Skip to main content

கபாலியும் ரஜினி எதிர்ப்பு அரசியலும்...!


ரஜினி படத்துக்கான ஓப்பனிங் என்பது இன்று நேற்று உருவான விசயம் கிடையாது. ஊடகப் பெருக்கம் நிறைந்த இக்காலத்தில் நம்மைச் சுற்றி நிகழும் எல்லா நிகழ்வுகளுமே அதன் வேர் வரை விபரமாக பல கோணங்களில் இப்போது நமது முன் கடை விரிக்கப்பட்டு விடுகிறது. சேட்டிலைட் டிவிகளைக் கடந்து சோசியல் மீடியாக்களும் விசுவரூபம் எடுத்து நிற்கும் இந்தக்காலக்கட்டத்தில் ஒரு மாஸ் ஹீரோவின் மாஸ் என்டெர்யெனிங் மூவி ரிலீஸ் என்பது கண்டிப்பாய் மிகப்பிரம்மாண்டமானதாய்தான் இருக்கும்.

ஒரு படம் வெற்றியடைந்து விட்டால் அந்த முழு வெற்றியையும் படத்தின் மொத்த டீமும் தூக்கிச் சுமக்கும் அதே வேளையில் படம் படு தோல்வியடைந்து விட்டால் அந்த தோல்வியின் சுமையை படத்தின் கதாநாயகனும் அந்தபடத்தின் தயாரிப்பாளரும் மட்டுமே தூக்கிச் சுமக்க வேண்டியிருக்கும். பாபாவாய் இருந்தாலும் சரி லிங்காவாய் இருந்தாலும் சரி அந்த படத்தின் வியாபார ரீதியிலான சுமையை சரி செய்ய வேண்டிய பொறுப்பு ரஜினிக்கு இருந்தது, அதை அவர் செய்தார்.

கபாலிக்கு இன்றைக்கு இருக்கும் இந்த கிரேட் மாஸ் ஊதிப் பெரிதாக்கப்பட்டதாய் பேசிக் கொள்கிறார்கள் ஆனால் நிஜத்தில் சமகால ஊடகப்பெருக்கமும் ரஜினி என்னும் சூப்பர் பவரும் ஒன்றாய் சேர்ந்ததின் விளைவுதான் இவ்வளவு கோலாகலத்துக்குமே காரணம். இன்றைக்கு நேற்று இல்லை 1991 ல் தளபதி வெளியாவதற்கு முன்பு இவ்வளவு தனியார் தொலைக்காட்சிகளும், இன்ன பிற சோசியல் மீடியாக்களும் இல்லாத காலத்திலேயே தளபதி அட்டகாசமான ட்ரெண்ட் ஆனது. தளபதி தொப்பி, தளபதி டிஷர்ட், தளபதி பேக்பேக்ஸ், தளபதி ஸ்டில்ஸ் அடங்கிய காலண்டர் என்று எல்லாமே விற்றுத் தீர்ந்தது. தளபதி இல்லையேல் தீபாவளி இல்லை என்றெல்லாம் ரசிகர்களால் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் தமிழகமெங்கும் ஒட்டப்பட்டன. ரஜினி எப்போதும் தமிழ் சினிமாவின் தவிர்க்கப்பட முடியாத ஒரு மாஸ் என்பது இப்போது இங்கே சமூக பிரக்ஞை என்ற பெயரில் அவதூறு பேசிக் கொண்டிருக்கிறார்களே அவர்களுக்கும் நன்றாகத் தெரியும்.

எதை மக்கள் ரசிக்கிறார்களோ எதை அதிகம் பேர் பார்ப்பார்களோ அதை பயன்படுத்தி பணம் சம்பாரிப்பது என்பது மார்கெட்டிங் யுத்தி. கமர்சியல் உலகத்தில் இதுவெல்லாம் சர்வசாதரணம், இந்தியா என்றில்லை எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ, எங்கெல்லாம் தமிழர்களை வைத்து பொருளீட்ட முடியும் என்று எந்த ஒரு நிறுவனமம் நினைக்கிறதோ அவர்கள் அப்போதைய ட்ரெண்ட்டை , கவர்ச்சியைக் கையிலெடுத்துக் கொள்ளத்தான் செய்வார்கள்.

