அவள் பிரிந்து செல்வாள்
என்று கூறியது போலவே
இன்று...பிரிவொன்றில்...
நின்று கொண்டிருக்கிறேன் நான்....!
இனிதலென்று பெறுதலைச்
சொல்லிக் கொடுத்திருந்த உலகிலிருந்து
விலகி நின்று தனிமையை
ஊன்றிக் கொண்டு மெல்ல நகர முற்படுகிறேன்
ஒரு மழைத்துளி போல மீண்டுமொருத்தி
என் மீது வந்து விழுந்து
புரிதலாய் சேர்ந்தோம் என்று
சொல்லவும் கூடும்...
அவளிடமும் சொல்வேன்...
பின்னொரு நாளில் நாம்
பிரியக்கூடுமென்று...!
தேவா சுப்பையா...
Photo Courtesy: Ashokarsh Photos - Source: Web

Comments
VEtha.Elangathilakam.