
என்னமோ...விடுதலைப்புலிகளை கூண்டோடு அழித்து விட்டோம்...வெற்றி கண்டு விட்டோம் என்று கொக்கரிக்கிறாயே...ராஜ பக்ஸே உன் கூட சேர்ந்து உன் ராணுவமும் கொக்கரிக்கிறதே...உங்களுக்கு எல்லாம் வெட்கமாக இல்லையா? உள் நாட்டுக்குள் விடுதலை கேட்டு தார்மீக அடிப்படையில் உங்களின் அராஜகம் தாங்காமல் போராடிய ஒரு இளைஞர் கூட்டதை அழிக்க.....உலக நாடுகள் எல்லாம் வரவேண்டும் என்றால்....மறவர் படையின்...மரத் தமிழனின் வீரம் எத்தகையது என்று நாம் உணர முடியும்.
வல்லரசுக் கனவோடு....இன்னும் ஊழல் நிறைந்த சாக்கடை அரசியல் நடத்தி கொண்டு....மகாத்மாவின் பெயரை சொல்லிக் கொண்டு.......பழிவாங்கும் உணர்வையும் மென்று வெற்றிலை போட்டு தன் மேலேயே...உமிழ்ந்து கொண்ட....பாரதமே.... நீங்கள் எதையும் சாதித்து விட வில்லை....என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்....மேலே...சீனாகாரன் வருவான் உங்களை கேள்வி கேட்க....அப்போது முடிந்தால் பதில் சொல்லுங்கள்...! இலங்கையில் நீங்கள் செய்திருப்பது....முரசு கொட்டிய வெற்றியில்லை....கேவலமான.....அசிங்கம்.....தரும புத்திரர்களே.....ஏன் சகுனியைப் போல் நடந்து கொண்டீர்கள்....வாழ்விழந்த மக்களின் சாபம்..என்னவெல்லாம் உங்களை செய்யுமோ?
இப்படி சீனாகாரனிடமும், பாகிஸ்தான்காரனிடமும்...பிச்சை எடுத்து ஒரு.... இன அழிப்பை நடத்திவிட்டு என்ன கொக்கரிப்பு வேண்டி கிடக்கிறது? வரலாற்றில்...ஒரு முக்கியமான விசயம் நடந்தேறி விட்டது....அதில் தமிழனின் பராக்கிரமம்....பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டு விட்டது. அது என்ன தெரியுமா? ஒரு உள் நாட்டிற்குள் உரிமை கேட்டு போராடிய குழுவை ஒழிப்பதற்கு...உலகமே திரண்டு வந்து....சண்டையிட வேண்டிய நிலைமை....என்றால்....தமிழனின் வீரம் எத்தகையது என்று சொல்லத்தேவையில்லை....
தனியே....ராஜ பக்ஸேயும் அவரது....கூட்டணியும் போரிட்டு இருந்தால்.....சிங்களவனின்...சாம்பல் கூட மிஞ்சி இருக்காது...இந்த உண்மை உலகத்துக்கே தெரியும்.......! காலச்சக்கரம்...தன் சுழற்சியை...இன்னும் நிறுத்த்திவிடவில்லை....அந்த சுழற்சியில்...சூழ்ச்சி வேர்கள் கட்டாயம் அறுந்து போகும்.....!
முட்டாள் சிங்களவன் ஒரு பிரபாகரனை..ஒழித்துவிட்டதாய்...கொக்கரிக்கிறான்......ஆனால் ஒவ்வொரு உண்மைத் தமிழனும் இன்று பிரபாகரனாய் மாறி நிற்கிறான்...தமீழீழம் வென்றெடுக்க.....!
தேவா. S
Comments
இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் இலங்கை எவ்வாறு திகழ்கிறது என்று தமிழன் தமிழனாக வாழவேண்டுமானால் தமிழ் ஈழம் அமைந்தே தீரவேண்டும் ஈழத்தின் விடுதலை நெருப்பு இலங்கையை எரிக்கட்டும் இனமான தமிழினம் எழுச்சியுடன் எழும்பட்டும் , இன்னல்களையே தன்னகத்தே கொண்டு இன்னுயிர் ஈந்த போராளிகளுக்கும் இனிய தமிழ் உறவுகளுக்கும் வீரவணக்கம் செய்வதோடு நின்று விடாமல் வீர சபதம் மேற்கொள்வோம்...
என்றும் வாழ்க தமிழ்! எங்கும் வெல்க தமிழனின் வீரம்!
வாழ்த்துக்கள்.
அன்பன்,
ராம்
..... ம்ம்ம்ம்....... வேதனையான விஷயம்.
நிச்சயம் ஒருநாள் தர்மம் வெல்லும்
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com
மறுக்க முடியாத உண்மை..
உங்கள் மன வேதனையை உணர முடிகிறது.. சொன்ன விதம் சிறப்பு, தேவா.