(நான் இணைத்திருக்கும் இந்த புகைப்படம் பற்றி நான் எதுவும் எழுதவில்லை.....! உங்களின் மனசாட்சிகள் ஒரு கட்டுரை எழுதும் தனித்தனியே...இது பற்றி உங்களுக்குள்)
இதுவரை
பாகம் I
இனி....
ரத்தம் கொதிக்கத்தான் செய்கிறது நண்பர்களே.... நம்மை சுற்றி நிகழும் நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தாலே! ஒவ்வொரு பதிவிட்ட பிறகும்... நான் சர்வ நிச்சயமாய் வாக்குகளின் எண்ணிக்கையினை நோக்குவதில்லை...ஆனால் எத்தனை பின்னூட்டங்கள் இட்டுள்ளார்கள் என்பதுதான் எனது முழு கவனத்திலிருக்கும்..ஏன் தெரியுமா?
கட்டுரையின் போக்கு...சரியா அல்லது தவறா அல்லது கட்டுரையில் இல்லாத வெளிப்படுத்த வேண்டிய கருத்துக்கள் இருக்கின்றனவா என்றுணர சரியான பின்னூட்டங்கள் உதவும்....! ஒரு லட்சம் பேர் என்னுடைய வலைப்பூவினுக்குள் நுழைந்து சென்றிருக்கிறார்கள் என்பதை விட...5 பேர் சிந்திக்க வைக்கும் வகையில் பின்னூட்டமிட்டுள்ளார்கள் என்பது ஆரோக்கியமான விசயம்...! நமது கருத்துக்களை தெளிவாக மக்களின் முன் நமது தமிழ்ச்சமுதாயத்தின் முன் வைக்க வேண்டும்...வலுவான இரண்டு கருத்துக்கள்....ஒரு லட்சம் ஓட்டுக்களுக்கு சமம்....என்பது எனது...பார்வை நோக்கு!
உலகத்தில் எந்த மனிதனுக்கு பட்டாலும் வலி...வலிதான் அப்படி இருக்கையில் ஏன் தமிழனுக்கு ஏற்பட்டதற்கு மட்டும் நீங்கள் ஏன் முக்கித்துவம் கொடுக்கிறீர்கள்? இது சமீபத்தில் ஒரு நண்பர் என்னிடம் கேட்ட கேள்வி....
எங்கே மனிதம் நசுக்கப்படுகிறதோ.. எங்கே உரிமைகள் பறிக்கப்படுகிறதோ அது எல்லாம் வன்மையாக எதிர்க்கப்படவேண்டிய ஒன்று...என்பதை மறுப்பதற்கில்லை....! அக்னி பக்கத்து வீட்டில் எரிந்தால் அதன் வெம்மை நமக்கு கூடுதலாக இருக்கும்...அதுவே பக்கத்து ஊரில் இருந்தால்.... அக்னி அணைக்கப்பட வேண்டும் என்ற நமது கருத்தில் மாறுதல் இல்லாவிட்டாலும் வெம்மை நமக்கு தெரிவதில்லை அல்லது உணர்வதில்லை....அது போலத்தான் ஈழத்தில் நடந்த கொடுமையின் வெம்மை நமக்கு கூடுதல்.....அதுமட்டுமல்ல....
எல்லா படைப்பினங்களையும் நாம் உற்று நோக்கினால் அவற்றில் இனம் என்று ஒன்று இருப்பது எல்லோருக்கும் தெரியும்...மனிதனிலும் இனம் எனப்படுவது யாராலும் மாற்றமுடியாத ஒன்று. ஒரு நாள் அதிகாலையில் எழுந்து... 24 மணி நேரத்துக்குள் எந்த நாட்டின் குடியுரிமையை வேண்டுமானாலும் பெற்றுக் கொண்டு அந்த நாட்டின் குடிமகனாக மாறிக்கொள்ளலாம்....எந்த மதத்தினை வேண்டுமானலும் தழுவி அந்த மதத்தினராக மாறிக் கொள்ளலாம்..., எந்த மொழியை வேண்டுமானாலும் கற்று அந்த மொழியில் புலமை பெற்றுக் கொள்ளலாம்.....ஆனால் நமது இனம் என்ற அடையாளத்தை மாற்ற முடியுமா? யாராய் வேண்டுமானாலும் இருங்கள்....ஆனால் எந்த இனம் என்பதற்கான அடையாளத்தை மாற்ற முடியாததுதானே.....
