Skip to main content

கபாலியும் ரஜினி எதிர்ப்பு அரசியலும்...!


ரஜினி படத்துக்கான ஓப்பனிங் என்பது இன்று நேற்று உருவான விசயம் கிடையாது. ஊடகப் பெருக்கம் நிறைந்த இக்காலத்தில் நம்மைச் சுற்றி நிகழும் எல்லா நிகழ்வுகளுமே அதன் வேர் வரை விபரமாக பல கோணங்களில் இப்போது நமது முன் கடை விரிக்கப்பட்டு விடுகிறது. சேட்டிலைட் டிவிகளைக் கடந்து சோசியல் மீடியாக்களும் விசுவரூபம் எடுத்து நிற்கும் இந்தக்காலக்கட்டத்தில் ஒரு மாஸ் ஹீரோவின் மாஸ் என்டெர்யெனிங் மூவி ரிலீஸ் என்பது கண்டிப்பாய் மிகப்பிரம்மாண்டமானதாய்தான் இருக்கும்.

ஒரு படம் வெற்றியடைந்து விட்டால் அந்த முழு வெற்றியையும் படத்தின் மொத்த டீமும் தூக்கிச் சுமக்கும் அதே வேளையில் படம் படு தோல்வியடைந்து விட்டால் அந்த தோல்வியின் சுமையை படத்தின் கதாநாயகனும் அந்தபடத்தின் தயாரிப்பாளரும் மட்டுமே தூக்கிச் சுமக்க வேண்டியிருக்கும். பாபாவாய் இருந்தாலும் சரி லிங்காவாய் இருந்தாலும் சரி அந்த படத்தின் வியாபார ரீதியிலான சுமையை சரி செய்ய வேண்டிய பொறுப்பு ரஜினிக்கு இருந்தது, அதை அவர் செய்தார்.

கபாலிக்கு இன்றைக்கு இருக்கும் இந்த கிரேட் மாஸ் ஊதிப் பெரிதாக்கப்பட்டதாய் பேசிக் கொள்கிறார்கள் ஆனால் நிஜத்தில் சமகால ஊடகப்பெருக்கமும் ரஜினி என்னும் சூப்பர் பவரும் ஒன்றாய் சேர்ந்ததின் விளைவுதான் இவ்வளவு கோலாகலத்துக்குமே காரணம். இன்றைக்கு நேற்று இல்லை 1991 ல் தளபதி வெளியாவதற்கு முன்பு இவ்வளவு தனியார் தொலைக்காட்சிகளும், இன்ன பிற சோசியல் மீடியாக்களும் இல்லாத காலத்திலேயே தளபதி அட்டகாசமான ட்ரெண்ட் ஆனது. தளபதி தொப்பி, தளபதி டிஷர்ட், தளபதி பேக்பேக்ஸ், தளபதி ஸ்டில்ஸ் அடங்கிய காலண்டர் என்று எல்லாமே விற்றுத் தீர்ந்தது. தளபதி இல்லையேல் தீபாவளி இல்லை என்றெல்லாம் ரசிகர்களால் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் தமிழகமெங்கும் ஒட்டப்பட்டன. ரஜினி எப்போதும் தமிழ் சினிமாவின் தவிர்க்கப்பட முடியாத ஒரு மாஸ் என்பது இப்போது இங்கே சமூக பிரக்ஞை என்ற பெயரில் அவதூறு பேசிக் கொண்டிருக்கிறார்களே அவர்களுக்கும் நன்றாகத் தெரியும்.

எதை மக்கள் ரசிக்கிறார்களோ எதை அதிகம் பேர் பார்ப்பார்களோ அதை பயன்படுத்தி பணம் சம்பாரிப்பது என்பது மார்கெட்டிங் யுத்தி. கமர்சியல் உலகத்தில் இதுவெல்லாம் சர்வசாதரணம், இந்தியா என்றில்லை எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ, எங்கெல்லாம் தமிழர்களை வைத்து பொருளீட்ட முடியும் என்று எந்த ஒரு நிறுவனமம் நினைக்கிறதோ அவர்கள் அப்போதைய ட்ரெண்ட்டை , கவர்ச்சியைக் கையிலெடுத்துக் கொள்ளத்தான் செய்வார்கள்.

