Skip to main content

சில்லுன்னு ஒரு.....காதல்.....!















அர்த்தம் இல்லாத கவிதைதான் இது.....காதலுக்கு அர்த்தம் தேடினால்.... நமக்கு சிக்குவது எல்லாம்....குழந்தைத்தனமாகத்தான்....இருக்கும்! அப்படித்தான் இந்த கவிதையும்.....

காதலியை பார்த்து விட்டு....தன் வீடு நோக்கி திரும்பும் ஒரு கிராமத்து இளைஞன்...அவள் காதலிக்கிறாளா இல்லையா என்று கூட இவனுக்குத் தெரியாது....ஆனால் அவளைப் பற்றிய நினைவுகள் அழுந்தப் பதிந்துவிட்டன இவனது மனதில்....அதனால் தான் சில் வண்டு சப்தம் கூட இவனை கேலி செய்வது போல தோன்றுகிறது.....

சாராலாய் அவனைச் சுற்றி ஏற்பட்ட சூழ் நிலையும் அவனது காதலை ஊக்குவிக்கும் வினையூக்கி ஆகிப் போனதுதான் அழகு.....! சூழலுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்... வசதியாய்....பிறகு படியுங்கள் கவிதையை.....அர்த்தங்கள் பிடிபடலாம்.....அழகாக.....!

அது ஒரு மழை நேரத்து...
மாலை நேரம்-என்
ஒற்றையடிப்பாதை....
நடையோடு துணைக்கு வந்த ...
நிலாவையும்...தாண்டி...
பின் தொடர்ந்தன...உன் நினைவுகள்...

வழி நெடுகிலும்.. நடை பயின்று..
ஒயிலாய்...வந்த...
ஒரு ஊதக் காற்று...
காதோரம் வந்து....
உன் பெயரை...கிசு கிசுத்து விட்டு...
ஓடி மறைந்தது.....!

தூரத்திலிருந்து...
ஒரு நட்சத்திரம்....
உன்னைப் போலவே...
கண்டும் காணாமல்....கண் சிமிட்டி
எந்த நேரமும்....போய்விடுவேன்
என்று பயமுறுத்தியது!

என் சிந்தனைகள்.....
உன்னிடமே சிக்கி இருப்பதால்
பக்கத்தில் நகர்ந்து செல்லும்....
ஆட்டு மந்தை...போல...
வெறுமனே... நானும் நகர்கிறேன்...
மந்தையில் ஒருவனாய்....

சில் வண்டுகள்... எல்லாம்....கூடி
தூறிக் கொண்டிருக்கும்...மழையையும்...
காதல் சாரல் வீசிக் கொண்டிருக்கும்...
என் மனதையும் கிண்டல் செய்து....
தொடங்கி விட்டன ..சப்தத்தை!
எத்தனை முறை....
மாற்றிப் பார்த்தாலும்...
கட்டவிழ்ந்த கன்று போல...
உன்னை நோக்கிப் பாய்கிறது...
என் மனது!

யாரின் சப்தமோ...
நிசப்தத்தை கிழித்து
யாரையோ தேடுகிறது...
காற்றில்!
இருட்டான வானமும்..
என் மனமும்...
போட்டிப் போட்டு....
கனத்து கிடந்தன...
நான் வெறுமனே நடக்கிறேன்...
காதல்...பெய்விக்கிறது....
மழையை எனக்குள்ளேயும்!


தேவா. S

Comments

Chitra said…
சாராலாய் அவனைச் சுற்றி ஏற்பட்ட சூழ் நிலையும் அவனது காதலை ஊக்குவிக்கும் வினையூக்கி ஆகிப் போனதுதான் அழகு.....! சூழலுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்... வசதியாய்...


.....Get comfortable - relax - taste the goodness of love. :-)

(P.S.: Dheva, Again it took a very long....... time to load the page this time. )
dheva said…
Sorry Chitra....

again i put music....by mistake! I removed it now....n for sure will not repeat it! Thanks for ur info.!
//எத்தனை முறை....
மாற்றிப் பார்த்தாலும்...
கட்டவிழ்ந்த கன்று போல...
உன்னை நோக்கிப் பாய்கிறது...
என் மனது! //

ஹ்ம்ம் ஹ்ம்ம்.. அழகான உணர்வு..
படித்த வேளையில் உணர்ந்தேன்..
சூழலுடன் இணைந்த கவிதை அருமை.. :-)

(Hii. I had the same problem Dheva.. i refreshed the page so many times.. to put this comment..
irunthalum comment podaama vidratha illa :-) )
prince said…
//காதல்...பெய்விக்கிறது....
மழையை எனக்குள்ளேயும்!//

எனக்குள்ளேயும்
dheva said…
Thanks Ananthi....

I think prob occured the due to the music file i added......! I removed it already.....hope now its working fin!

Thank you somuch for ur concern.....appreciated!
Anna... 3 aandugal kadanthu oru pathivukkana pinnoottam..

Kadanthu vanthathu verum vartthaigalaiyo, neengal sonnathupol arthamatra kavithaiyaiyo alla..

aanantha peruveliyai, iyalbaai kathalai uthirkkum pasumaratthai, oru amaithiyaana kaathalaal samaitthu vaikkappatta soozhnilaiyai..

soolnilaiyodu inainthu naanum kaathalagipponen..

Love You Bro :)

Popular posts from this blog

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...