Skip to main content

இது என்ன மாயமடி?













ஒரு மழைக்கால முன்னிரவின்..
இருண்ட வனமும்..
"சோ" வென்று பெய்த...மழையும்....
நீ இல்லாத வெறுமையை....அதிகமாக்கின....!

உன் காதல் பார்வையின்....
கதிர்வீச்சில்... பஸ்பமானது என் இதயம்!
உன் உதட்டோர மச்சமும்...
நெற்றி விழும் முடியும்...
கூரான நாசியும், கவனமாய்...
என் கவிதைகளுக்கு ...கருவாகின்றன....!

ஓவியமாய் தலைசாய்த்து....
ஒய்யாரமாய் நீ ... பார்க்கும்..
காவியக் காட்சியினை...
விவரிக்கத் தெரியாமல்...
மெளனக் கடலில்...குதித்து...
தற்கொலை செய்து கொள்கின்றன....
வார்த்தைகள்...!

உன் விரல்களால்...
என் தலை கோதி....
சமாதி நிலைக்குள்...கண நேரம்....
எனைத் தள்ளி....
கல கல சிரிப்பொலியால்..
மீண்டும் எனை மீட்டெடுத்த..
கணங்களை விட்டு...மீளவேயில்லை நான்!

கவிதையாய்
உன் இமை துடித்த
ஒவ்வொரு வினாடியையும்..
நினைத்து நினைத்து...
பட படக்கிறது என் இதயம்!
எல்லா வார்த்தைகளையும்
வாசிக்க தெரிந்த எனக்கு....
உன் பெயரை....மட்டும்....
ஏன் சுவாசிக்கத்தான் முடிகிறது....!

என் இமைகளுக்குள் எப்போதும் நீ...
அதனால்தான்...பகல் முழுதும்...
உன்னைத் தொட்டு விளையாடியும்....
இரவுகளில் அணைத்துகொண்டும்...
உறங்குகிறேன்!

என் வார்த்தைகளை எல்லாம்..
கூர் தீட்டி...கவனமாய் கவிதையாக்கி...
உனை வெல்ல யுத்திசெய்தால்...
உன் மெளனம் என்னும்...
வார்த்தையில்லா கவிதைகள் எல்லாம்...
எனை வென்று விடுகிறதே இது என்ன மாயமடி?


சில பார்வைகளின் வீச்சில் சட்டென்று உள்ளம் தீப்பிடித்துக் கொள்ளும்...அப்படி ஏற்படும் ஒரு உணர்வை தனக்குள் வைத்துக் கொள்ள முடியாமல்... திணறும் ஒருவனின் மனோ நிலைதான் இந்தக் கவிதை.

காதல் வயப்பட்ட ஒரு மனிதனுக்கு.... தன் காதலியின் அசைவுகள் எல்லாமே..ஒரு கவிதைதான்... எல்லா நேரங்களிலும் தன்னிடம் நேசம் ஒரு பெண்ணை காதலியாகவே கொள்ளும் ஒருவன் சந்தோசமான ஒரு வாழ்க்கையினை வாழ முடியும். குறைகள் எத்தனை இருந்தாலும் காதல் அதை மறைத்து விடும் அல்லது மாற்றிவிடும்.

எனது கவிதை நாயகனும் அப்படித்தான்..... மழை பெய்யும் ஒரு முன்னிரவில் அந்த வெறுமை அவனது காதலி பற்றிய ஞாபங்களை கிளறிவிட...வெளியே பெய்த மழையை விட... இவனுள் பெய்த கவிதை மழை ரொம்ப சுவையாய் போனது. காதலைப் பற்றி வார்த்தைகளில் விவர்க்க முடியாமால் இவனின் வார்த்தைகள் எல்லாம் மெளனம் என்னும் கடலி விழுந்து தற்கொலை செய்த பின் இவனிடமும் மெளனமே எஞ்சி நிற்கிறது.