கபாலிதான் இப்போதைய ட்ரெண்ட் அதை வியாபரிகள் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்தால் தான் அவர்களுக்கு தொழில் சார்ந்த சிந்தனை இல்லை என்று அர்த்தம். இங்கே அடிப்படையில் மிகைப்பட்டவர்களுக்கு இருப்பது வயிற்றெரிச்சல், ஆழ்மனதின் பொறாமை அதனால்தான் அர்த்தமில்லாத கோரக் கேள்விகள் புரையோடிப்போன மனதிலிருந்து எழுகின்றது. அசிங்கமான அடிப்படை எண்ணம்தான் திருட்டுத்தனமாக இந்தபடம் வந்து யாரும் திரையரங்கிற்கு செல்லாமல் படம் தோல்வியடையவேண்டும் என்று எண்ண வைக்கிறது. பொறுக்கித்தனமான எச்சிக்களை புத்திதான் ப்ரிவியூ ஷோவில் உட்கார்ந்து கொண்டு மொபைலில் கபாலி ஓப்பனிங் காட்சியை எடுத்து இணையத்தில் வைரலாக்குகிறது. சென்னை வெள்ளத்தில் ரஜினி என்ன செய்தார் என்பது அப்போதே ஊடகங்களில் செய்தியாய் வெளிவந்தது. பத்துலட்சம்தானே கொடுத்தார் என்று கேள்வி கேட்கும் குரூர புத்திகள் தங்கள் பர்சிலிருந்து ஒரு ரூபாயைக் கூட கொடுக்க மனமில்லாதவைகள் என்பதோடு மட்டுமில்லாமல் சென்னை வெள்ளத்தின் போது ராகவேந்திரா மண்டபத்திலிருந்து எத்தனை கோடி ரூபாய் மதிப்புள்ள உதவிப் பொருட்கள் சென்றன என்பதை வேண்டுமென்றே மறைத்துக் கொண்டு பேசும் ஈனத்தனமும் கொண்டவை.

ஒரு சாதாரண கண்டக்டராய் இருந்து இன்றைக்கு தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாய் இருக்கும் ரஜினி யாரோ ஒரு முகம் தெரியாத மனிதராய் இருந்து இந்த சூப்பர் ஸ்டார் இடத்தைப் பிடிக்க கொடுத்திருக்கும் உழைப்பும், இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராய் ஆனபின்பும் இருக்கும் அவரது எளிமையும் இது எல்லாவற்றுக்கும் மேலாய் அவரின் அட்டகாசமான ஸ்டைலும் ஸ்பீடும்தான் ஒவ்வொரு ரசிகனையும் காந்தமாய் இன்னமும் அவரை விட்டு நகராமல் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

விமர்சனங்கள் ரஜினிக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் புதிதல்ல பல காலகட்டங்களில் பல விதமான் சூழல்களை கடந்து வந்ததைப் போல இந்தச் சூழலையும் அவர்கள் எளிதாய் கடந்து வந்து விடுவார்கள். கபாலி ரஜினியின் படங்களில் கண்டிப்பாய் ஒரு மிகப்பெரிய மைல்கலாய் இருக்கும் என்பது வரப்போகும் வாரங்களில் எல்லோருக்கும் தெரியும்.



தேவா சுப்பையா...






Comments

நல்லா எழுதியிருக்கீங்க அண்ணா...
படத்துக்கு பாஸிட்டிவ் ரிசல்டைவிட நெகட்டிவ் ரிசல்ட்தான் இருக்கு....
ரஜினியை முன்னிறுத்தி தாணு செய்த அட்டூழியங்கள்தான் இப்போது படக்கு பெரிய பிரச்சினையே..
எப்படியோ அண்ணாஅ ரஜினி நல்லா நடிச்சிருக்கார்ன்னு சொல்வது சந்தோஷமே...

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...