Skip to main content

வாழ்வே மாயம்.... தொடர் பதிவு V


பதிவினை தொடங்கும் போது ஏதோ ஒன்று அல்லது இரண்டு பதிவுகளில் முடிந்து விடும் என்று தான் நினைத்து ஆரம்பித்தேன், ஆனால் 5வது பதிவு வரை வர வேண்டிய அவசியமாகி விட்டது. இன்னும் ஒரு பதிவு வரலாம் அல்லது இத்தோடும் முடியலாம்... பார்க்கலாம்....

சகோதரி சித்ரா அவர்கள் எல்லா பாகங்களையும் வரி விடாமல் வாசித்து வாக்களித்து...கருத்துக்களும் தெரிவித்து இருப்பது நெகிழ்ச்சியாக இருந்தது அவரின்...வாசிக்கும் திறன் மட்டுமல்லாது பதிவர்களை ஊக்குவிக்கும் ஒரு தாயுள்ளமும் இருப்பதை என்னால் உணர முடிந்தது. சாதாரணமாக பின்னூட்டத்தில் வாழ்த்து சொல்லவதை விட.... முதன்மைப் பதிவிலேயே அவருக்கு நன்றி தெரிவிப்பதுதான்....தர்மம்..... நன்றிகள் சகோதரி.....!

வாழ்க்கையின் ஓட்டத்தோடு எல்லா நிகழ்வுகளும் சட்டென நடந்து முடிந்து விடுகின்றன.... நினைத்துப் பார்க்கும் போது எல்லாமே கனவாகத்தான் தோன்றுகின்றன.... சரி....மேற்கொண்டு நாம் பயணிக்கலாம்.

இது வரை
பாகம் 1 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i.html
பாகம் 2 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i-i.html
பாகம் 3 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i-i-i.html
பாகம் 4 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i-v.html

இனி...

உரத்த குரலில் அவர் எழுப்பிய ஓசை எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது....அவரும் ஒரு மாமாதான்...சட்ட்னெ திரும்பி நான் முறைத்துப்பார்த்தேன்....ஏங்க உள்ள கொண்டு போகக்கூடாது?னு அதட்டிக் கேட்டேன்....எனது கோபம் அவர் வயதை மறைத்துவிட்டது. இல்ல இல்ல ...அவச்சாவு செத்திருக்கான்....வீட்டுக்குள்ள கொண்டு போக கூடாது...புள்ள குட்டிங்க...வாழுற வீடுள்ளன்னு சொன்னாரு.....

அடப்பாவிகளா...எவ்வளவு கஸ்டப்பட்டு வீடு கட்டினாரு தெரியுமா....ஒவ்வொரு செங்கல்லும் அவரோட உழைப்பு வியர்வை...அவர் கட்டுன வீட்டுக்குள்ள அவரோட உடம்பை ஒரு 2 நிமிடமாவது வைக்க முடியாதா? எனக்குள் ஏற்பட்ட கேள்வி அழுகையாய் வெடித்தது. பெரிய மனிதரின் சொல் கேட்டு...உயிரில்லாத அந்த உடம்பு தெருவிலேயே வைக்கப்படது.....உறவுகளின் ஒப்பாரியும்....ஒரு பக்கம் மற்றொரு பக்கம் அவருக்கான....இறுதி ஊர்வலத்துக்கான....ஊர்தி தயாராகிக்கொண்டிருந்தது.

மனிதர்கள் உயிரோடு இருக்கும் போது எவ்வளவு ஆர்ப்பாட்டங்கள்...கட்டிப்பிடிப்பதும்...முத்தம் கொடுப்பதும்...சலவை சட்டையும் வேட்டியும்....மோதிரமென்ன...செயின் என்ன....வாசனை திரவியங்கள் என்ன...அண்ணானு ஒருத்தன்....சொல்லங்க தலைவான்னு ஒருத்தன்...ஆமாம் பாஸ்னு ஒருத்தன்...அன்பே....டார்லிங்..கண்ணா....ராஜா...செல்லமே..எத்தனை எத்தனை பெயர்கள்.....இப்படியெல்லாம் கூப்பிட்டு கடைசியில்..பிணம்டானு ஒரே வார்த்தையில் முடிச்சுடுறாங்க....அடச்சே...என்ன.... வாழ்க்கை இதுன்னு தோன்றியாது. பட்டினத்தார் சொன்னது போல இறந்த உடலைச் சுற்றி இறக்கப்போகும் உடல்கள் ...ஒப்பாரி வைத்த காட்சியும்....சட்டென்று முடிவுக்கு வந்தது........

