Skip to main content

இது என்ன மாயமடி?













ஒரு மழைக்கால முன்னிரவின்..
இருண்ட வனமும்..
"சோ" வென்று பெய்த...மழையும்....
நீ இல்லாத வெறுமையை....அதிகமாக்கின....!

உன் காதல் பார்வையின்....
கதிர்வீச்சில்... பஸ்பமானது என் இதயம்!
உன் உதட்டோர மச்சமும்...
நெற்றி விழும் முடியும்...
கூரான நாசியும், கவனமாய்...
என் கவிதைகளுக்கு ...கருவாகின்றன....!

ஓவியமாய் தலைசாய்த்து....
ஒய்யாரமாய் நீ ... பார்க்கும்..
காவியக் காட்சியினை...
விவரிக்கத் தெரியாமல்...
மெளனக் கடலில்...குதித்து...
தற்கொலை செய்து கொள்கின்றன....
வார்த்தைகள்...!

உன் விரல்களால்...
என் தலை கோதி....
சமாதி நிலைக்குள்...கண நேரம்....
எனைத் தள்ளி....
கல கல சிரிப்பொலியால்..
மீண்டும் எனை மீட்டெடுத்த..
கணங்களை விட்டு...மீளவேயில்லை நான்!

கவிதையாய்
உன் இமை துடித்த
ஒவ்வொரு வினாடியையும்..
நினைத்து நினைத்து...
பட படக்கிறது என் இதயம்!
எல்லா வார்த்தைகளையும்
வாசிக்க தெரிந்த எனக்கு....
உன் பெயரை....மட்டும்....
ஏன் சுவாசிக்கத்தான் முடிகிறது....!

என் இமைகளுக்குள் எப்போதும் நீ...
அதனால்தான்...பகல் முழுதும்...
உன்னைத் தொட்டு விளையாடியும்....
இரவுகளில் அணைத்துகொண்டும்...
உறங்குகிறேன்!

என் வார்த்தைகளை எல்லாம்..
கூர் தீட்டி...கவனமாய் கவிதையாக்கி...
உனை வெல்ல யுத்திசெய்தால்...
உன் மெளனம் என்னும்...
வார்த்தையில்லா கவிதைகள் எல்லாம்...
எனை வென்று விடுகிறதே இது என்ன மாயமடி?


சில பார்வைகளின் வீச்சில் சட்டென்று உள்ளம் தீப்பிடித்துக் கொள்ளும்...அப்படி ஏற்படும் ஒரு உணர்வை தனக்குள் வைத்துக் கொள்ள முடியாமல்... திணறும் ஒருவனின் மனோ நிலைதான் இந்தக் கவிதை.

காதல் வயப்பட்ட ஒரு மனிதனுக்கு.... தன் காதலியின் அசைவுகள் எல்லாமே..ஒரு கவிதைதான்... எல்லா நேரங்களிலும் தன்னிடம் நேசம் ஒரு பெண்ணை காதலியாகவே கொள்ளும் ஒருவன் சந்தோசமான ஒரு வாழ்க்கையினை வாழ முடியும். குறைகள் எத்தனை இருந்தாலும் காதல் அதை மறைத்து விடும் அல்லது மாற்றிவிடும்.

எனது கவிதை நாயகனும் அப்படித்தான்..... மழை பெய்யும் ஒரு முன்னிரவில் அந்த வெறுமை அவனது காதலி பற்றிய ஞாபங்களை கிளறிவிட...வெளியே பெய்த மழையை விட... இவனுள் பெய்த கவிதை மழை ரொம்ப சுவையாய் போனது. காதலைப் பற்றி வார்த்தைகளில் விவர்க்க முடியாமால் இவனின் வார்த்தைகள் எல்லாம் மெளனம் என்னும் கடலி விழுந்து தற்கொலை செய்த பின் இவனிடமும் மெளனமே எஞ்சி நிற்கிறது.