கபாலிதான் இப்போதைய ட்ரெண்ட் அதை வியாபரிகள் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்தால் தான் அவர்களுக்கு தொழில் சார்ந்த சிந்தனை இல்லை என்று அர்த்தம். இங்கே அடிப்படையில் மிகைப்பட்டவர்களுக்கு இருப்பது வயிற்றெரிச்சல், ஆழ்மனதின் பொறாமை அதனால்தான் அர்த்தமில்லாத கோரக் கேள்விகள் புரையோடிப்போன மனதிலிருந்து எழுகின்றது. அசிங்கமான அடிப்படை எண்ணம்தான் திருட்டுத்தனமாக இந்தபடம் வந்து யாரும் திரையரங்கிற்கு செல்லாமல் படம் தோல்வியடையவேண்டும் என்று எண்ண வைக்கிறது. பொறுக்கித்தனமான எச்சிக்களை புத்திதான் ப்ரிவியூ ஷோவில் உட்கார்ந்து கொண்டு மொபைலில் கபாலி ஓப்பனிங் காட்சியை எடுத்து இணையத்தில் வைரலாக்குகிறது. சென்னை வெள்ளத்தில் ரஜினி என்ன செய்தார் என்பது அப்போதே ஊடகங்களில் செய்தியாய் வெளிவந்தது. பத்துலட்சம்தானே கொடுத்தார் என்று கேள்வி கேட்கும் குரூர புத்திகள் தங்கள் பர்சிலிருந்து ஒரு ரூபாயைக் கூட கொடுக்க மனமில்லாதவைகள் என்பதோடு மட்டுமில்லாமல் சென்னை வெள்ளத்தின் போது ராகவேந்திரா மண்டபத்திலிருந்து எத்தனை கோடி ரூபாய் மதிப்புள்ள உதவிப் பொருட்கள் சென்றன என்பதை வேண்டுமென்றே மறைத்துக் கொண்டு பேசும் ஈனத்தனமும் கொண்டவை.

ஒரு சாதாரண கண்டக்டராய் இருந்து இன்றைக்கு தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாய் இருக்கும் ரஜினி யாரோ ஒரு முகம் தெரியாத மனிதராய் இருந்து இந்த சூப்பர் ஸ்டார் இடத்தைப் பிடிக்க கொடுத்திருக்கும் உழைப்பும், இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராய் ஆனபின்பும் இருக்கும் அவரது எளிமையும் இது எல்லாவற்றுக்கும் மேலாய் அவரின் அட்டகாசமான ஸ்டைலும் ஸ்பீடும்தான் ஒவ்வொரு ரசிகனையும் காந்தமாய் இன்னமும் அவரை விட்டு நகராமல் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

விமர்சனங்கள் ரஜினிக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் புதிதல்ல பல காலகட்டங்களில் பல விதமான் சூழல்களை கடந்து வந்ததைப் போல இந்தச் சூழலையும் அவர்கள் எளிதாய் கடந்து வந்து விடுவார்கள். கபாலி ரஜினியின் படங்களில் கண்டிப்பாய் ஒரு மிகப்பெரிய மைல்கலாய் இருக்கும் என்பது வரப்போகும் வாரங்களில் எல்லோருக்கும் தெரியும்.



தேவா சுப்பையா...






Comments

நல்லா எழுதியிருக்கீங்க அண்ணா...
படத்துக்கு பாஸிட்டிவ் ரிசல்டைவிட நெகட்டிவ் ரிசல்ட்தான் இருக்கு....
ரஜினியை முன்னிறுத்தி தாணு செய்த அட்டூழியங்கள்தான் இப்போது படக்கு பெரிய பிரச்சினையே..
எப்படியோ அண்ணாஅ ரஜினி நல்லா நடிச்சிருக்கார்ன்னு சொல்வது சந்தோஷமே...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

அவள்....!

அந்த கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவன் சுரேஷ். கல்லூரியில் சேர்ந்த ஆரம்பத்திலிருந்த கூச்சம் எல்லாம் போய் விட்டது அவனுக்கு. இப்பொதைய நாட்கள் நண்பர்கள், பாடம், கல்லூரி என்று கலை கட்ட ஆரம்பித்து விட்டது. +2 முடித்து கல்லூரியில் சேரும் எல்லா மாணவர்களுக்குமே வாழ்வின் அடுத்த நிலையான கல்லூரி வாழ்க்கை ஒரு சந்தோசமான விசயம்தான். வாழ்வின் அடுத்த கட்டம் ஒரு பள்ளி என்ற கட்டுண்ட நிலையில் இருந்து கொஞ்சம் சுதந்திரமான மரியாதை கிடைக்க கூடிய தான் பட்டம் பயில்கிறோம் என்ற ஒரு மமதையுடன் கூடிய சந்தோசம் என்று களை கட்டும் நாட்கள் அவை. அப்போதுதான் தலை முடியின் அலங்காரம் மாறும். சட்டை பேண்டின் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படும். ஒரு சில நோட்டு புத்தகங்கள் கூடியிருக்கும் நண்பர்கள் கூட்டம் என்றும் ஒரு வித மிடுக்கு இருக்கும் அதுவும் இருபாலர் பயிலும் கல்லூரி என்றால் சொல்லவே தேவையில்லை. மேலே சொன்ன எல்லாம் இரு மடங்கு ஆகும். இந்த வாலிப களேபரத்தில் கல்லூரியும் படிக்கும் பாடமும் மைக்ரோ லெவலிலும் இன்ன பிற விசயங்கள் மேக்ரோ லெவலிலும் இருக்கும். இப்படிபட்ட ஒரு நியதிக்கு சுரேஷ் மட்டும் என்ன விதிவிலக்கா? கல்லூரி மாணவன் என...