இறுதி ஊர்வலம் நகரதொடங்கி தெருமுனை வரையும்....சொந்த பந்தங்களின்....அழுகைக்குரல் கேட்டுக் கொண்டிருந்தது......எனக்குள் கண்ணதாசனின் வரிகள்...ஞாபகம் வந்தது...

கூப்பிட்டு பார்த்தால்...கேட்காது....
எந்த கோர்ட்டுக்கும் போனால் ஜெயிக்காது...
அந்த கோட்டையின் வாசல் திறக்காது....
போனால் போகட்டும் போடா....

நானும் ஒரு தோள் கொடுத்து தூக்கி...மாமாவின் உடலோடு... நகர்ந்து கொண்டிருந்தேன்.... நந்தனத்தில் இருந்டு சி.ஐ.டி . நகர் வழியாக கண்ணம்மா பேட்டை நோக்கி.....எல்லாமே புதுசு எனக்கு.....ஆர்ப்பாட்டமாய்.....எகத்தாளமாய்.....இருந்த என் வாழ்வின் ஒரு மிகபெரிய...திருப்புமுனையாகிப் போனது இந்த நிகழ்வு! இதோ.....ஊரெல்லாம் உலகெல்லாம் சுற்றும் மனிதர்கள் கடைசியாக உள் நுழையும்....வாயில் வந்து விட்டது......கண்ணம்மா பேட்டை.........கலக்கமாய்...ஒரு இறுதி ஊர்வலத்தின் இறுதி நிலைக்கு....வந்து விட்டோம்.... நெஞ்சமும் தோளும் கனக்க...ஒரு.....இறுக்கத்துடன்...ஊர்வலம்...வாயிலை கடந்து உள் நுழைகிறது......


தேவா. S



(தொடரும்)


Comments

Chitra said…
////இப்படியெல்லாம் கூப்பிட்டு கடைசியில்..பிணம்டானு ஒரே வார்த்தையில் முடிச்சுடுறாங்க....அடச்சே...என்ன.... வாழ்க்கை இதுன்னு தோன்றியாது. பட்டினத்தார் சொன்னது போல இறந்த உடலைச் சுற்றி இறக்கப்போகும் உடல்கள் ...ஒப்பாரி வைத்த காட்சியும்....சட்டென்று முடிவுக்கு வந்தது........///


...... ஒரு வாழ்க்கை சம்பவம் எவ்வளவு தூரம் உங்களை உலுக்கி போட்டு இருக்கிறது என்பதை, உங்கள் பதவின் ஒவ்வொரு வார்த்தையிலும் உணர முடிகிறது.

பிறப்பையும் இறப்பையும் சாதாரணமாக எடுத்து கொள்வது பலர். ஒரு பிறப்பிலோ இல்லை, இறப்பிலோ, தன் வாழ்க்கையின் நோக்கத்தில் புதிய பாதையை - புதிய அர்த்தத்தை காண்பது வெகு சிலரே. தேவா, இந்த அறிவு அக்னியின் ஒளியும் வெம்மையும் குறையாமல் இருந்து வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்!

இன்று, தற்செயலாக, என் கணவருக்கு உங்களை பற்றி சொல்லி, இந்த பதிவை சேர்ந்து வாசிக்க அவரையும் அழைத்தேன். என்னை பற்றி குறிப்பிட்டு இருந்ததை கண்டு, நாங்கள் நெகிழ்ந்தோம். நன்றி, தேவா!
//மனிதர்கள் உயிரோடு இருக்கும் போது எவ்வளவு ஆர்ப்பாட்டங்கள்//

நான் கூட சில சமயம் யோசித்திருக்கிறேன்.. இருக்கும் போது அவங்களுக்கு பிடிச்ச உணவு செஞ்சு குடுக்க கூட சலிச்சுப்பாங்க.. அதுவே அவங்க இறந்த பிறகு.. இத்தன நாள் விசேஷம் அது, இதுன்னு... வித விதமா செஞ்சு படையல் வைப்பாங்க.. அது எதுக்கு?

எழுத்துப் பயணம் தொடர வாழ்த்துக்கள்
சித்ரா அவர்கள் தான் உங்கள் தளத்தை எனக்கு அறிமுகப் படுத்தினார். நல்ல தொரு மாறுப்பட்ட பதிப்பை வாசித்த திருப்தி, மகிழ்ச்சியுடன் சென்று, மீண்டும் வருகிறேன்.
dheva said…
ஆனந்தி...மறும் தமிழ் உதயம் உங்களின் முதல் வருக்கைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி! தொடர்ந்து வந்து பின்னூட்டமிடுங்கள் அது இன்னும் என் எழுத்துக்கு வலுவூட்டும்! எனது தளத்தை உங்களுகு அறிமுகப்படுத்த்திய சகோதரி சித்ராவிற்கு அனேக நன்றிகள்!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...