காதல் ஒரு அற்புதமான உணர்வு....அது ஆணையும் பெண்ணையும் சங்கமிக்க செய்யும் கடவுளின் ஆசிர்வாதம்....காதலுக்குள் சென்று நிதானமாய் சுற்றிப் பார்க்கும் அல்லது பார்த்து உணர்ந்த அனைவருக்கும் நன்றாகவே தெரியும் கடவுள் யாரென்று.....? மழை பெய்த பின்பு....மரத்திற்கு கீழே நின்று மரம் உலுக்கி... நனைவது போல...அர்த்தங்களையும் ஆராய்ச்சியும் இல்லாமல்....உங்கள் விழிகளால் இந்த கவிதையை உள் வாங்கி.. உள்ளத்தால்.... உலுக்கி உங்களை பரவசமாக்கிக்கொள்ளுங்கள்!

அற்புதமான உங்களின் இந்த பயணம் உங்களை....சாந்தப்படுத்தட்டும்...!




தேவா. S

Comments

AltF9 Admin said…
Super ..... change se illai ,
காதல் ஒரு அற்புதமான உணர்வு....அது ஆணையும் பெண்ணையும் சங்கமிக்க செய்யும் கடவுளின் ஆசிர்வாதம்....காதலுக்குள் சென்று நிதானமாய் சுற்றிப் பார்க்கும் அல்லது பார்த்து உணர்ந்த அனைவருக்கும் நன்றாகவே தெரியும் கடவுள் யாரென்று.....? மழை பெய்த பின்பு....மரத்திற்கு கீழே நின்று மரம் உலுக்கி... நனைவது போல...அர்த்தங்களையும் ஆராய்ச்சியும் இல்லாமல்....உங்கள் விழிகளால் இந்த கவிதையை உள் வாங்கி.. உள்ளத்தால்.... உலுக்கி உங்களை பரவசமாக்கிக்கொள்ளுங்கள்!

intha varila nikkiranna , speed da poikiddu iruntha valkaila oru u turn poddu vanddiya thiruppina maathiri irukku .... sariiiiiiiiiii....
///ஓவியமாய் தலைசாய்த்து....
ஒய்யாரமாய் நீ ... பார்க்கும்..
காவியக் காட்சியினை...
விவரிக்கத் தெரியாமல்...
மெளனக் கடலில்...குதித்து...
தற்கொலை செய்து கொள்கின்றன....
வார்த்தைகள்...!///


அருமை...!
சிகரம் தொட்டு இருக்கின்றது கவிதை ...!
பெருமையாய் இருக்கிறது தேவன்..!
தொடருங்கள்...!
// உன் மெளனம் என்னும்...
வார்த்தையில்லா கவிதைகள் எல்லாம்...
எனை வென்று விடுகிறதே இது என்ன மாயமடி? //

ரொம்ப அழகான வரிகள்..
ரசித்தேன்.. வாழ்த்துக்கள்..
Chitra said…
காதல் வயப்பட்ட ஒரு மனிதனுக்கு.... தன் காதலியின் அசைவுகள் எல்லாமே..ஒரு கவிதைதான்... எல்லா நேரங்களிலும் தன்னிடம் நேசம் ஒரு பெண்ணை காதலியாகவே கொள்ளும் ஒருவன் சந்தோசமான ஒரு வாழ்க்கையினை வாழ முடியும். குறைகள் எத்தனை இருந்தாலும் காதல் அதை மறைத்து விடும் அல்லது மாற்றிவிடும்.


..... தேவா, உங்கள் கவிதையும் அழகு. அந்த கவிதையின் கருவை, நீங்கள் விளக்கி இருக்கும் விதமும் அழகு. தேவாவின் எழுத்துக்கள், நாள் ஆக நாள் ஆக மெருகேறிக் கொண்டே வருகிறது. மிகுந்த சந்தோஷத்துடன், பாராட்டுக்கள்!
Chitra said…
Your blog post opens faster now. Thank you for fixing it. :-)

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...