Skip to main content

சிவப்பு சிந்தனை....













வல்லரசு கனவோடு...இந்தியாவின் வருங்காலம்....!
செல்லரித்த...கட்டைகளாய்...
தெருவின் ஓரங்களில்...!
2020லாவது... ஏக்கங்கள் தீராதா....
தெருவோரம்.. பிச்சை என்னும்...தீட்டு நீங்காதா?
கடல் நீரை குடி நீராய்...
மாற்றும் திட்டத்தோடு...
இவர்களின் கண்ணீரை நிறுத்த..ஒரு திட்டமுண்டா...!

எத்தனை தலைமுறைதான்...
தெருமுனையில் ஜனித்து...
நடை பாதையில்... வளர்ந்து...
ஒவ்வொரு சிவப்பு சிக்னலையும்...
வாழ்வாதாரமாக நம்பி வழுமோ?

தெருவோர அகதிகள்....
இவர்களுக்கு ஒரு இயக்கம் உண்டா?
முள்கம்பி இல்லா.. வெற்றிடத்தின்...
ஜன நாயக...அடிமைகள்...
காக்க ஒரு கட்சி உண்டா!

சமுதாய சாக்கடையின்...அடையாள புழுக்களாய்...
தன் பரம்பரை சொத்தாய்...
வறுமையை வாரிசுகளுக்கு...எழுதி வைக்கும்....
காம உச்சத்தின்... அடையாளமாய்...


இனி ஒரு பாரதி ..வருவானா?
உணவில்லா இந்த தனி மனிதர்களுக்காக ..
ஜகத்தினைத்தான் அழிப்பானா?

- சென்னை செல்லும் போது எல்லாம் மிகுந்த மனவருத்தத்தோடு நன் உற்று நோக்கிய விசயம் ..இந்த நடை பாதை குழந்தைகள்! ஒவ்வொரு சிக்னலிலும் நான் காத்திருக்கும் போது...என் கண்கள் கசிவது வாடிக்கையான ஒன்று!

கைக்குழந்தைகளோடு பிச்சை எடுக்கும் பெண்களை நினைக்கும் போது ... வக்கில்லாமல்... இவர்களை வெளிக்கொண்டு வரும் இவர்களின் காமத்தின் மீது கோபம்வரும்; எந்தவித... சம்பந்தமும் இன்றி.. இவர்களை இந்த சூழ் நிலைக்கு தள்ளிய இறைவன் மீது கோபம் வரும்! கார்களிலும் பேருந்திலும், பைக்குகளிலும் லட்ச லட்சமாய் செல்லும் மக்களுக்கு வாடிக்கையான காட்சிகள்தான் இவை என்றாலும்...இந்த நிலையை மாற்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத ... அரசின் மீது கோபம் வரும்!

சாமானிய என் கோபம் என்ன செய்து விடும்... ஒரு கவிதையாவது எழுதலாமே என்ற எண்ணத்தின் விளைவில்..தெரித்த வார்த்தைப் பொறிகள்தான் இந்த கவிதை. எங்காவது ஒரு இடத்தில் எனது சிறு பொறி பட்டு பெரும் தீப்பிழம்பாய் மாறி...வரும் காலங்களில்.. சிறார்கள் எந்த இடத்திலும் பிச்சை எடுக்காமல் இருந்தால் சரிதான்.



தேவா. S

Comments

ரவுத்திரம் தெறிக்கின்றது ...கவிதையில்...!
இந்த ரவுத்திரம் அப்படியே இருக்கட்டும்
எல்லா இடங்களுக்கும் பரவட்டும்...!
ஒருநாள் கண்டிப்பாக கொதித்து வெளிப்படும் ...!
அப்போது இந்த அவலங்கள் அழிந்து விடும்..!

......................................நம்பிக்கையுடன்...!
Chitra said…
இனி ஒரு பாரதி ..வருவானா?
உணவில்லா இந்த தனி மனிதர்களுக்காக ..
ஜகத்தினைத்தான் அழிப்பானா?


........இந்த கோபத்தீ போதுமே!

////கைக்குழந்தைகளோடு பிச்சை எடுக்கும் பெண்களை நினைக்கும் போது ... வக்கில்லாமல்... இவர்களை வெளிக்கொண்டு வரும் இவர்களின் காமத்தின் மீது கோபம்வரும்;////

பல சமயங்களில், அந்த குழந்தைகள், அவர்கள் குழந்தைகளாய் இருப்பதில்லை என்பது கவலைக்குரிய/பிரச்சினைக்குரிய விஷயம்.

பதிவுடன் தந்திருக்கும் பாடலும் பொருத்தம்.
மங்கை said…
word verification eduthurungalean
I am also try to remove this. If anybody ready to give me the join hands.
தேவையான ரௌத்திரம். கொதி நிலை எழுத்தின் நிறமாகவும், திடமாகவும்...

காட்சிகள் மாறட்டும் விரைவில்...
dheva said…
வருகை தந்த எல்லா நண்பர்களுக்கும்....அடியேனின் ... நன்றிகள்!

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...