Skip to main content

தமிழீழம் வென்றெடுப்போம்....!


என்னமோ...விடுதலைப்புலிகளை கூண்டோடு அழித்து விட்டோம்...வெற்றி கண்டு விட்டோம் என்று கொக்கரிக்கிறாயே...ராஜ பக்ஸே உன் கூட சேர்ந்து உன் ராணுவமும் கொக்கரிக்கிறதே...உங்களுக்கு எல்லாம் வெட்கமாக இல்லையா? உள் நாட்டுக்குள் விடுதலை கேட்டு தார்மீக அடிப்படையில் உங்களின் அராஜகம் தாங்காமல் போராடிய ஒரு இளைஞர் கூட்டதை அழிக்க.....உலக நாடுகள் எல்லாம் வரவேண்டும் என்றால்....மறவர் படையின்...மரத் தமிழனின் வீரம் எத்தகையது என்று நாம் உணர முடியும்.

வல்லரசுக் கனவோடு....இன்னும் ஊழல் நிறைந்த சாக்கடை அரசியல் நடத்தி கொண்டு....மகாத்மாவின் பெயரை சொல்லிக் கொண்டு.......பழிவாங்கும் உணர்வையும் மென்று வெற்றிலை போட்டு தன் மேலேயே...உமிழ்ந்து கொண்ட....பாரதமே.... நீங்கள் எதையும் சாதித்து விட வில்லை....என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்....மேலே...சீனாகாரன் வருவான் உங்களை கேள்வி கேட்க....அப்போது முடிந்தால் பதில் சொல்லுங்கள்...! இலங்கையில் நீங்கள் செய்திருப்பது....முரசு கொட்டிய வெற்றியில்லை....கேவலமான.....அசிங்கம்.....தரும புத்திரர்களே.....ஏன் சகுனியைப் போல் நடந்து கொண்டீர்கள்....வாழ்விழந்த மக்களின் சாபம்..என்னவெல்லாம் உங்களை செய்யுமோ?

இப்படி சீனாகாரனிடமும், பாகிஸ்தான்காரனிடமும்...பிச்சை எடுத்து ஒரு.... இன அழிப்பை நடத்திவிட்டு என்ன கொக்கரிப்பு வேண்டி கிடக்கிறது? வரலாற்றில்...ஒரு முக்கியமான விசயம் நடந்தேறி விட்டது....அதில் தமிழனின் பராக்கிரமம்....பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டு விட்டது. அது என்ன தெரியுமா? ஒரு உள் நாட்டிற்குள் உரிமை கேட்டு போராடிய குழுவை ஒழிப்பதற்கு...உலகமே திரண்டு வந்து....சண்டையிட வேண்டிய நிலைமை....என்றால்....தமிழனின் வீரம் எத்தகையது என்று சொல்லத்தேவையில்லை....

தனியே....ராஜ பக்ஸேயும் அவரது....கூட்டணியும் போரிட்டு இருந்தால்.....சிங்களவனின்...சாம்பல் கூட மிஞ்சி இருக்காது...இந்த உண்மை உலகத்துக்கே தெரியும்.......! காலச்சக்கரம்...தன் சுழற்சியை...இன்னும் நிறுத்த்திவிடவில்லை....அந்த சுழற்சியில்...சூழ்ச்சி வேர்கள் கட்டாயம் அறுந்து போகும்.....!

முட்டாள் சிங்களவன் ஒரு பிரபாகரனை..ஒழித்துவிட்டதாய்...கொக்கரிக்கிறான்......ஆனால் ஒவ்வொரு உண்மைத் தமிழனும் இன்று பிரபாகரனாய் மாறி நிற்கிறான்...தமீழீழம் வென்றெடுக்க.....!


தேவா. S

Comments

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தன் சொன்னதாக பாடத்திட்டத்தில் எழுதி வைத்துள்ளனர், இதை சொன்ன புத்தன் மடையனா, இல்லை நம்மையெல்லாம் படிக்க வைத்துள்ளதால் நாம் மடையர்களா, புத்தம் தேசிய மதம் என வைத்துகொண்டு மாரடிக்கும் இலங்கையில் அன்பு உள்ளதா இல்லை அமைதி உள்ளதா மனிதனை மனிதனாக மதித்து அன்பையும் அறிவையும் போதிக்கவேண்டிய ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் படுகொலை நடத்தினால் கண்டிக்கிறது. இலங்கை சம்பவத்தில் ஏன் நடிக்கிறது
இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் இலங்கை எவ்வாறு திகழ்கிறது என்று தமிழன் தமிழனாக வாழவேண்டுமானால் தமிழ் ஈழம் அமைந்தே தீரவேண்டும் ஈழத்தின் விடுதலை நெருப்பு இலங்கையை எரிக்கட்டும் இனமான தமிழினம் எழுச்சியுடன் எழும்பட்டும் , இன்னல்களையே தன்னகத்தே கொண்டு இன்னுயிர் ஈந்த போராளிகளுக்கும் இனிய தமிழ் உறவுகளுக்கும் வீரவணக்கம் செய்வதோடு நின்று விடாமல் வீர சபதம் மேற்கொள்வோம்...
பொட்டில் அடித்தாற்போல் சொல்லிருக்கிறாய் நண்பா...

என்றும் வாழ்க தமிழ்! எங்கும் வெல்க தமிழனின் வீரம்!

வாழ்த்துக்கள்.
அன்பன்,
ராம்
Chitra said…
////வல்லரசுக் கனவோடு....இன்னும் ஊழல் நிறைந்த சாக்கடை அரசியல் நடத்தி கொண்டு....மகாத்மாவின் பெயரை சொல்லிக் கொண்டு.......பழிவாங்கும் உணர்வையும் மென்று வெற்றிலை போட்டு தன் மேலேயே...உமிழ்ந்து கொண்ட....பாரதமே.... நீங்கள் எதையும் சாதித்து விட வில்லை....என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.///


..... ம்ம்ம்ம்....... வேதனையான விஷயம்.
INDIA 2121 said…
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
நிச்சயம் ஒருநாள் தர்மம் வெல்லும்
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com
//இலங்கையில் நீங்கள் செய்திருப்பது....முரசு கொட்டிய வெற்றியில்லை //

மறுக்க முடியாத உண்மை..
உங்கள் மன வேதனையை உணர முடிகிறது.. சொன்ன விதம் சிறப்பு, தேவா.

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...