Skip to main content

கேள்விகளில்...வாழ்கிறேனோ?



















வெள்ளைப் பேப்பரில்...பாலைவனத்து ஒட்டகம் போல...
எப்போதும் ஊறும் என் பேனா....
உனக்காக கடிதம் எழுத திறக்கும் போது...
நயகராவாய்...வார்த்தைகளை இறைப்பது எப்படி?

கூட்டத்தில் இருந்தாலும் தனித்து கிடக்கும் மனது...
உன் நினைவுகளோடு இருக்கும் போது....
திருவிழாவாய் குதுகலிப்பது எப்படி?

ஏதோரு ஒரு உணர்வு....இருக்கும் ஒன்றை...
இல்லாமல் வெளியே... காட்டிக் கொண்டு....
மெளனமாய் மனதுக்குள்...
பூக்களை இறைத்து...விளையாடுவது எப்படி?

வந்து விழும் வார்த்தைகள் எல்லாம்...
உன் நினைவுகளுக்குள்...மூழ்கி வருவதால்...
கவிதையாய் உருமாறி...
காவியமாய் ஜொலிக்கிறதே...எப்படி?

சாரலாய் நீ சிரிக்கும் போது....
சிதறி விழும் முத்துக்களாய்.....
வெளிவரும் சப்தங்கள்...
வேத மந்திரமாய்..என்னை மூர்ச்சையாக்கி...
சமாதி நிலையில் தள்ளுகிறதே...எப்படி?

சூட்சுமமாய் எனைத் தீண்டி...உடலற்ற....
வெட்டவெளியில்...எனைத்தள்ளிவிட்டு..
நினைவுகளால் எனை நிறைத்து....
என் நினைவுகளை நீ அறுத்து....
ஏகாந்த வெளியில் நிரந்தர...மோகத்தில் தள்ளிவிட்டு.....
தூர நின்று சிரிக்கிறாயே....எப்படி?

கேள்விகளால்..மனம் அறுந்து...
உன் குரல் கேட்டு மீண்டும் நான் பிறந்து...
இன்னுமொரு பிறப்பெடுத்து...உன்னைத்தேடி அலைவேனோ....?
ஏதோ ஒரு காலத்தில்...ஒரு..தடிமனான ஜென்மத்தில்...
உன்னை விட்டு வந்த பாவத்தில்...
இப்போது கேள்விகளில்...வாழ்கிறேனோ?


ஒரு பெண் தன்னை நேசிக்கிறாள் என்ற விசயம் ஒருவனுக்குள் ஏகப்பட்ட மாற்றங்களை உருவாக்கும்...அந்த காதலை தியானம் செய்ய செய்ய... கண்டெடுத்த வார்த்தைகளை கோர்த்த போதுதான் இந்த கவிதை கிடைத்தது.

காதலுக்கும், காமத்துக்கும், கடவுளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று காலம் காலமாக எம்மக்களுக்கு தவறாக போதிக்கப்பட்டுள்ளது...! காதலும்...காமமும் தான் இந்த பிரபஞ்சத்தை இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறது...பூமியும் இன்ன பிற .... கோள்களின் மீது சூரியன் வைத்திருக்கும் காதாலால்தான்... நாம் இருக்கிறோம். இது ஒரு சிறிய உதாராணம்... சுகமான காதல் கொள்ளுங்கள் நேர்மையான காமம் கொள்ளுங்கள்...உங்களோடு இறைவன் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்....!


- தேவா.

Comments

Chitra said…
ஏதோ ஒரு காலத்தில்...ஒரு..தடிமனான ஜென்மத்தில்...
உன்னை விட்டு வந்த பாவத்தில்...
இப்போது கேள்விகளில்...வாழ்கிறேனோ?

............ கவிதை நீர்வீழ்ச்சியில், உங்கள் உணர்வுகளும் கருத்துக்களும் விழும் விதம், அருமை. பாராட்டுக்கள்!
ஆர்வா said…
வித்தியாசமான கோணம்.. அருமை
DREAMER said…
வித்தியாசமான கவிதை வரிகள்..!
Dr. Srjith. said…
அருமை அருமை நண்பரே
dheva said…
வருகை தந்த எல்லா நண்பர்களுக்கும்....அடியேனின் ... நன்றிகள்!
Anonymous said…
// சுகமான காதல் கொள்ளுங்கள் நேர்மையான காமம் கொள்ளுங்கள்...உங்களோடு இறைவன் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்....!//

இப்படியான உங்களின் புரிதல்கள் எல்லோருக்கும் வருவது கடினம். ஆழமான கவிதையும் அதன் பின்னான வரிகளும் பாடம் சொல்லி கொடுக்கிறது.

நன்றி

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...