Skip to main content

புறம்.....!


















ஒரு நிசப்தமான இரவில்
வெற்று வானமும் ஒற்றை நிலவும்
என் உயிர்தடவிய கணங்களை
எழுத நினைத்த நிமிடங்களில்
வந்தது உன் நினைவு...!

கலைந்து செல்லும் மேகங்களில்
மறைந்து நின்று கண் சிமிட்டுவது...
நீயென்று கணித்து முடித்த கணத்தில்...
கை கொட்டி சிரித்தது .... நட்சத்திரம்...!

உடல் ஊடுருவி அணைத்தது
நீதான் என்று உணர்ச்சிவயப்பட்ட நேரத்தில்
பரிகசித்து..பயணம் முடித்திருந்தது
நடு நிசியின் ஊதக் காற்று....

கிறக்கத்தில் கண்மூடினால்...
நீ வருவதும்....கண் திறந்தால்
நீ மறைவதும் என்ற கண்ணாமூச்சியில்
வழிந்தோடிக் கொண்டிருந்த இரவில்
பரவிக்கிடந்த கருமையை
விரிந்து கிடக்கும் உன் கூந்தலென்று
நினைத்து முடித்த மாத்திரத்தில்
பரிகாசமாய் விடிந்தே போனது பொழுது....!


காதலில் தகிக்கும் எல்லோரும் 240 வால்ட் மின்சாரத்தை உடம்பில் ஏற்றுக் கொண்டிருப்பவர்கள்தான். ஒரு இரவின் வெறுமையில் ஒற்றை நிலவும் ...ஒரு நிலவுதான் யார் இல்லேன்னு சொன்னது...? காதல் தகிப்பில் ஒரு நிலவு என்பதே பெரிய சிலாகிப்பாக தெரிகிறது. காதல் வயப்படும் கணங்களில் எல்லாமே அர்த்தம் பொதிந்ததாயும் ஒரு வித குழந்தையை ஒத்த மனோ நிலையும் ஏற்படுவதுதான் அழகு.

ஒரு படத்துக்கு ட்ரெய்லர் மாதிரிதான்...ஆன்மிக உச்சத்துக்கான ட்ரெய்லர் காதல் அனுபவம். பெரும்பாலும் அதனை அன்னம் பிரிக்கும் பால் போல பிரித்து...உருவம் விலக்கி அருவத்தை உள்ளே வைத்து...அதாவது உணர்வுகளை உள்ளே படரவிட்டு....அதில் லயித்துக் கிடப்பது ஒரு அலாதியான அனுபவம். இந்த சந்தோசம் எங்கே இருந்து கிடைக்கிறது... நமக்குள்ளேதான்...ஆனால் அதற்கு ஒரு தூண்டு சக்தி....புறத்தில் தேவைப்படுகிறது....

பழக..பழக... புறத்தின் தொடர்பறுந்து..... நமக்குள் நாமே காதலோடு நிறைந்து கிடக்கும் ஆச்சர்யமும் நடக்கும்....அதற்கு..தேவை புரிதலுடன் கூடய பொறுமையான பயணம்.....!


தேவா. S




Photo Courtesy: Ms. Ramya Pilai
Article & image copy right @ http://maruthupaandi.blogspot.com

Comments

Chitra said…
////உருவம் விலக்கி அருவத்தை உள்ளே வைத்து...அதாவது உணர்வுகளை உள்ளே படரவிட்டு....அதில் லயித்துக் கிடப்பது ஒரு அலாதியான அனுபவம்.////


..... அனுபவம் பேசுதோ? ரைட்டு!!!
Chitra said…
பரவிக்கிடந்த கருமையை
விரிந்து கிடக்கும் உன் கூந்தலென்று
நினைத்து முடித்த மாத்திரத்தில்

.... sweet!!!
கிறக்கத்தில் கண்மூடினால்...
நீ வருவதும்....கண் திறந்தால்
நீ மறைவதும் என்ற கண்ணாமூச்சியில்
வழிந்தோடிக் கொண்டிருந்த இரவில்
பரவிக்கிடந்த கருமையை
விரிந்து கிடக்கும் உன் கூந்தலென்று
நினைத்து முடித்த மாத்திரத்தில்
பரிகாசமாய் விடிந்தே போனது பொழுது....!

