Skip to main content

இரவு...!


















சுருண்டு கொண்ட புலன்களில்
மடிந்து போன புற இயக்கத்தின்
எச்சதில் மீந்திருக்கும்....
அடர்த்தியான மெளனத்தில்
புலன்கள் தீட்டிய ஓவியங்களின்
வர்ணங்கள் காற்றில் மிதக்கும்
கனவுகளாய் வழிந்தோட
சுவாசத்தின் துணையோடு
ஆக்சிஜன் சேமிக்கும்...
மூளைகளுக்குள் எப்போதாவது...
நான் இருப்பேன்...
நிறைவேறாத ஆசைகளுடன்...

இமை கவிழும் நேரத்தில்
கருமையாய் எனைச் சூழும்
மெய்மையை பொய்மை என்று
கட்டியங்கூறும் விடியலில்
புறம் பாயும் புலன்களின்
கூட எழும் அகங்காரங்களில்
எப்போதும் மறந்து போகிறது
சவமாய் நான் கிடந்த....
முந்தைய இராத்திரி.....!


ஒவ்வொரு இரவின் உறக்கத்தையும் தப்பாமல் மறந்து விடுகிறோம். உறக்கத்தின் விளிம்புகளின் நின்று கொண்டு என்றாவது என்ன நிகழ்கிறது உறக்கத்தில் என்று பார்த்திருப்போமா? அப்படி பார்க்கும் தருணத்தில் தெரியும் வெளிச்சம் என்பது பொய்.... கருமையான இருள் எனது மெய்யென்று.

மாற்றி மாற்றிப் பழக்கம் கொண்டதாலேயே...... எதார்த்தமான உண்மைகளை எப்போதும் ஒதுக்கியே வைத்து வேண்டுமென்று மறக்கிறோம். உறக்கம்...என்பது ஓய்வு மட்டுமல்ல... நிலையான ஒன்றை உணரவைக்க தினம் எடுக்கும் ஒரு பயிற்சி...!


தேவா. S

Comments

உறக்கம்...என்பது ஓய்வு மட்டுமல்ல... நிலையான ஒன்றை உணரவைக்க தினம் எடுக்கும் ஒரு பயிற்சி...!

//

True Lines
vinthaimanithan said…
அநியாயத்துக்கு சாமியார் கணக்கா போய்கிட்டே இருக்கீங்க. வீட்டுக்கு போனவொடனே அண்ணிகிட்ட ஃபோன் பண்ணி கொடுங்க... நான் பேசினாத் தான் சரிப்படும்.
கணேஷ் said…
உறக்கத்தின் விளிம்புகளின் நின்று கொண்டு என்றாவது என்ன நிகழ்கிறது உறக்கத்தில் என்று பார்த்திருப்போமா?\\\\

உண்மையில் இல்லைதான்....அருமையான வரிகள்..
vinthaimanithan said…
//உறக்கத்தின் விளிம்புகளின் நின்று கொண்டு என்றாவது என்ன நிகழ்கிறது உறக்கத்தில் என்று பார்த்திருப்போமா?//

நான் பாத்திருக்கேனே! ஆனா ஒண்ணு... அப்டியே தூங்கிடுவேன்
dheva said…
விந்தை மனிதன்..@ தம்மி..ஹா...ஹா...ஹா...


அண்ணிகிட்ட எதுக்கு சொல்லிகிட்டு... நாமளே தீத்துக்குவோம்....மேலிடத்துக்கு பிரச்சினை போச்சுனா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
பத்மா said…
புலன்கள் தீட்டிய ஓவியங்களின்
வர்ணங்கள்,
காற்றில் மிதக்கும்
கனவுகளாய் ..வழிந்தோட

கலர் கனவுகள் ..

