Skip to main content

இன்னுமொரு...தாஜ்மஹால்....!


உன் நினைவுகள்
கொண்டே..இரவுகள்...
உடைக்கப்படுகின்றன...
காமம் இல்லா காதலாக..
ஒவ்வொரு கணமும் நாம் கடக்க...
நட்பின் பரிமாணங்கள்...
சூரியக்கதிர்களாய்...
நம்முள் எட்டிப்பாய்கின்றன...!

அர்த்தம் பொதிந்த...
உன் மெளனங்களொடு.....
நட்பாய். ...கரம் கோர்க்கும்
கணங்களில்....
காமம் அங்கே...
தற்கொலை செய்யும்...!

காதல் காதல்...என்று...
பெண்ணை...
காமத்திற்கு இழுக்கும்...
சமுதாயத்தில்....நட்பு ... நட்பு
என்று சொல்லி
காதலை என்னுள் நிறைப்பாய்!

உன் வார்த்தைகள்...
என்னை வெல்லும்....
கணங்களில் எல்லாம்...
நான் வாழ்க்கையை வென்றிருக்கிறேன்....!
உன் தோள் சாயும் தருணங்கள்....
தாய்மையை எனக்குள்...
ஊற்றி நிறைக்கும்!

ஆணாதிக்க சமுதாயத்தில்...
ஒன்று.. பெண் கூடுவதற்கு....
அல்லது....சுமைகளை...கூட்டுவதற்கு...
இன்று...திருமண பந்தங்கள்...
நம் நட்புக்கு நெருப்பு வைத்தன...
சம்பிரதாய கழுகுகள்...
பார்வைகளால் கொத்தி தின்றன...

மரபு மரபு என்று...
உன் திருமணத்திற்குப் பிறகு...
பிரிவுகளின் பின்னே ..
மெளனமாய்..
ஓடி ஒளிந்தது... நம் நட்பு!
ஆளுமை செய்ய...
அடையாளம் இட்டுக்கொண்ட
உறவுகளுக்கு மத்தியில்...
சர்சையாகிப் போனது...
ஆண் பெண் நட்பு!

நெருப்பாய் என்னை நேசித்த...
நீ..இன்று நெருங்க முடியா தூரத்தில்
திருமணம் நட்புக்கு முற்றுப்புள்ளியா?
நட்பென்றால் என்ன...
வெறும்.... வெற்றுப் புள்ளியா?
கேள்விகளால்...
எரிந்து சாம்பலானது... மூளை...!

நகர்ந்து போன நாட்களில்
கவனமாய் சேர்த்து வைத்த...
நினைவுகளில்...மெளனமாய்..
எழுப்புகிறேன்... நட்புக்கான...
இன்னுமொரு தாஜ்மஹாலை...!


இன்னமும் சர்ச்சைக்குரிய ஒரு விசயமாகத்தான் இருக்கிறது ஆண் பெண் நட்பு. ஆணும் ஆணும் மட்டுமே நட்பு கொள்ள வேண்டும் அல்லது பெண்ணும் பெண்ணும் நட்பு கொண்டிருக்க வேண்டும் என்று நமது மூளை பழக்கப்பட்டு போனதும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நெறிப்படுத்தி வைத்ததும்...ஆணின் அத்துமீறலாம் ஏற்பட்ட ஒரு பழக்கமாகத்தான் இருக்க வேண்டும். நம்மை சுற்றி இருக்கும் எல்ல விசங்களிலும் பயன்பாட்டின் தன்மையை பொறுத்து அது நன்மை தீமை என்று பிரிக்கிறோம். உதாரணமாக இணையத்தின் பயன்பாடு என்பது...தீங்கு விளைவிக்க நினைப்பவர்களுக்கு எதிர்மறையான பயன் பாடும்....அதை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்துபவர்களக்கு நேர்மைறையான பயன்பாட்டினையும் கொடுக்கிறது.

