Skip to main content

நீ இல்லாத நேரங்களில்….












நீ இல்லாத நேரங்களில்….
மெளனமான பொழுதுகளில்தான்...
மனம் ஒரு குழந்தையைப்போல விழிக்கிறது....
பூக்களிலிருந்து பரவும் வாசம் போல...
அத்துமீறி என்னை ஆக்கிரமிக்கிறது...காதல்....
ஒரு குழந்தையைப் போல...முரண்டு பிடித்து...
மீண்டும் மீண்டும்....
உன் நினைவுகளை என்னுள் கொட்டி…
மார்கழி குளிராய் மனது நிறைக்கிறது......
கரை தொடும் அலைகள் போல...
ஒவ்வொரு நினைவும்...
தவணை முறையில்..
நெஞ்சம் நனைக்கின்றன...
ஒவ்வொரு நிமிடத்தையும்
நகர வைத்து
உன்னைவிட்டு நகர மறுக்கிறது... மனது!
நீ இல்லாத நேரங்களில் தான்....
உன் நினைவு அதிகமாயிருக்கிறது...
இன்னும் சொல்லப்போனால்...
அது நீ இருப்பதை விட .... சுகமாயிருக்கிறது....!

நீங்ககள் உற்று நோக்கி கவனித்து இருந்தால்...காதலிக்கும் தருணங்களில்...காதலி அருகில் இருக்கும் நேரங்கள் பெரும்பாலும் அவளது இருப்பை நமக்கு உணர்த்துவது இல்லை. மனைவியோ அல்லது காதலியோ இல்லாத போது அந்த வலி கொடுக்கும் சுகமே அலாதிதான்.

காத்திருக்கும் நேரங்களில் தான் காதலை உணர முடியும்... அப்போது காதல் என்பது நமக்குள் இருப்பது...அதை தூண்டும் சக்தியாகத்தான் ஒரு பெண் இருக்க முடியும் என்று..புரிந்து கொள்ள முடிந்தது. அப்படியான ஒரு காதலின் சக்தி எனை ஆளுமை செய்த தருணத்தி....தவழ்ந்து வந்தது தான் இந்த கவிதைக்குழந்தை.........!


- தேவா. S

Comments

///மனைவியோ அல்லது காதலியோ இல்லாத போது அந்த வலி கொடுக்கும் சுகமே அலாதிதான்.//

அருமை...!
அருமை. வாழ்த்துக்கள்
dheva said…
Thanks Jeevan & Saravanan!
{{{{இல்லாத நேரங்களில் தான்....
உன் நினைவு அதிகமாயிருக்கிறது...
இன்னும் சொல்லப்போனால்...
அது நீ இருப்பதை விட .... சுகமாயிருக்கிறது....!}}}}

அருமையான கவிதை நண்பரே!!!
dheva said…
வருகை தந்த எல்லா நண்பர்களுக்கும்....அடியேனின் ... நன்றிகள்!
Anonymous said…
//ஒவ்வொரு நிமிடத்தையும்
நகர வைத்து
உன்னைவிட்டு நகர மறுக்கிறது... மனது!
நீ இல்லாத நேரங்களில் தான்....
உன் நினைவு அதிகமாயிருக்கிறது...//

unmai.
///நீ இல்லாத நேரங்களில் தான்....
உன் நினைவு அதிகமாயிருக்கிறது...
இன்னும் சொல்லப்போனால்...
அது நீ இருப்பதை விட .... சுகமாயிருக்கிறது....!//

ஹ்ம்ம்ம் ..... அழகான கவிதைக் குழந்தை.. :-))

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...