Skip to main content

நாங்கள் இந்தியர்கள்! நீங்கள்....டோன்டு ....?













அன்புள்ள டோன்டு சார்.....!

எதுவுமே எழுதாம அப்படியே விட்டு விடலாம் என்று இன்று மதியம் வரை நினைத்தேன்...இருந்தாலும் சக பதிவர் என்ற வரைக்கு ஒரு சிறிய கடிதமாவது எழுதாவிட்டால் எனக்குள் இருக்கும் எனது விழிப்புணர்வு நிலை என்னை சும்மா விடாது.....!

பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியதற்காக... அரசாங்கத்தின் மீதுதான் நமது கோபம் திரும்ப வேண்டும் அறிவு கெட்ட அரசாங்கம் அந்த மூதாட்டியை உள்ளே விடாததற்கு அதற்கு ஓராயிரம் சுய நல கேவலமான ஏகாத்திபத்திய காரணங்கள் இருந்தது....அது அதிகாரத்தில் இருப்பவர்களை மக்கள் தோலை உரித்து அரியாசனத்தில் இருந்து இறக்கும் வரை அவர்களின் ஏகாத்திபத்திய செயல்பாடுகள் மாறாது. இது ஒரு சமுதாய கோபாமாக மாறி....அரசாங்கக்துக்கு சூடு கொடுக்கும் வையில் இருக்க வேண்டும்...

சாதாரணமாய் வாழும் மனிதன் தனது கோபத்தை டீக்கடை வாசலிலோ அல்லது....அலுவலக கேண்டினிலோ....அல்லது ஒரு பேருந்து நிறுத்தத்தில் விவாதித்தோ தனது கோபத்தைப் போக்கிக் கொள்வான்...ஆனால் உங்களைப் போன்றவர்கள் எழுதும் ஆற்றல் கொண்ட மனிதர்கள் ...ஒரு முற்போக்கான விரிந்த பார்வை உங்களுக்கு இருக்க வேண்டாமா? இல்லை என்றால் வன்முறையாளன் கையில் கொடுக்கப்பட்ட சுதந்திரமாய் அது ஆகி விடாதா?

படைக்கும் திறன் கொண்ட ஒரு படைப்பாளி.....தப்பும் தவறுமாக தனது....சிந்தனைகளை ஓடவிட்டு...அதனை தன் எழுத்தாற்றல் மூலம் வாசகனுக்கு சமைக்கும் போது வலுவற்ற எண்ணங்களும்...சமகால நிகழ்வுகளின் விரிவாக்கமும் இல்லாத மனிதர்களின் மனதில் நஞ்சை விதைப்பது போல ஆகாதா? உங்கள் கையில் கிடைத்திருப்பது பலதரப்பட்ட மக்கள் படிக்கும் ஊடகம்...அதில் ஒரு கண்ணியம் இருக்க வேண்டாமா....! எழுதுவதில் ஒரு தனி ஒழுக்கம் இருக்கவேண்டாமா?

எழுத்தாளன் என்பவன் சமூக பொறுப்புகள் நிறைந்தவன்....சராசரி மனிதர்களுக்கும் உருவாக்கும் படைப்பாளிகளுக்கும் வித்தியாசங்கள் இருக்கிறது. எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்த அல்லது பிடிக்காத விசங்களை நான் பொதுப்படுத்தக்கூடாது....அப்படி செய்தால் அதற்கு பெயர் பதிவு அல்ல...அது உங்களின் பெர்சனல் டைரி...! நமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு... சமச்சீரான பார்வைக்கு ....உட்பட்டு நாம் செய்திகளை நோக்கவேண்டும்....! உங்களுக்கு கண்டனங்களைத் தெரிவித்த அதே கதிர் சார்...உங்களின் சாதிப் பெயர் சொல்லி விமர்சித்தவர்களை கடுமையாக கண்டித்தார்.....இதில்தானே ஒரு சுய ஒழுக்கமும் நேர்மையும் இருக்கிறது!

