரே பாடலை சோகமாகவும் டூயட்டாகவும் உணர வைக்கும் வித்தையை செய்திருப்பார் ராஜா சார்.

முழுக்க முழுக்க ஏக்கத்தையும் காதலையும் பிசைந்து உருவாக்கப்பட்டிருக்கும் பாடலை சிதம்பரநாதன் என்று ஒருவர் எழுதி இருக்கிறார்.

" ஓடிச்செல்லும் வான்மேகம் நிலவ
மூடி கொள்ள பார்க்குதடி அடியே
ஓடிச்செல்லும் வான்மேகம் நிலவ
மூடி கொள்ள பார்க்குதடி அடியே
ஜாமத்தில் பாடுறேன் தனியா
ராகத்தில் சேரணும் துணையா
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்
அந்த ராசாங்கம் வரும்வரை ரோசாவே காத்திரு "

வலியை ஏந்தி வரும் பாடலோடு  கரைந்து போக வாழ்த்துகள்...!





தேவா சுப்பையா...



Photo Courtesy: யோ

Comments

அருமையான பதிவு அண்ணா...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்...

//அடர் இரவொன்றின் நீண்ட பயணத்தில் துணைக்கு வரும் நிலவாய் என்னை துரத்தும் உன் நினைவுகளை மென்று கொண்டே என் ஜன்னலோரப் பேருந்தில் நகர்ந்து கொண்டிருக்கும் சொர்க்க நிமிடங்களின் ஏக்கத்தை காதலென்று அடையாளப்படுத்தியபடியே தூரத்தில் சிறகடிக்கும் ஒற்றை பறவை ஒன்று தன் துணையத் தேடி சென்று கொண்டிருக்கலாம்....//

யே யப்பா ... முழுசா நிமிஷம் ஆகிடுச்சு ஏக தம்முள புரிஞ்சு படிக்க ...! எவ்ளோ நீளமான வரிகள் ...! சாவடிக்குறீங்கண்ணா ..கிளாசிக் ...!

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...