Skip to main content

இன்னுமொரு...தாஜ்மஹால்....!


உன் நினைவுகள்
கொண்டே..இரவுகள்...
உடைக்கப்படுகின்றன...
காமம் இல்லா காதலாக..
ஒவ்வொரு கணமும் நாம் கடக்க...
நட்பின் பரிமாணங்கள்...
சூரியக்கதிர்களாய்...
நம்முள் எட்டிப்பாய்கின்றன...!

அர்த்தம் பொதிந்த...
உன் மெளனங்களொடு.....
நட்பாய். ...கரம் கோர்க்கும்
கணங்களில்....
காமம் அங்கே...
தற்கொலை செய்யும்...!

காதல் காதல்...என்று...
பெண்ணை...
காமத்திற்கு இழுக்கும்...
சமுதாயத்தில்....நட்பு ... நட்பு
என்று சொல்லி
காதலை என்னுள் நிறைப்பாய்!

உன் வார்த்தைகள்...
என்னை வெல்லும்....
கணங்களில் எல்லாம்...
நான் வாழ்க்கையை வென்றிருக்கிறேன்....!
உன் தோள் சாயும் தருணங்கள்....
தாய்மையை எனக்குள்...
ஊற்றி நிறைக்கும்!

ஆணாதிக்க சமுதாயத்தில்...
ஒன்று.. பெண் கூடுவதற்கு....
அல்லது....சுமைகளை...கூட்டுவதற்கு...
இன்று...திருமண பந்தங்கள்...
நம் நட்புக்கு நெருப்பு வைத்தன...
சம்பிரதாய கழுகுகள்...
பார்வைகளால் கொத்தி தின்றன...

மரபு மரபு என்று...
உன் திருமணத்திற்குப் பிறகு...
பிரிவுகளின் பின்னே ..
மெளனமாய்..
ஓடி ஒளிந்தது... நம் நட்பு!
ஆளுமை செய்ய...
அடையாளம் இட்டுக்கொண்ட
உறவுகளுக்கு மத்தியில்...
சர்சையாகிப் போனது...
ஆண் பெண் நட்பு!

நெருப்பாய் என்னை நேசித்த...
நீ..இன்று நெருங்க முடியா தூரத்தில்
திருமணம் நட்புக்கு முற்றுப்புள்ளியா?
நட்பென்றால் என்ன...
வெறும்.... வெற்றுப் புள்ளியா?
கேள்விகளால்...
எரிந்து சாம்பலானது... மூளை...!

நகர்ந்து போன நாட்களில்
கவனமாய் சேர்த்து வைத்த...
நினைவுகளில்...மெளனமாய்..
எழுப்புகிறேன்... நட்புக்கான...
இன்னுமொரு தாஜ்மஹாலை...!


இன்னமும் சர்ச்சைக்குரிய ஒரு விசயமாகத்தான் இருக்கிறது ஆண் பெண் நட்பு. ஆணும் ஆணும் மட்டுமே நட்பு கொள்ள வேண்டும் அல்லது பெண்ணும் பெண்ணும் நட்பு கொண்டிருக்க வேண்டும் என்று நமது மூளை பழக்கப்பட்டு போனதும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நெறிப்படுத்தி வைத்ததும்...ஆணின் அத்துமீறலாம் ஏற்பட்ட ஒரு பழக்கமாகத்தான் இருக்க வேண்டும். நம்மை சுற்றி இருக்கும் எல்ல விசங்களிலும் பயன்பாட்டின் தன்மையை பொறுத்து அது நன்மை தீமை என்று பிரிக்கிறோம். உதாரணமாக இணையத்தின் பயன்பாடு என்பது...தீங்கு விளைவிக்க நினைப்பவர்களுக்கு எதிர்மறையான பயன் பாடும்....அதை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்துபவர்களக்கு நேர்மைறையான பயன்பாட்டினையும் கொடுக்கிறது.

