Skip to main content

சிவப்பு சிந்தனை....













வல்லரசு கனவோடு...இந்தியாவின் வருங்காலம்....!
செல்லரித்த...கட்டைகளாய்...
தெருவின் ஓரங்களில்...!
2020லாவது... ஏக்கங்கள் தீராதா....
தெருவோரம்.. பிச்சை என்னும்...தீட்டு நீங்காதா?
கடல் நீரை குடி நீராய்...
மாற்றும் திட்டத்தோடு...
இவர்களின் கண்ணீரை நிறுத்த..ஒரு திட்டமுண்டா...!

எத்தனை தலைமுறைதான்...
தெருமுனையில் ஜனித்து...
நடை பாதையில்... வளர்ந்து...
ஒவ்வொரு சிவப்பு சிக்னலையும்...
வாழ்வாதாரமாக நம்பி வழுமோ?

தெருவோர அகதிகள்....
இவர்களுக்கு ஒரு இயக்கம் உண்டா?
முள்கம்பி இல்லா.. வெற்றிடத்தின்...
ஜன நாயக...அடிமைகள்...
காக்க ஒரு கட்சி உண்டா!

சமுதாய சாக்கடையின்...அடையாள புழுக்களாய்...
தன் பரம்பரை சொத்தாய்...
வறுமையை வாரிசுகளுக்கு...எழுதி வைக்கும்....
காம உச்சத்தின்... அடையாளமாய்...


இனி ஒரு பாரதி ..வருவானா?
உணவில்லா இந்த தனி மனிதர்களுக்காக ..
ஜகத்தினைத்தான் அழிப்பானா?

- சென்னை செல்லும் போது எல்லாம் மிகுந்த மனவருத்தத்தோடு நன் உற்று நோக்கிய விசயம் ..இந்த நடை பாதை குழந்தைகள்! ஒவ்வொரு சிக்னலிலும் நான் காத்திருக்கும் போது...என் கண்கள் கசிவது வாடிக்கையான ஒன்று!

கைக்குழந்தைகளோடு பிச்சை எடுக்கும் பெண்களை நினைக்கும் போது ... வக்கில்லாமல்... இவர்களை வெளிக்கொண்டு வரும் இவர்களின் காமத்தின் மீது கோபம்வரும்; எந்தவித... சம்பந்தமும் இன்றி.. இவர்களை இந்த சூழ் நிலைக்கு தள்ளிய இறைவன் மீது கோபம் வரும்! கார்களிலும் பேருந்திலும், பைக்குகளிலும் லட்ச லட்சமாய் செல்லும் மக்களுக்கு வாடிக்கையான காட்சிகள்தான் இவை என்றாலும்...இந்த நிலையை மாற்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத ... அரசின் மீது கோபம் வரும்!

சாமானிய என் கோபம் என்ன செய்து விடும்... ஒரு கவிதையாவது எழுதலாமே என்ற எண்ணத்தின் விளைவில்..தெரித்த வார்த்தைப் பொறிகள்தான் இந்த கவிதை. எங்காவது ஒரு இடத்தில் எனது சிறு பொறி பட்டு பெரும் தீப்பிழம்பாய் மாறி...வரும் காலங்களில்.. சிறார்கள் எந்த இடத்திலும் பிச்சை எடுக்காமல் இருந்தால் சரிதான்.



தேவா. S

Comments

ரவுத்திரம் தெறிக்கின்றது ...கவிதையில்...!
இந்த ரவுத்திரம் அப்படியே இருக்கட்டும்
எல்லா இடங்களுக்கும் பரவட்டும்...!
ஒருநாள் கண்டிப்பாக கொதித்து வெளிப்படும் ...!
அப்போது இந்த அவலங்கள் அழிந்து விடும்..!

......................................நம்பிக்கையுடன்...!
Chitra said…
இனி ஒரு பாரதி ..வருவானா?
உணவில்லா இந்த தனி மனிதர்களுக்காக ..
ஜகத்தினைத்தான் அழிப்பானா?


........இந்த கோபத்தீ போதுமே!

////கைக்குழந்தைகளோடு பிச்சை எடுக்கும் பெண்களை நினைக்கும் போது ... வக்கில்லாமல்... இவர்களை வெளிக்கொண்டு வரும் இவர்களின் காமத்தின் மீது கோபம்வரும்;////

பல சமயங்களில், அந்த குழந்தைகள், அவர்கள் குழந்தைகளாய் இருப்பதில்லை என்பது கவலைக்குரிய/பிரச்சினைக்குரிய விஷயம்.

பதிவுடன் தந்திருக்கும் பாடலும் பொருத்தம்.
மங்கை said…
word verification eduthurungalean
I am also try to remove this. If anybody ready to give me the join hands.
தேவையான ரௌத்திரம். கொதி நிலை எழுத்தின் நிறமாகவும், திடமாகவும்...

காட்சிகள் மாறட்டும் விரைவில்...
dheva said…
வருகை தந்த எல்லா நண்பர்களுக்கும்....அடியேனின் ... நன்றிகள்!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...