சமுதாயத்தில் அக்கறை உள்ள உண்மையான மனிதன் இப்படி எழுதி விட்டு...மிகைப்பட்ட மனிதர்களிடம் இருந்து எதிரிடையான விளக்கங்களும்...கண்டங்களும் வரும் மாத்திரத்தில் உணர வேண்டாமா.....? தான் எழுதியது...தவறு என்று?...அதை மனதோடு வைத்திருந்தால்.அப்போது அது உங்களின் சொந்த கருத்து...!

உங்களின் எண்ணங்களை பதிவாக்கிவிட்டு... நான் அப்படித்தான் நினைக்கிறேன்!...அனுமாக்கிறேன்.....என்று....வாசிப்பவர்களை...அனுமானத்தின் நேசர்களாக....கற்பனையில் ஏதேதோ எண்ணச் சொல்லி....ஒரு தீவிரவாதத்தை உங்களின் எழுத்துக்குள் கொண்டு வராதீர்கள்...!

பார்வதி அம்மாளை உள்ளே வரவிடாமல் அனுப்பியது சரி என்று நீங்கள் சொல்வதனால்.... என்னவோ... நீங்கள்தான் ஏதோ இந்திய தேசத்தின் பக்தர் போலவும்...நாங்கள் ...தேசத்துக்கு எதிரானவர்கள் என்றும் உங்களுக்குள்...மாயையினை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள். தேசப்பற்றோடு கூடியதுதான் மனிதாபிமானமும்....இந்திய தேசத்தை உங்களை விட அதிகம் நேசிக்கிறோம்...அந்த நேசிப்பு கூடிப்போனாதால்தான் எங்களிடம் மனிதாபிமானம் கூடிபோய் இருக்கிறது. மனிதாபிமானம் உள்ளவன் தான் ஒரு உண்மையான இந்தியனாக இருக்க முடியும்......

எங்களுக்கு மனிதாபிமானம் இருக்கிறது...... நாங்கள் இந்தியர்கள்.......! நீங்கள்....டோன்டூ ....சார்?


தேவா. S

Comments

Anonymous said…
This comment has been removed by a blog administrator.
Unknown said…
This comment has been removed by a blog administrator.
uma said…
இந்த வந்தேறி பார்ப்பணீயம் தமிழர்களுக்கு செய்த கொடுமை அளவில்லாதது .பிராமணியம் மனித தன்மைக்கு ,சமத்துவத்துக்கு ,சுய மரியாதை க்கு எதிரானது என்று காலம் காலமாய் நிருபிக்க பட்டிருக்கிறது .இந்த டோண்டு ராகவன் என்கிற முட்டாளுடன் நான் விவாதம் செய்ய வரவில்லை. பார்ப்பனீயம் தங்களுடைய சித்தாந்தங்களுக்கு தொண்டு செய்கிறவர்களை தான் உயர்த்தி பிடிக்கும் . தந்திரம்,சூழ்ச்சி ,நயவஞ்சகம்,பசப்பு, ஆசை காட்டல் முதலிய பஞ்சமா பாதகங்களை பயன்படுத்தி தன்னுடைய நலன்களை காத்துக்கொள்ளும் .இங்கே ஒன்று கவனிக்க வேண்டும் டோண்டு என்கிற மட பாப்பான் என்ன சொல்ல வருகிறார் "புலிகளின் ஆதரவாளர்கள்? பிரஸ் மீட்கள் வைத்திருப்பார்கள். தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார். பிறகு அவரது பாதுகாப்புக்கென ஒரு கணிசமான தொகையை நமது அரசுகள் செலவழிக்க வேண்டியிருக்கும்."

