Skip to main content

வாழ்வே மாயம்.... தொடர் பதிவு I I


இது வரை

http://maruthupaandi.blogspot.com/2010/04/i.html
இனி....

நிறைய உடல்களை பார்த்த பின் ஒரு உடன் ஒரு உடலின் கையில் தழும்பு இருப்பதை கண்டு என்னை அவசரமாய் அழைத்தர்...அந்த தழும்பை பார்த்த உடனேயே.. என் கண்களில் கண்ணீர் அனிச்சையாய் வந்தது....

என் தாயிருந்த...இடத்திலே...
நீ இருந்தாய்...
இன்று நீ இருக்கும் இடம்..
எது மாமா?

என்ன கவலை தீருமுன்னு...
நீ மரிச்சே...
உடல ஒழிச்ச நீ...
உடனே பிறப்பாயோ...
மனச அலைய விட்டு...
மறு ஜென்மம் எடுப்பாயோ...?

என் அம்மாமனே...
உனை.. எந்த பிறப்பில்...
காண்பேனோ....
இல்லை இனி காணமலேயே போவேனோ...?


மாமவின் முகம் தெளிவாய்....முன் தினம் செய்யப்பட்ட சவரம்.. நன்றாகதெரிய.....சாந்தமாய்...எனைப்பார்த்து சிரிப்பது போல தெரிந்தது.....
! என்னிடம் விவரிக்க எந்த ஒரு வார்த்தையோ பயமோ இல்லை....மனம் ஒரு நிலைப்பட்டு தனித்து கிடந்தது....! எந்த ஒரு சலனமும் இல்லாமல்.. தனிமைப்பட்டு கிடந்தது....! ஏதோ ஒரு விசயம் மெலிதாய் புலப்பட்டு ஆத்மா அதை உணர்ந்ததை... மனமும் மூளையும் கிரகிக்க முடியாததால்.. அந்த அனுபவத்தை சொல்ல முடியவில்லை.

மாமா இல்லை.....இது மாமாவின் உடல்...சரி....மாமா எங்கே? அல்லது எது மாமா என்று என்னால் அழைக்கப்பட்டது? ரமண மகரிசியின் நான் யார் என்பதின் தத்துவ விளக்கம்...என் மர மண்டையில் எதார்த்த கேள்விகளாய் வெளியே வந்தது. ஏதோ ஒரு விசயம் புரிந்தும் புரியாமலும்....இருந்தது....

" தம்பி போகலாம்பா.... என்று வாட்ச் மேன் உலுக்கிய போது மீண்டும் நிதானத்துக்கு வந்தேன்......"

கண்ணீரோடு வாட்ச்மேனின் கரம் பற்றி... நன்றியை என் கண்களில் இருந்து அவரது கண்களுக்கு மாற்றியபடி...சலமின்றி மார்ச்சுவரி....கதவை அடைந்த போது.....திரும்ப ஒருதடவை.....மாமாவின் உடலை திரும்பி பார்த்தேன்....

சண்முகம்......ஆமாம் அது தான் அவர் பெயர்.....சிவகங்கை மாவட்டம்....காளையார் கோவிலை அடுத்த மறவ மங்கலம்....பேருந்து நிறுத்ததில் இறங்கி...."செல்லச்சாமி பிள்ளை...." வீடு எதுன்னு கேட்டா.....வீட்டு வாசல்ல கொண்டு போய் விடுவாங்க....ஜமீன் தாருடைய பேரன் தான் இவரு...100 ஏக்கர் நிலம் வீடு வாசல்னு எல்லாம்...சூதாட்டம் மாதிரி சூறாவளியா சுத்தி...சென்னையில் காய்கறி வியாபரத்துல வந்து விட்டுருச்சு....

எல்லா கனவுகளும் வாழ்க்கை.....சூழ் நிலை இந்த இரண்டுகும் நடுவே பந்தாடப்பட்டு....மனிதனின் சுய அடையாளத்தை தொலைத்து விடுகிறது.....

கதவை திறந்து வெளியில் வந்தேன்....உறவுகளின் ஒப்பாரி என்னை ஒன்றும் செய்ய வில்லை...ஒரு ஓராமாய் நான் அமர்ந்து இருந்தேன்....இரவு நேர சென்னையின் வானம் மட்டும் என் தொடர்பில் இருந்தது.....!


தேவா. S



(தொடரும்)

Comments

நமது மரணம் அடுத்தவருக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது ..! அப்படி நிகழும் மரணமானது ஒரு விடுதலை...! அல்லது அது ஒரு பரிசு...!
லெட்டர்ஸ் எல்லாம் ரொம்ப சின்னதா இருக்கு , டிம் மாவும் இருக்கு சரிபண்ணுங்க
உடம்பு என்பது உண்மையில் என்ன ....கனவுகள் வாங்கும் பை தானே.......கதையும் பின்னணி பாடலும் அருமை. உங்கள் கதை சொல்லும் பாங்கு
ரொம்ப பிடித்திருகிறது ...சகோதரி நிலாமதி
dheva said…
thanks nilamathi.....!
dheva said…
Thanks manguni Amaichar....for ur suggestions and i changed it immediately!
//என் தாயிருந்த...இடத்திலே...
நீ இருந்தாய்...
இன்று நீ இருக்கும் இடம்..
எது மாமா? //

உங்க மாமாவின் மீது நீங்க கொண்ட அன்பின் வெளிப்பாடு, இந்த வரிகளில் வலியாய் தெரிகிறது..

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...