
அர்த்தம் இல்லாத கவிதைதான் இது.....காதலுக்கு அர்த்தம் தேடினால்.... நமக்கு சிக்குவது எல்லாம்....குழந்தைத்தனமாகத்தான்....இருக்கும்! அப்படித்தான் இந்த கவிதையும்.....
காதலியை பார்த்து விட்டு....தன் வீடு நோக்கி திரும்பும் ஒரு கிராமத்து இளைஞன்...அவள் காதலிக்கிறாளா இல்லையா என்று கூட இவனுக்குத் தெரியாது....ஆனால் அவளைப் பற்றிய நினைவுகள் அழுந்தப் பதிந்துவிட்டன இவனது மனதில்....அதனால் தான் சில் வண்டு சப்தம் கூட இவனை கேலி செய்வது போல தோன்றுகிறது.....
சாராலாய் அவனைச் சுற்றி ஏற்பட்ட சூழ் நிலையும் அவனது காதலை ஊக்குவிக்கும் வினையூக்கி ஆகிப் போனதுதான் அழகு.....! சூழலுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்... வசதியாய்....பிறகு படியுங்கள் கவிதையை.....அர்த்தங்கள் பிடிபடலாம்.....அழகாக.....!
அது ஒரு மழை நேரத்து...
மாலை நேரம்-என்
ஒற்றையடிப்பாதை....
நடையோடு துணைக்கு வந்த ...
நிலாவையும்...தாண்டி...
பின் தொடர்ந்தன...உன் நினைவுகள்...
வழி நெடுகிலும்.. நடை பயின்று..
ஒயிலாய்...வந்த...
ஒரு ஊதக் காற்று...
காதோரம் வந்து....
உன் பெயரை...கிசு கிசுத்து விட்டு...
ஓடி மறைந்தது.....!
தூரத்திலிருந்து...
ஒரு நட்சத்திரம்....
உன்னைப் போலவே...
கண்டும் காணாமல்....கண் சிமிட்டி
எந்த நேரமும்....போய்விடுவேன்
என்று பயமுறுத்தியது!
என் சிந்தனைகள்.....
உன்னிடமே சிக்கி இருப்பதால்
பக்கத்தில் நகர்ந்து செல்லும்....
ஆட்டு மந்தை...போல...
வெறுமனே... நானும் நகர்கிறேன்...
மந்தையில் ஒருவனாய்....
சில் வண்டுகள்... எல்லாம்....கூடி
தூறிக் கொண்டிருக்கும்...மழையையும்...
காதல் சாரல் வீசிக் கொண்டிருக்கும்...
என் மனதையும் கிண்டல் செய்து....
தொடங்கி விட்டன ..சப்தத்தை!
எத்தனை முறை....
மாற்றிப் பார்த்தாலும்...
கட்டவிழ்ந்த கன்று போல...
உன்னை நோக்கிப் பாய்கிறது...
என் மனது!
யாரின் சப்தமோ...
நிசப்தத்தை கிழித்து
யாரையோ தேடுகிறது...
காற்றில்!
இருட்டான வானமும்..
என் மனமும்...
போட்டிப் போட்டு....
கனத்து கிடந்தன...
நான் வெறுமனே நடக்கிறேன்...
காதல்...பெய்விக்கிறது....
மழையை எனக்குள்ளேயும்!
தேவா. S
Comments
.....Get comfortable - relax - taste the goodness of love. :-)
(P.S.: Dheva, Again it took a very long....... time to load the page this time. )
again i put music....by mistake! I removed it now....n for sure will not repeat it! Thanks for ur info.!
மாற்றிப் பார்த்தாலும்...
கட்டவிழ்ந்த கன்று போல...
உன்னை நோக்கிப் பாய்கிறது...
என் மனது! //
ஹ்ம்ம் ஹ்ம்ம்.. அழகான உணர்வு..
படித்த வேளையில் உணர்ந்தேன்..
சூழலுடன் இணைந்த கவிதை அருமை.. :-)
(Hii. I had the same problem Dheva.. i refreshed the page so many times.. to put this comment..
irunthalum comment podaama vidratha illa :-) )
மழையை எனக்குள்ளேயும்!//
எனக்குள்ளேயும்
I think prob occured the due to the music file i added......! I removed it already.....hope now its working fin!
Thank you somuch for ur concern.....appreciated!
Kadanthu vanthathu verum vartthaigalaiyo, neengal sonnathupol arthamatra kavithaiyaiyo alla..
aanantha peruveliyai, iyalbaai kathalai uthirkkum pasumaratthai, oru amaithiyaana kaathalaal samaitthu vaikkappatta soozhnilaiyai..
soolnilaiyodu inainthu naanum kaathalagipponen..
Love You Bro :)