பொருளிலோ அல்லது மனிதர்களிலோ இல்லை குறைபாடு அதை எப்படி கையாளுவது அல்லது அல்லது எப்படி எண்ணுவது என்பதை பொறுத்து....விளையும் நன்மையும் தீமையும் வேறுபடுகின்றன. அதே போலத்தான் ..ஆணுக்கு பெண் என்றால் போகம், பெண் என்றால் காமம் என்று காலம் காலமாக போதிக்கப்பட்து அந்த ஒரு மனோபாவம் கொண்ட சமுதாயத்தில்..பெண்ணோடு பழகும் நேரங்களில் எல்லாம் அவனுக்கு காமம் தான் தலை நோக்கி இருக்கும்.

காலம் காலமாக பெண்ணை வீட்டுக்குள் பூட்டிவைத்து அவளுக்கு மூக்கு குத்தி... அடிமைப்படித்திய காலங்கள் போய்விட்டன... என்பதை ஒத்துக் கொள்ளும் ஆண்கள்... பெண்களை மரியாதையாக நடந்த வேண்டும். ஒரு விசயத்தை ஆண் அணுகும் முறையும் பெண் அணுகும் முறையும் வேறு வேறானவை.... அது கடவுளாக இருக்கட்டும் இல்லை கம்பியூட்டராக இருக்கட்டும்.

நல்ல நட்பாய் இருக்கும் ஒரு தோழியின் மூலம் அல்லது ஒரு தோழனுடன் ஆரோக்கியமான கருத்து விவாதங்களும்... வெளிப்பாடுகளும் உள்ளபோது புதிய புதிய கருத்துக்கள் பிறக்கும். ஆண் பெண் நட்பு என்ற போர்வையில் மிலேச்சர்கள் தவறாக நடக்கவும் வாய்ப்பு இருப்பதால் ஆணும் பெணும் தன்னுடைய நட்பை தேர்ந்தெடுப்பதற்கு முன் தெளிவாக இருக்க வேண்டும் அது உணர்ச்சிவயப்பட்ட ஒரு தேர்வாக இல்லாமல்...அறிவுசார்ந்த ஒரு தேர்வாக இருந்தால் இருவருக்குமே நன்மை.

கத்திமேல் நடப்பது போன்றதுதான்.... ஆனால் நடந்தால் அதுவன்றோ !சாதனை.....

" பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்...
புவிப்பேணி வளர்த்திடும் ஈசன்.
மண்ணுக்குள்ளே சில மூடர்...
நல்ல மாதர் அறிவை கெடுத்தார்."


தேவா. S

Comments

Chitra said…
/////அடையாளம் இட்டுக்கொண்ட
உறவுகளுக்கு மத்தியில்...
சர்சையாகிப் போனது...
ஆண் பெண் நட்பு!/////

..... This calls for the basic trust on each other with a broad-minded acceptance.



//////ஆணும் பெணும் தன்னுடைய நட்பை தேர்ந்தெடுப்பதற்கு முன் தெளிவாக இருக்க வேண்டும் அது உணர்ச்சிவயப்பட்ட ஒரு தேர்வாக இல்லாமல்...அறிவுசார்ந்த ஒரு தேர்வாக இருந்தால் இருவருக்குமே நன்மை./////



......True..... It should not be a fad or just a sign of adopting a liberal culture.
//நெருப்பாய் என்னை நேசித்த...
நீ..இன்று நெருங்க முடியா தூரத்தில்
திருமணம் நட்புக்கு முற்றுப்புள்ளியா? //

பிடித்த வரிகள்......
ரொம்ப நல்லா இருக்கு தேவா.. :)
Anonymous said…
//உணர்ச்சிவயப்பட்ட ஒரு தேர்வாக இல்லாமல்...அறிவுசார்ந்த ஒரு தேர்வாக இருந்தால் இருவருக்குமே நன்மை.

கத்திமேல் நடப்பது போன்றதுதான்.... ஆனால் நடந்தால் அதுவன்றோ !சாதனை.....//

உண்மைதான்.
En pala anubavangalai meendum ninaivu koornthathu intha pathivu..

intha pathivin thakkam sila natgalil veroru parimanatthil ennai neengal kaana neridalaam..

en palli kaala ezhutthukkalai ithuvarai pathivetriyathu illai..

neenda natgalaaga manathirkkum putthikkum nadantha porattam ingu mudivadainthathu endru nambugiren..

Unmai anna.. ingu uravugal ellame kattamaikka patta vithigalukkul vazhuthal..

thinikka patta unarvugaludan nadikka katruk konda samuthayam ithu..

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...