காதல் ஒரு அற்புதமான உணர்வு....அது ஆணையும் பெண்ணையும் சங்கமிக்க செய்யும் கடவுளின் ஆசிர்வாதம்....காதலுக்குள் சென்று நிதானமாய் சுற்றிப் பார்க்கும் அல்லது பார்த்து உணர்ந்த அனைவருக்கும் நன்றாகவே தெரியும் கடவுள் யாரென்று.....? மழை பெய்த பின்பு....மரத்திற்கு கீழே நின்று மரம் உலுக்கி... நனைவது போல...அர்த்தங்களையும் ஆராய்ச்சியும் இல்லாமல்....உங்கள் விழிகளால் இந்த கவிதையை உள் வாங்கி.. உள்ளத்தால்.... உலுக்கி உங்களை பரவசமாக்கிக்கொள்ளுங்கள்!

அற்புதமான உங்களின் இந்த பயணம் உங்களை....சாந்தப்படுத்தட்டும்...!




தேவா. S

Comments

AltF9 Admin said…
Super ..... change se illai ,
காதல் ஒரு அற்புதமான உணர்வு....அது ஆணையும் பெண்ணையும் சங்கமிக்க செய்யும் கடவுளின் ஆசிர்வாதம்....காதலுக்குள் சென்று நிதானமாய் சுற்றிப் பார்க்கும் அல்லது பார்த்து உணர்ந்த அனைவருக்கும் நன்றாகவே தெரியும் கடவுள் யாரென்று.....? மழை பெய்த பின்பு....மரத்திற்கு கீழே நின்று மரம் உலுக்கி... நனைவது போல...அர்த்தங்களையும் ஆராய்ச்சியும் இல்லாமல்....உங்கள் விழிகளால் இந்த கவிதையை உள் வாங்கி.. உள்ளத்தால்.... உலுக்கி உங்களை பரவசமாக்கிக்கொள்ளுங்கள்!

intha varila nikkiranna , speed da poikiddu iruntha valkaila oru u turn poddu vanddiya thiruppina maathiri irukku .... sariiiiiiiiiii....
///ஓவியமாய் தலைசாய்த்து....
ஒய்யாரமாய் நீ ... பார்க்கும்..
காவியக் காட்சியினை...
விவரிக்கத் தெரியாமல்...
மெளனக் கடலில்...குதித்து...
தற்கொலை செய்து கொள்கின்றன....
வார்த்தைகள்...!///


அருமை...!
சிகரம் தொட்டு இருக்கின்றது கவிதை ...!
பெருமையாய் இருக்கிறது தேவன்..!
தொடருங்கள்...!
// உன் மெளனம் என்னும்...
வார்த்தையில்லா கவிதைகள் எல்லாம்...
எனை வென்று விடுகிறதே இது என்ன மாயமடி? //

ரொம்ப அழகான வரிகள்..
ரசித்தேன்.. வாழ்த்துக்கள்..
Chitra said…
காதல் வயப்பட்ட ஒரு மனிதனுக்கு.... தன் காதலியின் அசைவுகள் எல்லாமே..ஒரு கவிதைதான்... எல்லா நேரங்களிலும் தன்னிடம் நேசம் ஒரு பெண்ணை காதலியாகவே கொள்ளும் ஒருவன் சந்தோசமான ஒரு வாழ்க்கையினை வாழ முடியும். குறைகள் எத்தனை இருந்தாலும் காதல் அதை மறைத்து விடும் அல்லது மாற்றிவிடும்.


..... தேவா, உங்கள் கவிதையும் அழகு. அந்த கவிதையின் கருவை, நீங்கள் விளக்கி இருக்கும் விதமும் அழகு. தேவாவின் எழுத்துக்கள், நாள் ஆக நாள் ஆக மெருகேறிக் கொண்டே வருகிறது. மிகுந்த சந்தோஷத்துடன், பாராட்டுக்கள்!
Chitra said…
Your blog post opens faster now. Thank you for fixing it. :-)

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...