இதில் எவளவு வஞ்சம் கலந்திருக்கிறது. இங்கே அந்த வயதான தாய் வந்தது தன்னுடைய பக்கவாத நோய்க்கு மருத்துவம் பார்க்க .அரசியல் செய்ய அல்ல.அவர் இதற்க்கு முன்பு திருச்சியில் வாழ்ந்திருக்கிறார் . அவரை வைத்து எப்போது யார் அரசியல் செய்தார்கள் .அவரை கவனிக்க இங்கே ஆள் தேவை .இங்கே அவரை கவனித்து அவருக்கு வேண்டியவை செய்ய மனித நேயம் உள்ள நல்லவர்கள் இருகிறார்கள்.அதனால் தான் அவர் இங்கே வந்தார்.அந்த தாய் எப்போதுமே தான் இங்கே தங்கி இருந்த காலத்தில் அரசியல் யாரிடமும் பேசியது இல்லை.இங்கே வந்தேறி பார்ப்புகளும் ,சேட்டு களும் ,பணியாக்களும் ,மலையாளிகளும் வசதியாக வாழும் போது ஒரு தாய்க்கு தன்னுடைய ரத்த சொந்தங்கள் இருக்கும் நாட்டிற்கு வர உரிமைகள் மறுக்க படுவதும் அதை டோண்டு ராகவன் போன்ற வந்தேறி பார்ப்புகள் ஆதரித்து பேசுவதும் தமிழர்களுக்கு ஒரு கிழிந்து போன இத்தாலிய சேலையை தன்னுடைய துண்டாக ,கோவணமாக அணிந்து கொண்டிருக்கும் மற்றும் பணத்தால் உணர்விழந்து போன மட தலைவனால்தான். இங்கே காவி அணிந்து கொலை மற்றும் பல பஞ்சமா பாதகங்கள் செய்த காஞ்சிபுரம் சங்கராச்சாரி என்கிற அய்யோக்கிய பார்பான்கள் எல்லாம் நடமாடுகிற போது ஏன் என்னுடைய தாய் இங்கே வரகூடாது? .

இப்போது சசி தரூர் என்கிற ஒரு மலையாள பாப்பான் செய்த காரியம் என்ன . ஒரு நாட்டின் அமைச்சு பதவியில் இருந்து கொண்டு அவன் செய்த காரியம் தன்னுடைய தாயை கூட்டி கொடுபதற்க்கு சமமானது .அதை இந்த வந்தேறி பார்ப்புகள் தான் செய்ய முடியும் .

தாயே எங்களை மன்னித்து விடு .மீண்டும் ஒரு புத்தநும் ,ஒரு பெரியாரும் ,ஒரு நாராயண குருவும் ,ஒரு வேம்மன்நாவும் ,ஒரு பிரபாகரனும் ,ஒரு அய்யா வைகுண்டரும் இந்த புனித பூமியில் மீண்டும் பிறக்க ஆசி கூறு அவர்கள் பிறந்து பார்பனீயத்தை வேரோடு கருவருகட்டும் .

உமா.கா ,திருவனந்தபுரம்
dheva said…
பின்னூட்டமிடுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.....

தயவு செய்து எந்த தரக் குறைவான வார்தைகளையும் பயன்படுத்த வேண்டாம், மேலும் எந்த காரணம் கொண்டும் சாதியையும் மதத்தையும் கொண்டு வசவுகள் செய்ய வேண்டாம்..ஒரு நிகழ்வினைப் பற்றி ஒருவர் தெரிவித்த கண்ணோட்டத்திற்கான....ஒரு மறுதலிப்புதான் இந்தப் பதிவு....! நாம் அனைவரும் நமது நாகரீகத்தை காப்பதில்....மிகக் கவனமாக இருக்க வேண்டும்!
காந்தி தாத்தா படத்தை எங்க புடிச்சீங்க?
dheva said…
அது காந்தி தேசத்தின் புதல்வர்கள்தான் நாங்களும் என்ற அர்த்தத்தில் தான் காந்தி படம்.....! வருகைக்கு நன்றி!
Chitra said…
எல்லை மீறாமல், விரிவாக எழுதி இருக்கிறீர்கள்.
Chitra said…
How about moderating your comments before they are published? Also, you will not miss the comments for your older posts , if any, that comes later - if you have comments moderation.
தம்பி அருமையான விளக்கம்

வாழ்த்துக்கள்
மேலும் உங்கள் எழுத்து தொடர.. வாழ்த்துக்கள்..

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...