அது என்ன இனம்? என்றுதானே கேட்கிறீர்கள்....
ஒரே காற்றை சுவாசித்து.....ஒரே வகையான தண்ணீரைக் குடித்து.... ஒரு மண்ணில் விளைந்த பொருட்களை உண்டு அந்த மண்ணிற்கு ஏற்றார் போல வளர்ந்து நிற்கிறதே உயிர் அதை மாற்ற முடியுமா.....? காலம் காலமாக அந்த கலாச்சாரம் தாயின் அண்டத்திலும் தந்தையின் விந்தணுவிலும் கலந்து நமது உயிர்களுக்குள் ஊடுருவி இருக்கிறதே....அதை மாற்ற முடியுமா? புறச்சூழ் நிலையின் காரணமாக நமது மேம்போக்கான வெளிப்பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளலாம்...ஆனால் நமது ஜீன்களுக்கு உள்ளே உட்கார்ந்திருக்கும் மரபணுக்களை எப்படி மாற்றுவது? குரோமோசோம்களில் குடியிருக்கும்... குணாதிசயங்களை எப்படியப்பா மாற்றுவது.....?
அதிகபட்ச தத்துவ விளக்கங்களை விடுத்து விட்டு....பாருங்கள், என்னைப் போலவே உடுத்தி...என் மொழி பேசி... என்னைப் போலவே வாழும் எம் மக்கள் தாக்கப்படுகிறார்கள்...கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்னும் போது எம்மை மீறி எமக்குள் ஏற்படும் உணர்வினை சரி என்றும் தவறென்றும் சொல்லவதற்கு யாருக்கும் உரிமையில்லை....! அது இயற்கைக்கு எதிரான செயல் அல்லவா? எமது உணர்வுகளை வெளிப்படுத்துவது சரியென்று விளக்க வேண்டிய ஒரு துரதிருஸ்டமான நிலைமை நமக்கு இப்போது....! ஏன் நாங்கள் ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுக்கிறோம் என்று விளக்காதீர்கள்....? ஏன் சக தமிழர்களே... திராவிடர்களே... நீங்கள் குரல் கொடுக்க வில்லை என்று உரக்க கேளுங்கள்.....? அவர்களின் குரோமோசோம்களில் கோளாறு இருக்கலாம்....அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று!
எமது ஈழத்து சகோதரி ஒருத்தி எழுதியிருக்கிறாள்.....
" கொட்டும் மழை நிறுத்திக்
கொப்பளிக்கும் மின்னல் கட்டி
இழுத்து வாருங்கள் அந்த இடியை
"இத்தால் நாம் அறிவிப்பது என்னவென்றால்"
என்று அறையுங்கள் முரசை
கலையட்டும் இவ்வுலகின் தூக்கம் "
( நன்றி: மயோரா மனோகரராசன்)
ஈழ மண்ணில் எம்மக்களின் வேதனையால் வெம்மி....அடி மனத்திலிருந்து எம் மொழி கொளுந்து விட்டு எரிவது தெரியவில்லையா? என் தமிழினமே....?
(எரிமலை இன்னும் வெடிக்கும்)
தேவா. S
Comments
அருமையானபதிவு
யாருக்கு என்ன நடந்தால் எனக்கென்ன என்ற மனோ நிலையிருந்து வெளியே வரும் வித்தை மறந்து போனது ஏனோ?
மிக சரியான உதாரணம்..
எங்கேயோ நம் இனத்து மக்கள் படும் பாட்டை நினைத்து...மனது துடிக்கத்தான் செய்கிறது.
உங்கள் பதிவிலும்.. உங்கள் ரத்தம் கொதிப்பது தெரிகிறது.. எங்கே இருப்பினும்.. நம் இனம் என்ற எண்ணம் வந்து.. கரம் கொடுக்க வேண்டும்..
எனக்கு சிங்கள நண்பர் ஒருவர் உண்டு, அவர் கூற பல விஷயங்கள் கேட்டிருக்கிறேன்.. அச்சுறுத்தும் வகையில் இருந்தது.. கேட்டதும் நம் நெஞ்சே பதறுகிறது..
படத்தை பார்த்ததும்... மனதின் வலி அதிகமாகிறது.. தொடரட்டும் உங்கள் கருத்து வலிமை..