//


அவளின் (அவர்களின்) நினைவுகளால் உறக்கம் தொலைத்ததொடு மட்டுமல்லாமல் உங்களையும் தொலைத்திருக்கிரீர்கள்..
Jey said…
இளமை திரும்புகிறது தேவாவுக்கு....:)
பழக..பழக... புறத்தின் தொடர்பறுந்து..... நமக்குள் நாமே காதலோடு நிறைந்து கிடக்கும் ஆச்சர்யமும் நடக்கும்....அதற்கு..தேவை புரிதலுடன் கூடய பொறுமையான பயணம்.....!

//


Nice lines
பழக..பழக... புறத்தின் தொடர்பறுந்து..... நமக்குள் நாமே காதலோடு நிறைந்து கிடக்கும் ஆச்சர்யமும் நடக்கும்....அதற்கு..தேவை புரிதலுடன் கூடய பொறுமையான பயணம்.....!

//


Nice lines
dheva said…
சித்ரா...@ அனுபம் எப்போ பேசியிருக்கு...கவிதைதான் எழுதுது...ஹா..ஹா..ஹா..!
dheva said…
ஜெய்...@ பங்காளி...எப்போ நமக்கு வயசாச்சு.....?
dheva said…
வெறும் பய தம்பிய பாருங்க..காதல்னா துள்ளி குதிகிறான்..வேற கட்டுரைனா...பம்முறான்....ஆமா எங்க ஏமியோட காதலனை காணோம்....?
Ramesh said…
உணர்வுகளில் லயித்துக்கிடப்பது...அருமையாக எழுதி இருக்கிறீர்கள் தேவா....
காதலி முகத்தை பார்த்து விட்டால், எதற்கு தனியாக ஒரு நிலவு. அது தேவையே இல்லையே! ;)
dheva said...

வெறும் பய தம்பிய பாருங்க..காதல்னா துள்ளி குதிகிறான்..வேற கட்டுரைனா...பம்முறான்....ஆமா எங்க ஏமியோட காதலனை காணோம்....?

//

நமக்கு இந்த காதல் மட்டும் தான் ஈசியா மண்டையில ஏறுது.. மத்ததெல்லாம் பம்முது..... இப்போ கூட பாருங்க மத்ததெல்லாம் பத்து தடவை படிச்சா கூட புரியமாட்டேங்குது.. இது ஒரு தடவை தான் பாத்தேன் பக்குன்னு ஒட்டிகிச்சு..
//கிறக்கத்தில் கண்மூடினால்...
நீ வருவதும்....கண் திறந்தால்
நீ மறைவதும் என்ற கண்ணாமூச்சியில்
வழிந்தோடிக் கொண்டிருந்த இரவில்
பரவிக்கிடந்த கருமையை
விரிந்து கிடக்கும் உன் கூந்தலென்று
நினைத்து முடித்த மாத்திரத்தில்
பரிகாசமாய் விடிந்தே போனது பொழுது....!// எனக்கு மட்டும் இந்த மாதிரி கனவு வரவே மாட்டேங்குதே. காதலும் கண்ணாமூச்சியாட்டம் ஒன்னுதாண்ணே.
nis said…
நல்லா இருக்கிறது
//அதாவது உணர்வுகளை உள்ளே படரவிட்டு....அதில் லயித்துக் கிடப்பது ஒரு அலாதியான அனுபவம்// ரொம்ப சரிண்ணே.... சூப்பரா இருக்கும். கூடவே ஒரு பெருமூச்சும் சேர்ந்து வந்தா என்ன அர்த்தம்ணே
அடி மின்சார ரயிலே
உன்னோடு பயணிக்க ஊரார் ஆசைபட
ஒத்தையாக என்னோடு வந்தாய்

தண்டவாளத் தனிமையில்
தவழ்ந்தோடலாம்

தாக்குப் பிடிக்க நான் தயார்
தெறத்தோட நீ தயாரா ?


என்னடா ஜில்லு கவிதலாம் எழுதுற ???
சரி எதோ பீலிங்க்சுல கிறுக்கிட்டனோ :)

ஃபீலிங்கசை வர வழைத்த தேவா அண்ணனுக்கு நன்றி :)
//இந்த சந்தோசம் எங்கே இருந்து கிடைக்கிறது... நமக்குள்ளேதான்...ஆனால் அதற்கு ஒரு தூண்டு சக்தி....புறத்தில் தேவைப்படுகிறது....//

உண்மையான வார்த்தைகள்! அப்படியே ஓஷோவை நினைவு படுத்துகிறது உங்க வார்த்தை தேவா!


