Skip to main content

உன்னை மறுக்கிறோம்...காலமே...!















வல்லூறுகள்...வகுத்தளிக்க....
எமக்கு ஒரு வாழ்க்கையா?
குள்ள நரிகள் தலைமை தாங்க....
வேங்கைகள் பணிந்து செல்வதா...
பிழைத்துப் போன வரலாற்றுக்கு
எம் தமிழனம் பழியாவதா?
உன்னை மறுக்கிறோம்...காலமே...
எம் எதிரிகள்..கருவறுக்கிறோம்...காலமே!

எமக்கான மண்ணில்...
யாரடா... நீ ஆட்சி செய்ய....?
எம் மக்கள் கண் பார்க்க...
உம் பார்வை எமக்கெதற்கு.....
கற்பு நெறி கொண்ட...எம் பெண்டிர்க்கு
கறுப்பு ஆடுகள்...காவலெதற்கு...!
உன்னை மறுக்கிறோம்...காலமே...
எம் எதிரிகள்..கருவறுக்கிறோம்...காலமே!

மார்பகம் உறிஞ்சி...உறிஞ்சி....
மரித்த தாயென்றரியாது..
தவித்த எம் குழந்தைகள்...எல்லாம்...
மரத்துப் போய்விடும்...அல்லது
நீதி மரித்துப் போய்விடும் என்றா நினைத்தாய்?
வெற்று மோகத்திலில்லாது.
தமிழ் ஈழ தாகத்தில்....இனி...
தழைக்கும் என் சந்ததி...!
உன்னை மறுக்கிறோம்...காலமே...
எம் எதிரிகள்..கருவறுக்கிறோம்...காலமே!

போர் முடிந்த்து போனதனால்...
எம் வடு மறைந்து போகுமா....
கல்லறையான எமது....உறவுகள்..
கண் முன் இனி தோன்றுமா...?
நீவீர் வென்று விட்டோம் ..
என்று சொன்னால் - அது
வெற்றியென்றாகுமா?
உன்னை மறுக்கிறோம்...காலமே...
எம் எதிரிகள்..கருவறுக்கிறோம்...காலமே!

வரலாற்றின்..பக்கங்களில்...
திருத்தங்கள் செய்து வை...!
எதிரியின் விலா எழும்புகளை..
தேடி எடுத்து..வென்றது தமிழனென்று...
பொன்னெழுத்தில் பொறித்துவை....
தற்போதைய..உன் செயலை....
நிரந்தரமாய்....மறுக்கிறோம்...காலமே...
எம் எதிரிகள்..கருவறுக்கிறோம்...காலமே!



தேவா. S

Comments

ஈழ மண்ணில் சுதந் திரக் காற்று வீசும் என்ற நம்பிக்கை இன்னமும் அற்றுப் போய்விடவில்லை..
//போர் முடிந்த்து போனதனால்...
எம் வடு மறைந்து போகுமா....
கல்லறையான எமது....உறவுகள்..
கண் முன் இனி தோன்றுமா..//

அந்தக்கொடுமை என் கண்முன்னே விரிகிறது...

இந்த பதிவுக்கேற்ற படம்... அதைப்பார்க்கையிலேயே கண்களில் நீர் கோர்க்கிறது...
//மார்பகம் உறிஞ்சி...உறிஞ்சி....
மரித்த தாயென்றரியாது..
தவித்த எம் குழந்தைகள்...எல்லாம்...
மரத்துப் போய்விடும்...அல்லது
நீதி மரித்துப் போய்விடும் என்றா நினைத்தாய்?
வெற்று மோகத்திலில்லாது.
தமிழ் ஈழ தாகத்தில்....இனி...
தழைக்கும் என் சந்ததி...!
உன்னை மறுக்கிறோம்...காலமே...
எம் எதிரிகள்..கருவறுக்கிறோம்...காலமே!//

கொடுமைகள்தானுங்க.. சொல்லி மாளாது..... மனதுக்குள் புழுங்குவதைத்தவிர வேறொன்றுமில்லை....

Popular posts from this blog

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

முரட்டுக் காளை....!

தலைவரை பத்தி எழுத சொல்லிட்டு தம்பி அருண் பாட்டுக்கு போய்ட்டான்....! நாம ஏற்கனவே ரஜினினு சொன்னாலே பத்திகிட்டு எரிவோம்....இதுல பெட்ரோல வேற ஊத்துன எப்டி? ....சும்மா பத்திகிட்டு எரியும்ல..எரிமலை மாதிரி..ஹா...ஹா..ஹா...! தலிவர் படத்த லிஸ்ட் எல்லாம் பண்ண முடியாது.. என்ன பொறுத்த வரைக்கும்....எல்லாமே... நம்பர் 1 தான்...!!! இது எப்டி இருக்கு....ஸ்ட்ரெய்ட்டா மேட்ருக்குள்ள போவமா....இப்டிச் சூடு..... முரட்டுக்காளை (1980) படம் போட்ட கொஞ்ச நேரத்துல நான் பயந்தே போய்ட்டேன்....! ஒரு காளை மாடு முரட்டுத்தனமா நிக்கும் போது.. அத அடக்க சிங்கம் மாதிரி நம்ம சூப்பர் ஸ்டார்.....! என்னோட கவலை எல்லாம் தலிவருக்கு ஒண்ணும் ஆகக்கூடாதுன்னுதான்....அது எப்டி ஆகும் தலைவர் சும்மா பிரிச்சு மேஞ்சு காளைய அடக்குற வரைக்கும் பக்கத்து சீட்ல இருந்த ஆள டேமேஜ் ஆக்கிட்டேன்...ஜு ஜு பி....!எப்பவுமே தலிவர் படம்னா...அப்டிதான்...இஹ் ஹா...ஹா ஹா..! அதுக்கு அப்புறம் வர்ற பாட்டு...நான் சொல்ல தேவயில்ல..உங்க ஹிட் இல்ல எங்க ஹிட் இல்ல.. உலக ஹிட்.... தமிழ் சினிமாவுக்கே பஞ்சர் பாத்த படம்.... ! எங்க ஊர்..(எந்த ஊர்னு கேட்டா ரூட்டு மாறிடும்...ட்ராக்க ...