Skip to main content

கேள்விகளில்...வாழ்கிறேனோ?



















வெள்ளைப் பேப்பரில்...பாலைவனத்து ஒட்டகம் போல...
எப்போதும் ஊறும் என் பேனா....
உனக்காக கடிதம் எழுத திறக்கும் போது...
நயகராவாய்...வார்த்தைகளை இறைப்பது எப்படி?

கூட்டத்தில் இருந்தாலும் தனித்து கிடக்கும் மனது...
உன் நினைவுகளோடு இருக்கும் போது....
திருவிழாவாய் குதுகலிப்பது எப்படி?

ஏதோரு ஒரு உணர்வு....இருக்கும் ஒன்றை...
இல்லாமல் வெளியே... காட்டிக் கொண்டு....
மெளனமாய் மனதுக்குள்...
பூக்களை இறைத்து...விளையாடுவது எப்படி?

வந்து விழும் வார்த்தைகள் எல்லாம்...
உன் நினைவுகளுக்குள்...மூழ்கி வருவதால்...
கவிதையாய் உருமாறி...
காவியமாய் ஜொலிக்கிறதே...எப்படி?

சாரலாய் நீ சிரிக்கும் போது....
சிதறி விழும் முத்துக்களாய்.....
வெளிவரும் சப்தங்கள்...
வேத மந்திரமாய்..என்னை மூர்ச்சையாக்கி...
சமாதி நிலையில் தள்ளுகிறதே...எப்படி?

சூட்சுமமாய் எனைத் தீண்டி...உடலற்ற....
வெட்டவெளியில்...எனைத்தள்ளிவிட்டு..
நினைவுகளால் எனை நிறைத்து....
என் நினைவுகளை நீ அறுத்து....
ஏகாந்த வெளியில் நிரந்தர...மோகத்தில் தள்ளிவிட்டு.....
தூர நின்று சிரிக்கிறாயே....எப்படி?

கேள்விகளால்..மனம் அறுந்து...
உன் குரல் கேட்டு மீண்டும் நான் பிறந்து...
இன்னுமொரு பிறப்பெடுத்து...உன்னைத்தேடி அலைவேனோ....?
ஏதோ ஒரு காலத்தில்...ஒரு..தடிமனான ஜென்மத்தில்...
உன்னை விட்டு வந்த பாவத்தில்...
இப்போது கேள்விகளில்...வாழ்கிறேனோ?


ஒரு பெண் தன்னை நேசிக்கிறாள் என்ற விசயம் ஒருவனுக்குள் ஏகப்பட்ட மாற்றங்களை உருவாக்கும்...அந்த காதலை தியானம் செய்ய செய்ய... கண்டெடுத்த வார்த்தைகளை கோர்த்த போதுதான் இந்த கவிதை கிடைத்தது.

காதலுக்கும், காமத்துக்கும், கடவுளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று காலம் காலமாக எம்மக்களுக்கு தவறாக போதிக்கப்பட்டுள்ளது...! காதலும்...காமமும் தான் இந்த பிரபஞ்சத்தை இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறது...பூமியும் இன்ன பிற .... கோள்களின் மீது சூரியன் வைத்திருக்கும் காதாலால்தான்... நாம் இருக்கிறோம். இது ஒரு சிறிய உதாராணம்... சுகமான காதல் கொள்ளுங்கள் நேர்மையான காமம் கொள்ளுங்கள்...உங்களோடு இறைவன் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்....!


- தேவா.

Comments

Chitra said…
ஏதோ ஒரு காலத்தில்...ஒரு..தடிமனான ஜென்மத்தில்...
உன்னை விட்டு வந்த பாவத்தில்...
இப்போது கேள்விகளில்...வாழ்கிறேனோ?

............ கவிதை நீர்வீழ்ச்சியில், உங்கள் உணர்வுகளும் கருத்துக்களும் விழும் விதம், அருமை. பாராட்டுக்கள்!
ஆர்வா said…
வித்தியாசமான கோணம்.. அருமை
DREAMER said…
வித்தியாசமான கவிதை வரிகள்..!
Dr. Srjith. said…
அருமை அருமை நண்பரே
dheva said…
வருகை தந்த எல்லா நண்பர்களுக்கும்....அடியேனின் ... நன்றிகள்!
Anonymous said…
// சுகமான காதல் கொள்ளுங்கள் நேர்மையான காமம் கொள்ளுங்கள்...உங்களோடு இறைவன் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்....!//

இப்படியான உங்களின் புரிதல்கள் எல்லோருக்கும் வருவது கடினம். ஆழமான கவிதையும் அதன் பின்னான வரிகளும் பாடம் சொல்லி கொடுக்கிறது.

நன்றி

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...