Skip to main content

சந்தியா குட்டியின் பிறந்த நாளும்... நம்ம ஊர் நினைவுகளும்...!

துபாயிலிருந்து அபுதாபிக்கு சென்று கொண்டிருக்கிறேன்....பாலைவனத்துக்கு நடுவே.... எப்படி இந்த சாலைகளை தரமானதாக உருவாக்கிஅதை பராமரிக்கிறார்கள் என்று வியந்து கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.....உச்சி நேரத்தில் பயணம் செய்ய வேண்டும் வழியில் நமது ஊர் உணவுகள் கிடைக்காது என்பதால் துபாயில் இருந்தே...சரவண பவனில் தயிர் சாதமும், சாம்பார் சாதமும் வாங்கிக் கொண்டு சென்றோம்.

நல்ல உச்சி வெயில் எங்காவது வண்டியை நிறுத்திவிட்டு மதிய உணவை முடிக்கலாம்.....என்று நிறுத்த நிழல் கூட இல்லையே என்று எண்ணிக்கொண்டு இருக்கும் போது சரலென்று...மனம் ஊரை நோக்கி பறந்ததது... நம்ம ஊரில் எல்லாம் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு செல்லும் வழி நெடுகிலும் எத்தனை மரங்கள் இருக்கும்....சாலையே தெரியாத அளவிற்கு....எவ்வளவு நிழல் இருக்கும்.....சாலை அப்படி இப்படி இருந்தாலும்.....ஒரு உயிர்ப்பை நமது ஊரில் பார்க்க முடியும்....

ஊர் என்றால் ஒரு கண்மாய்க்கரை ஓர மரமாக வண்டியை நிறுத்திவிட்டு....உணவை முடித்துவிட்டு.....கண்மாய் தண்ணீரில் பாத்திரம் கை எல்லாம் கழுவி விட்டு...எவ்வளவு வெயிலாய் இருந்தாலும் குளு குளு காற்று வீசும் மரத்தினடியில் கொஞ்ச நேரம் ஆழ்ந்து சுவாசித்தால் எவ்வளவு ஆசுவாசமாயிருக்கும்....

வழி நெடுகிலும் கிராமங்களும்....மனிதர்களும்...வாழ்க்கைமுறைகளும் நாம் வேடிக்கையாக பார்த்துக் கொண்டே செல்லலாம்....பள்ளி செல்லும் குழந்தைகளும்....குறுக்கே வரும் மாட்டு வண்டியும்....ஒவ்வொரு சிற்றூரையும் கடந்து செல்லும் போது காணும் டீக்கடைகள்...வாசலிலும் சுற்றிலும் நிற்கும் மனிதர்கள்...முரட்டு மீசையும்... நரைத்த முடியும்....சட்டையில்ல உடம்பில் கம்னியூஸ்ட் சிவப்பு துண்டும் அணிந்த பெரிசுகளும்...மொத்தத்தில்....ஒரு பால்காரரின் மணி ஓசையும், ரோட்டில் யாரோ யாரிடம் சண்டை போடுவதையும் நாம் தவிர்க்காமல் நாம் காணமுடியும்.....

எங்கும் மனிதர்கள்...வெற்றிலை குதப்பிய ஆண்கள் பெண்கள்...காக்கா..குருவி...ஆடு...மாடு.......பாங்க்......பாங்க்....பாங்க்..........ஏதோ ஒரு ஹாரன் ஒலி...என்னை திரும்ப...துபாய் டு அபுதாபி சாலைக்கு மீண்டும் கொண்டுவர......ஏக்கம் கலையாமல் சாலை ஓரமாக இருந்த வண்டியை டபுள் பார்க்கிங்க் இட்டு விட்டு.....வெயில் உள்ளே வராமல் ஏ.சி. யை கூடுதலாக வைத்துவிட்டு....வாங்கி வந்த தயிர் சாதத்தை....காலி பண்ணி விட்டு...மீண்டும் வண்டியை உசுப்பேற்றி அபுதாபி நோக்கி வண்டியை சீர விட்டேன்...

அச்சச்சோ.....எதுக்கு அபுதாபி போறேன்னு சொல்லவே இல்லையே...... நம்ம ராமராஜ் அண்ணன் (குடும்ப நண்பர்) பொண்ணு சந்தியாகுட்டிக்கு பிறந்த நாள்ங்க....15.05.2010 அன்னைக்கு 8 வயது ஆகிறது இந்த பட்டாம் பூச்சிக்கு.....வாழ்த்த போறேங்க.....


குட்டிப்பெண் சந்தியாவை .....என்னோடு சேர்ந்து.... நீங்களும் வாழ்த்துங்களேன்.....!

Comments

குட்டி சந்தியா விற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
AltF9 Admin said…
Biranthanaal valthukal santhiya , athellam ok , thayir sathatha thaniya oru alava sapidanna ,
அனு said…
சந்தியா குட்டிக்கு முதல் வாழ்த்து என்னிடம் இருந்து.. :)
சந்தியாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!
வாழ்க்கையெனும் சோலையிலே
வசந்த மலர்கள் வாசம் வீச
விலையில்லா அன்புடனும்
நிலைகொண்ட புகழுடனும்
இன்று போல் என்றும்
சந்தோசமாய் வாழ
சந்தியாவை நானும்
வாழ்த்துகிறேன்...
Anonymous said…
belated happy birth day to sandhyakutty...
சங்கீதமாய் சிரிக்கும் சந்தியாவிற்கு...
சகலமும் இறையருளால் கிடைக்க
வாழ்த்துக்கள்.. :)

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...