பதிவினை தொடங்கும் போது ஏதோ ஒன்று அல்லது இரண்டு பதிவுகளில் முடிந்து விடும் என்று தான் நினைத்து ஆரம்பித்தேன், ஆனால் 5வது பதிவு வரை வர வேண்டிய அவசியமாகி விட்டது. இன்னும் ஒரு பதிவு வரலாம் அல்லது இத்தோடும் முடியலாம்... பார்க்கலாம்....
சகோதரி சித்ரா அவர்கள் எல்லா பாகங்களையும் வரி விடாமல் வாசித்து வாக்களித்து...கருத்துக்களும் தெரிவித்து இருப்பது நெகிழ்ச்சியாக இருந்தது அவரின்...வாசிக்கும் திறன் மட்டுமல்லாது பதிவர்களை ஊக்குவிக்கும் ஒரு தாயுள்ளமும் இருப்பதை என்னால் உணர முடிந்தது. சாதாரணமாக பின்னூட்டத்தில் வாழ்த்து சொல்லவதை விட.... முதன்மைப் பதிவிலேயே அவருக்கு நன்றி தெரிவிப்பதுதான்....தர்மம்..... நன்றிகள் சகோதரி.....!
வாழ்க்கையின் ஓட்டத்தோடு எல்லா நிகழ்வுகளும் சட்டென நடந்து முடிந்து விடுகின்றன.... நினைத்துப் பார்க்கும் போது எல்லாமே கனவாகத்தான் தோன்றுகின்றன.... சரி....மேற்கொண்டு நாம் பயணிக்கலாம்.
இது வரை
பாகம் 1 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i.html
பாகம் 2 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i-i.html
பாகம் 3 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i-i-i.html
பாகம் 4 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i-v.html
இனி...
உரத்த குரலில் அவர் எழுப்பிய ஓசை எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது....அவரும் ஒரு மாமாதான்...சட்ட்னெ திரும்பி நான் முறைத்துப்பார்த்தேன்....ஏங்க உள்ள கொண்டு போகக்கூடாது?னு அதட்டிக் கேட்டேன்....எனது கோபம் அவர் வயதை மறைத்துவிட்டது. இல்ல இல்ல ...அவச்சாவு செத்திருக்கான்....வீட்டுக்குள்ள கொண்டு போக கூடாது...புள்ள குட்டிங்க...வாழுற வீடுள்ளன்னு சொன்னாரு.....
அடப்பாவிகளா...எவ்வளவு கஸ்டப்பட்டு வீடு கட்டினாரு தெரியுமா....ஒவ்வொரு செங்கல்லும் அவரோட உழைப்பு வியர்வை...அவர் கட்டுன வீட்டுக்குள்ள அவரோட உடம்பை ஒரு 2 நிமிடமாவது வைக்க முடியாதா? எனக்குள் ஏற்பட்ட கேள்வி அழுகையாய் வெடித்தது. பெரிய மனிதரின் சொல் கேட்டு...உயிரில்லாத அந்த உடம்பு தெருவிலேயே வைக்கப்படது.....உறவுகளின் ஒப்பாரியும்....ஒரு பக்கம் மற்றொரு பக்கம் அவருக்கான....இறுதி ஊர்வலத்துக்கான....ஊர்தி தயாராகிக்கொண்டிருந்தது.
மனிதர்கள் உயிரோடு இருக்கும் போது எவ்வளவு ஆர்ப்பாட்டங்கள்...கட்டிப்பிடிப்பதும்...முத்தம் கொடுப்பதும்...சலவை சட்டையும் வேட்டியும்....மோதிரமென்ன...செயின் என்ன....வாசனை திரவியங்கள் என்ன...அண்ணானு ஒருத்தன்....சொல்லங்க தலைவான்னு ஒருத்தன்...ஆமாம் பாஸ்னு ஒருத்தன்...அன்பே....டார்லிங்..கண்ணா....ராஜா...செல்லமே..எத்தனை எத்தனை பெயர்கள்.....இப்படியெல்லாம் கூப்பிட்டு கடைசியில்..பிணம்டானு ஒரே வார்த்தையில் முடிச்சுடுறாங்க....அடச்சே...என்ன.... வாழ்க்கை இதுன்னு தோன்றியாது. பட்டினத்தார் சொன்னது போல இறந்த உடலைச் சுற்றி இறக்கப்போகும் உடல்கள் ...ஒப்பாரி வைத்த காட்சியும்....சட்டென்று முடிவுக்கு வந்தது........