நண்பா! நீங்க நம்ப பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சுதே! எப்போ வர்றீங்க?

http://uravukaaran.blogspot.com/

புது பதிவுகளை போட்டிருக்கேன். வந்து பாருங்க!
sakthi said…
கலைந்து செல்லும் மேகங்களில்
மறைந்து நின்று கண் சிமிட்டுவது...
நீயென்று கணித்து முடித்த கணங்களில்
கை கொட்டி சிரித்தது .... நட்சத்திரம்...!


தேவா நல்ல வரிகள்
கோர்த்திருக்கும் விதம் அருமை
Unknown said…
Fantastic flow....
பத்மா said…
நிலவினால் உண்டாகும் மனக்கிளர்ச்சி எத்தனை யுகமானாலும் மாறாது .... நிலவு ஒரு catalyst ....
jey இளமை திரும்புகிறது தேவாவுக்கு....:)

jey@@@ பொய் சொன்னாலும் அளவோடு சொல்லணும்
அருமை பதிவு...
..... அனுபவம் பேசுதோ? ரைட்...!
Unknown said…
ரொம்ப நல்லாயிருக்குங்க..
உணர்வுகளச் சொல்றதுல உங்கள மிஞ்ச முடியுமா?
// காதல் வயப்படும் கணங்களில் எல்லாமே அர்த்தம் பொதிந்ததாயும் ஒரு வித குழந்தையை ஒத்த மனோ நிலையும் ஏற்படுவதுதான் அழகு.//
ஐயோ அத ஏன்னா கேக்குறீங்க .. அது ரொம்ப ரவுசு பண்ணுது .. ஆனா நல்லாத்தான் இருக்கு ..
Anonymous said…
ரொம்ப நாளாக உங்க பதிவை படித்துக் கொண்டு
இருக்கிறேன், இது வரை கருத்துரை இட்ட்து இல்லை...வாழ்த்த வயதில்லை...வணங்குகிறேன்....
//காதலில் தகிக்கும் எல்லோரும் 240 வால்ட் மின்சாரத்தை உடம்பில் ஏற்றுக் கொண்டிருப்பவர்கள்தான்.//


லைவ்வா இல்ல நெகட்டிவ் மட்டுமா...ஹி..ஹி..
vinthaimanithan said…
காதலிச்சா இப்படியெல்லாம் நடக்கும்தான்...!
விஜய் said…
எப்படி அண்ணா இப்படி எல்லாம் எழுதுறீங்க ...போங்க...நிறையா கத்துக்கணும் உங்ககிட்ட..
சின்னதா ஒரு விசயத்த எடுத்துகிட்டு எப்படி எல்லாம் எழுதுறீங்க ...

//கிறக்கத்தில் கண்மூடினால்...
நீ வருவதும்....கண் திறந்தால்
நீ மறைவதும் என்ற கண்ணாமூச்சியில்
வழிந்தோடிக் கொண்டிருந்த இரவில்
பரவிக்கிடந்த கருமையை
விரிந்து கிடக்கும் உன் கூந்தலென்று
நினைத்து முடித்த மாத்திரத்தில்
பரிகாசமாய் விடிந்தே போனது பொழுது....!//

ஐயோ என்ன வரிகள்....அண்ணா பின்னீட்டீங்க..சிலவற்றை கத்தி பாராட்டியே தீரனும், அந்த மாதிரி அருமையான பதிவு
//கிறக்கத்தில் கண்மூடினால்...
நீ வருவதும்....கண் திறந்தால்
நீ மறைவதும் என்ற கண்ணாமூச்சியில்
வழிந்தோடிக் கொண்டிருந்த இரவில்
பரவிக்கிடந்த கருமையை
விரிந்து கிடக்கும் உன் கூந்தலென்று
நினைத்து முடித்த மாத்திரத்தில்
பரிகாசமாய் விடிந்தே போனது பொழுது....!//

இந்த காதல் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுலன்னா காலைப் பொழுது பிரகாசமாய் விடிந்திருக்கும். உண்மைதான் காதல் அகத்தில் பிரகாசம், புறத்தில் பரிகாசம்.

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...