சுருண்டு கொண்ட புலன்களில்
மடிந்து போன புற இயக்கத்தின்
எச்சதில் மீந்திருக்கும்....
அடர்த்தியான மெளனத்தில்
புலன்கள் தீட்டிய ஓவியங்களின்
வர்ணங்கள் காற்றில் மிதக்கும்
கனவுகளாய் வழிந்தோட
சுவாசத்தின் துணையோடு
ஆக்சிஜன் சேமிக்கும்...
மூளைகளுக்குள் எப்போதாவது...
நான் இருப்பேன்...
நிறைவேறாத ஆசைகளுடன்...
இமை கவிழும் நேரத்தில்
கருமையாய் எனைச் சூழும்
மெய்மையை பொய்மை என்று
கட்டியங்கூறும் விடியலில்
புறம் பாயும் புலன்களின்
கூட எழும் அகங்காரங்களில்
எப்போதும் மறந்து போகிறது
சவமாய் நான் கிடந்த....
முந்தைய இராத்திரி.....!
ஒவ்வொரு இரவின் உறக்கத்தையும் தப்பாமல் மறந்து விடுகிறோம். உறக்கத்தின் விளிம்புகளின் நின்று கொண்டு என்றாவது என்ன நிகழ்கிறது உறக்கத்தில் என்று பார்த்திருப்போமா? அப்படி பார்க்கும் தருணத்தில் தெரியும் வெளிச்சம் என்பது பொய்.... கருமையான இருள் எனது மெய்யென்று.
மாற்றி மாற்றிப் பழக்கம் கொண்டதாலேயே...... எதார்த்தமான உண்மைகளை எப்போதும் ஒதுக்கியே வைத்து வேண்டுமென்று மறக்கிறோம். உறக்கம்...என்பது ஓய்வு மட்டுமல்ல... நிலையான ஒன்றை உணரவைக்க தினம் எடுக்கும் ஒரு பயிற்சி...!
தேவா. S
பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...
Comments
//
True Lines
உண்மையில் இல்லைதான்....அருமையான வரிகள்..
நான் பாத்திருக்கேனே! ஆனா ஒண்ணு... அப்டியே தூங்கிடுவேன்
அண்ணிகிட்ட எதுக்கு சொல்லிகிட்டு... நாமளே தீத்துக்குவோம்....மேலிடத்துக்கு பிரச்சினை போச்சுனா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
வர்ணங்கள்,
காற்றில் மிதக்கும்
கனவுகளாய் ..வழிந்தோட
கலர் கனவுகள் ..
உறக்கம் போலும் சாக்காடு ...
ஆம் அது ஒன்று தான் நிலையானது
எதற்க்கு பார்க்க வேண்டும். உறக்கம் என்பது எதற்கு அண்ணா
ஆனால் கனவு காணும் சயத்தில் அது தான் சத்தியம் என்றும் உண்மை என்றும் நினைத்து கொண்டிருக்கின்றோம். இதனை புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்தினால் அவன் தான் ஞானி!
============
Mohamed Faaique said... @ தம்பி பேய் சுத்துற ஏரியால தான் வாழுறோம்....ரொம்ப பயந்த மாதிரி இருக்கு...திங்க் பண்றேன்...வேற தளத்தில் எழுத....ஹா..ஹா..ஹா..!
=================
செளந்தர்...@ உறக்கம் என்பது தூங்க....விழிப்பு என்பது வாழ....அப்படின்னுதானே நினைக்கிற...இல்லை...உறக்கம் என்பது வாழ...விழிப்பு என்பது தூங்க....குழப்புறேனா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
==============
தமிழ் உதயம் @ உண்மைதான் நண்பரே....இன்று காலையில் எழுந்தவுடன்... உறக்கத்தில் மறந்தது எதை என்ற ஆராய முற்பட்ட கணத்தில் எழுத தூண்டப்பட்டது இந்த கவிதை...!
==================
#இமை கவிழும் நேரத்தில்
கருமையாய் எனைச் சூழும்
மெய்மையை பொய்மை என்று
கட்டியங்கூறும் விடியலில்
புறம் பாயும் புலன்களின்
கூட எழும் அகங்காரங்களில்
எப்போதும் மறந்து போகிறது
சவமாய் நான் கிடந்த....
முந்தைய இராத்திரி.....!#
நான் ரசித்த வரி keep it up totally good.
//மூளைகளுக்குள் எப்போதாவது...
நான் இருப்பேன்...
நிறைவேறாத ஆசைகளுடன்...
///
yaar aathu
இதுதான் வாழ்க்கையின் தத்துவம் - விழித்த பின்னர் தான் உறக்கம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். விழிக்க விலை எனில் அது உறக்கம் அல்ல.
நல்வாழ்த்துகள் தேவா
நட்புடன் சீனா
உறக்கத்தின் விளிம்புகளின் நின்று கொண்டு என்றாவது என்ன நிகழ்கிறது உறக்கத்தில் என்று பார்த்திருப்போமா?
//
இப்படி பார்த்தா வேற பேரு சொல்லுவாங்க தேவா :))....
நல்ல பதிவு.
இருந்தாலும் எனக்கும் விந்தைமனிதன் சொல்றதுதான் சரின்னு படுது
கொஞ்சம் அந்த subject விட்டு ரிலாக்ஸ் பண்ணிட்டு எழுத ஆரம்பிச்சிங்கன்னா இன்னும் வீரியமாக இருக்கும்னு தோனுது
வாழ்த்துக்கள்
நல்லாயிருக்குங்க..
எதுவும் தோன்றா மோனத்தில்
அலை பாயும் மனத்தை
அங்கேயே நிறுத்தி வைக்கும்
ஆத்ம தேடலில்.....
அமைதியாய் கரைந்து
அடங்கிப் போகின்றேன்....
ஆர்ப்பாட்டங்கள் ஏதும் அற்று..!!!
....தேவா.. உங்கள் உறக்கம் கவிதைக்கு... பதில் இப்படி சொல்ல ஆசை.. :-)