பொருளிலோ அல்லது மனிதர்களிலோ இல்லை குறைபாடு அதை எப்படி கையாளுவது அல்லது அல்லது எப்படி எண்ணுவது என்பதை பொறுத்து....விளையும் நன்மையும் தீமையும் வேறுபடுகின்றன. அதே போலத்தான் ..ஆணுக்கு பெண் என்றால் போகம், பெண் என்றால் காமம் என்று காலம் காலமாக போதிக்கப்பட்து அந்த ஒரு மனோபாவம் கொண்ட சமுதாயத்தில்..பெண்ணோடு பழகும் நேரங்களில் எல்லாம் அவனுக்கு காமம் தான் தலை நோக்கி இருக்கும்.

காலம் காலமாக பெண்ணை வீட்டுக்குள் பூட்டிவைத்து அவளுக்கு மூக்கு குத்தி... அடிமைப்படித்திய காலங்கள் போய்விட்டன... என்பதை ஒத்துக் கொள்ளும் ஆண்கள்... பெண்களை மரியாதையாக நடந்த வேண்டும். ஒரு விசயத்தை ஆண் அணுகும் முறையும் பெண் அணுகும் முறையும் வேறு வேறானவை.... அது கடவுளாக இருக்கட்டும் இல்லை கம்பியூட்டராக இருக்கட்டும்.

நல்ல நட்பாய் இருக்கும் ஒரு தோழியின் மூலம் அல்லது ஒரு தோழனுடன் ஆரோக்கியமான கருத்து விவாதங்களும்... வெளிப்பாடுகளும் உள்ளபோது புதிய புதிய கருத்துக்கள் பிறக்கும். ஆண் பெண் நட்பு என்ற போர்வையில் மிலேச்சர்கள் தவறாக நடக்கவும் வாய்ப்பு இருப்பதால் ஆணும் பெணும் தன்னுடைய நட்பை தேர்ந்தெடுப்பதற்கு முன் தெளிவாக இருக்க வேண்டும் அது உணர்ச்சிவயப்பட்ட ஒரு தேர்வாக இல்லாமல்...அறிவுசார்ந்த ஒரு தேர்வாக இருந்தால் இருவருக்குமே நன்மை.

கத்திமேல் நடப்பது போன்றதுதான்.... ஆனால் நடந்தால் அதுவன்றோ !சாதனை.....

" பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்...
புவிப்பேணி வளர்த்திடும் ஈசன்.
மண்ணுக்குள்ளே சில மூடர்...
நல்ல மாதர் அறிவை கெடுத்தார்."


தேவா. S

Comments

Chitra said…
/////அடையாளம் இட்டுக்கொண்ட
உறவுகளுக்கு மத்தியில்...
சர்சையாகிப் போனது...
ஆண் பெண் நட்பு!/////

..... This calls for the basic trust on each other with a broad-minded acceptance.



//////ஆணும் பெணும் தன்னுடைய நட்பை தேர்ந்தெடுப்பதற்கு முன் தெளிவாக இருக்க வேண்டும் அது உணர்ச்சிவயப்பட்ட ஒரு தேர்வாக இல்லாமல்...அறிவுசார்ந்த ஒரு தேர்வாக இருந்தால் இருவருக்குமே நன்மை./////



......True..... It should not be a fad or just a sign of adopting a liberal culture.
//நெருப்பாய் என்னை நேசித்த...
நீ..இன்று நெருங்க முடியா தூரத்தில்
திருமணம் நட்புக்கு முற்றுப்புள்ளியா? //

பிடித்த வரிகள்......
ரொம்ப நல்லா இருக்கு தேவா.. :)
Anonymous said…
//உணர்ச்சிவயப்பட்ட ஒரு தேர்வாக இல்லாமல்...அறிவுசார்ந்த ஒரு தேர்வாக இருந்தால் இருவருக்குமே நன்மை.

கத்திமேல் நடப்பது போன்றதுதான்.... ஆனால் நடந்தால் அதுவன்றோ !சாதனை.....//

உண்மைதான்.
En pala anubavangalai meendum ninaivu koornthathu intha pathivu..

intha pathivin thakkam sila natgalil veroru parimanatthil ennai neengal kaana neridalaam..

en palli kaala ezhutthukkalai ithuvarai pathivetriyathu illai..

neenda natgalaaga manathirkkum putthikkum nadantha porattam ingu mudivadainthathu endru nambugiren..

Unmai anna.. ingu uravugal ellame kattamaikka patta vithigalukkul vazhuthal..

thinikka patta unarvugaludan nadikka katruk konda samuthayam ithu..

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...