Skip to main content

எழுதாத கவிதை...!


எழுதாத கவிதையொன்றை அனுப்பி வைக்கிறேன்...
புரியாத விசயமொன்றை அதில் பூட்டி வைக்கிறேன்...
அதி ரகசியத்தைச் சுமந்து வரப்போகும் அந்த கவிதையினில்...
எது இல்லாததோ அது சிம்மமாய் கர்ஜிக்கும்,
எதை எல்லோரும் தேடுகிறார்களோ 
அது ஒங்கே ஒளிந்து கொண்டிருக்கும்...
பேசியதை பேசி,எழுதியதை எழுதி வாசித்ததை வாசித்து
சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின்
தன்முனைப்பு முனையினை ஒடித்தெறிவது மட்டுமே
அந்த கவிதையின் கருபொருளாயிருக்கும்
தட்டிலிட்ட பிச்சையை என்னுடையது என்று சொல்லும்
பிச்சைகாரனைப் போன்றல்லவா 
இதை என் வாழ்க்கை என்று 
எல்லோரும் மார்த்தட்டிக் கொண்டிருக்கிறீர்கள்...?!

அந்த கவிதையை வாசித்து முடிக்கும் முன்பே
உங்கள் சவப்பெட்டிகளின் மீது அறைந்து மோதும்
சுத்தியின் சப்தத்தை நீங்கள் கேட்கப் போகிறீர்கள்...
ப்ரியத்தை ஒருவேளை அந்தக் கவிதை 
உங்களிடம் பகிரலாம்...
அது உங்களுக்குள் நிரம்பிக் கிடக்கும்
பேரன்பின் உயரத்தைப் பொறுத்தது...
காதலையும் காமத்தையும் அந்தக் கவிதைகளில்
நீங்கள் கண்டடையக் கூடும்..
அது உங்களின் திருப்தியின்மையைப் பொறுத்த்து
கடலின் உயரத்தையும்
காற்றின் தடிமனையும்
வானின் உயரத்தையும்
எப்போதுமே பிடிபடாத இந்த பிரபஞ்சத்தின்
அதி ரகசிய பக்கங்களையும்,
மரித்து போன மனிதர்களின் செல்லரித்துப் போன
ஆசைகளையும், இன்னபிற உள்ளன இல்லாதன பற்றியும்
ஒரு வேளை அந்தக் கவிதை பேசவும் கூடும்...
நீங்கள் வாசித்து அதை புரிந்து கொள்ளப் போவதென்று 
அதிலொன்றுமே இருக்கப்போவதில்லை....
என்றாலும் கூட....
நீங்கள் அந்தக் கவிதையை வாசித்து முடித்த பின்பு...
வாசிப்பவனென்றும், கவிதையென்றும்...
கவிதை எழுதியவனென்றும் யாருமேயில்லாமல் போக...
மிச்சமிருக்கும் அந்த சொச்சத்தில்
விளையாடிக் கொண்டிக்கும் விளங்காப் பொருளாய்
நீங்கள் ஆகப் போகிறீர்களென்பது மட்டும் நிச்சயம்...!




தேவா சுப்பையா...








Comments

எழுதாத கவிதை...
அழகாய்...
அருமையாய்...
அருமையான கவிதை அண்ணா.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...