Skip to main content

சந்தியா குட்டியின் பிறந்த நாளும்... நம்ம ஊர் நினைவுகளும்...!

துபாயிலிருந்து அபுதாபிக்கு சென்று கொண்டிருக்கிறேன்....பாலைவனத்துக்கு நடுவே.... எப்படி இந்த சாலைகளை தரமானதாக உருவாக்கிஅதை பராமரிக்கிறார்கள் என்று வியந்து கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.....உச்சி நேரத்தில் பயணம் செய்ய வேண்டும் வழியில் நமது ஊர் உணவுகள் கிடைக்காது என்பதால் துபாயில் இருந்தே...சரவண பவனில் தயிர் சாதமும், சாம்பார் சாதமும் வாங்கிக் கொண்டு சென்றோம்.

நல்ல உச்சி வெயில் எங்காவது வண்டியை நிறுத்திவிட்டு மதிய உணவை முடிக்கலாம்.....என்று நிறுத்த நிழல் கூட இல்லையே என்று எண்ணிக்கொண்டு இருக்கும் போது சரலென்று...மனம் ஊரை நோக்கி பறந்ததது... நம்ம ஊரில் எல்லாம் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு செல்லும் வழி நெடுகிலும் எத்தனை மரங்கள் இருக்கும்....சாலையே தெரியாத அளவிற்கு....எவ்வளவு நிழல் இருக்கும்.....சாலை அப்படி இப்படி இருந்தாலும்.....ஒரு உயிர்ப்பை நமது ஊரில் பார்க்க முடியும்....

ஊர் என்றால் ஒரு கண்மாய்க்கரை ஓர மரமாக வண்டியை நிறுத்திவிட்டு....உணவை முடித்துவிட்டு.....கண்மாய் தண்ணீரில் பாத்திரம் கை எல்லாம் கழுவி விட்டு...எவ்வளவு வெயிலாய் இருந்தாலும் குளு குளு காற்று வீசும் மரத்தினடியில் கொஞ்ச நேரம் ஆழ்ந்து சுவாசித்தால் எவ்வளவு ஆசுவாசமாயிருக்கும்....

வழி நெடுகிலும் கிராமங்களும்....மனிதர்களும்...வாழ்க்கைமுறைகளும் நாம் வேடிக்கையாக பார்த்துக் கொண்டே செல்லலாம்....பள்ளி செல்லும் குழந்தைகளும்....குறுக்கே வரும் மாட்டு வண்டியும்....ஒவ்வொரு சிற்றூரையும் கடந்து செல்லும் போது காணும் டீக்கடைகள்...வாசலிலும் சுற்றிலும் நிற்கும் மனிதர்கள்...முரட்டு மீசையும்... நரைத்த முடியும்....சட்டையில்ல உடம்பில் கம்னியூஸ்ட் சிவப்பு துண்டும் அணிந்த பெரிசுகளும்...மொத்தத்தில்....ஒரு பால்காரரின் மணி ஓசையும், ரோட்டில் யாரோ யாரிடம் சண்டை போடுவதையும் நாம் தவிர்க்காமல் நாம் காணமுடியும்.....

எங்கும் மனிதர்கள்...வெற்றிலை குதப்பிய ஆண்கள் பெண்கள்...காக்கா..குருவி...ஆடு...மாடு.......பாங்க்......பாங்க்....பாங்க்..........ஏதோ ஒரு ஹாரன் ஒலி...என்னை திரும்ப...துபாய் டு அபுதாபி சாலைக்கு மீண்டும் கொண்டுவர......ஏக்கம் கலையாமல் சாலை ஓரமாக இருந்த வண்டியை டபுள் பார்க்கிங்க் இட்டு விட்டு.....வெயில் உள்ளே வராமல் ஏ.சி. யை கூடுதலாக வைத்துவிட்டு....வாங்கி வந்த தயிர் சாதத்தை....காலி பண்ணி விட்டு...மீண்டும் வண்டியை உசுப்பேற்றி அபுதாபி நோக்கி வண்டியை சீர விட்டேன்...

அச்சச்சோ.....எதுக்கு அபுதாபி போறேன்னு சொல்லவே இல்லையே...... நம்ம ராமராஜ் அண்ணன் (குடும்ப நண்பர்) பொண்ணு சந்தியாகுட்டிக்கு பிறந்த நாள்ங்க....15.05.2010 அன்னைக்கு 8 வயது ஆகிறது இந்த பட்டாம் பூச்சிக்கு.....வாழ்த்த போறேங்க.....


குட்டிப்பெண் சந்தியாவை .....என்னோடு சேர்ந்து.... நீங்களும் வாழ்த்துங்களேன்.....!

Comments

குட்டி சந்தியா விற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
AltF9 Admin said…
Biranthanaal valthukal santhiya , athellam ok , thayir sathatha thaniya oru alava sapidanna ,
அனு said…
சந்தியா குட்டிக்கு முதல் வாழ்த்து என்னிடம் இருந்து.. :)
சந்தியாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!
வாழ்க்கையெனும் சோலையிலே
வசந்த மலர்கள் வாசம் வீச
விலையில்லா அன்புடனும்
நிலைகொண்ட புகழுடனும்
இன்று போல் என்றும்
சந்தோசமாய் வாழ
சந்தியாவை நானும்
வாழ்த்துகிறேன்...
Anonymous said…
belated happy birth day to sandhyakutty...
சங்கீதமாய் சிரிக்கும் சந்தியாவிற்கு...
சகலமும் இறையருளால் கிடைக்க
வாழ்த்துக்கள்.. :)

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...