இறுதி ஊர்வலம் நகரதொடங்கி தெருமுனை வரையும்....சொந்த பந்தங்களின்....அழுகைக்குரல் கேட்டுக் கொண்டிருந்தது......எனக்குள் கண்ணதாசனின் வரிகள்...ஞாபகம் வந்தது...
கூப்பிட்டு பார்த்தால்...கேட்காது....
எந்த கோர்ட்டுக்கும் போனால் ஜெயிக்காது...
அந்த கோட்டையின் வாசல் திறக்காது....
போனால் போகட்டும் போடா....
நானும் ஒரு தோள் கொடுத்து தூக்கி...மாமாவின் உடலோடு... நகர்ந்து கொண்டிருந்தேன்.... நந்தனத்தில் இருந்டு சி.ஐ.டி . நகர் வழியாக கண்ணம்மா பேட்டை நோக்கி.....எல்லாமே புதுசு எனக்கு.....ஆர்ப்பாட்டமாய்.....எகத்தாளமாய்.....இருந்த என் வாழ்வின் ஒரு மிகபெரிய...திருப்புமுனையாகிப் போனது இந்த நிகழ்வு! இதோ.....ஊரெல்லாம் உலகெல்லாம் சுற்றும் மனிதர்கள் கடைசியாக உள் நுழையும்....வாயில் வந்து விட்டது......கண்ணம்மா பேட்டை.........கலக்கமாய்...ஒரு இறுதி ஊர்வலத்தின் இறுதி நிலைக்கு....வந்து விட்டோம்.... நெஞ்சமும் தோளும் கனக்க...ஒரு.....இறுக்கத்துடன்...ஊர்வலம்...வாயிலை கடந்து உள் நுழைகிறது......
தேவா. S
(தொடரும்)
Comments
...... ஒரு வாழ்க்கை சம்பவம் எவ்வளவு தூரம் உங்களை உலுக்கி போட்டு இருக்கிறது என்பதை, உங்கள் பதவின் ஒவ்வொரு வார்த்தையிலும் உணர முடிகிறது.
பிறப்பையும் இறப்பையும் சாதாரணமாக எடுத்து கொள்வது பலர். ஒரு பிறப்பிலோ இல்லை, இறப்பிலோ, தன் வாழ்க்கையின் நோக்கத்தில் புதிய பாதையை - புதிய அர்த்தத்தை காண்பது வெகு சிலரே. தேவா, இந்த அறிவு அக்னியின் ஒளியும் வெம்மையும் குறையாமல் இருந்து வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்!
இன்று, தற்செயலாக, என் கணவருக்கு உங்களை பற்றி சொல்லி, இந்த பதிவை சேர்ந்து வாசிக்க அவரையும் அழைத்தேன். என்னை பற்றி குறிப்பிட்டு இருந்ததை கண்டு, நாங்கள் நெகிழ்ந்தோம். நன்றி, தேவா!
நான் கூட சில சமயம் யோசித்திருக்கிறேன்.. இருக்கும் போது அவங்களுக்கு பிடிச்ச உணவு செஞ்சு குடுக்க கூட சலிச்சுப்பாங்க.. அதுவே அவங்க இறந்த பிறகு.. இத்தன நாள் விசேஷம் அது, இதுன்னு... வித விதமா செஞ்சு படையல் வைப்பாங்க.. அது எதுக்கு?
எழுத்துப் பயணம் தொடர வாழ்த்துக்கள்