உறக்கம் போலும் சாக்காடு ...
ஆம் அது ஒன்று தான் நிலையானது
Mohamed Faaique said…
எப்பொழுதும் தனிமை, உறக்கம், கனவு, இரவு என பேய் சுத்துற எரியாலையே சுத்துறீங்க... எனக்கும் விந்தை மனிதன் சொன்னதுதான் சரியாப்ப் படுது...
உறக்கத்தின் விளிம்புகளின் நின்று கொண்டு என்றாவது என்ன நிகழ்கிறது உறக்கத்தில் என்று பார்த்திருப்போமா?///

எதற்க்கு பார்க்க வேண்டும். உறக்கம் என்பது எதற்கு அண்ணா
Ramesh said…
Arumaiyaga yeludhi irukkireergal. Valthukkal
வீட்டில் சரியா தூங்க வில்லை என்றால் இப்படி தான்
சாவுக்கு ஒத்திகை தான் இந்த உறக்கம். எல்லாமும் மாயை என்று கனவை கண்டு எழுந்தவுடனே தெரிந்து விடுகிறது.

ஆனால் கனவு காணும் சயத்தில் அது தான் சத்தியம் என்றும் உண்மை என்றும் நினைத்து கொண்டிருக்கின்றோம். இதனை புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்தினால் அவன் தான் ஞானி!
உறக்கம் என்பது என்ன. அதை நாம் கவனிக்க முற்பட்டமா என்கிற ரீதியில் மலர்ந்த கவிதை. எனக்கு பிடித்திருக்கிறது.
dheva said…
பத்மா...@ ஆம்...சாக்காடு போன்றது உறக்கம்....உறக்கம் போன்றது சாக்காடு....

============

Mohamed Faaique said... @ தம்பி பேய் சுத்துற ஏரியால தான் வாழுறோம்....ரொம்ப பயந்த மாதிரி இருக்கு...திங்க் பண்றேன்...வேற தளத்தில் எழுத....ஹா..ஹா..ஹா..!

=================
செளந்தர்...@ உறக்கம் என்பது தூங்க....விழிப்பு என்பது வாழ....அப்படின்னுதானே நினைக்கிற...இல்லை...உறக்கம் என்பது வாழ...விழிப்பு என்பது தூங்க....குழப்புறேனா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

==============

தமிழ் உதயம் @ உண்மைதான் நண்பரே....இன்று காலையில் எழுந்தவுடன்... உறக்கத்தில் மறந்தது எதை என்ற ஆராய முற்பட்ட கணத்தில் எழுத தூண்டப்பட்டது இந்த கவிதை...!

==================
Unknown said…
வார்த்தைகள் கையாளபப்பட்டிருக்கும் முறை அருமை. இருந்தும் எனக்கு ஒரு சின்னக் குறை அதாவது முதல் இரண்டு பந்திகளிலும் கொடுக்கப்பட்டிருக்கும் வசன நடை சற்று கடினமானதாய்த் தோன்றுகின்றது.


#இமை கவிழும் நேரத்தில்
கருமையாய் எனைச் சூழும்
மெய்மையை பொய்மை என்று
கட்டியங்கூறும் விடியலில்
புறம் பாயும் புலன்களின்
கூட எழும் அகங்காரங்களில்
எப்போதும் மறந்து போகிறது
சவமாய் நான் கிடந்த....
முந்தைய இராத்திரி.....!#
நான் ரசித்த வரி keep it up totally good.
vaarthaigalil vilayaadi irukkireergal dhevaa
//மூளைகளுக்குள் எப்போதாவது...
நான் இருப்பேன்...
நிறைவேறாத ஆசைகளுடன்...
///
yaar aathu
அன்பின் தேவா

இதுதான் வாழ்க்கையின் தத்துவம் - விழித்த பின்னர் தான் உறக்கம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். விழிக்க விலை எனில் அது உறக்கம் அல்ல.

நல்வாழ்த்துகள் தேவா
நட்புடன் சீனா
உறக்கம்...என்பது ஓய்வு மட்டுமல்ல... நிலையான ஒன்றை உணரவைக்க தினம் எடுக்கும் ஒரு பயிற்சி...!
க ரா said…
அண்ணே நிரம்ப கஷ்டம்ணே.. முடில...
a said…
//
உறக்கத்தின் விளிம்புகளின் நின்று கொண்டு என்றாவது என்ன நிகழ்கிறது உறக்கத்தில் என்று பார்த்திருப்போமா?
//
இப்படி பார்த்தா வேற பேரு சொல்லுவாங்க தேவா :))....
ஆம் இதுதான் வாழ்க்கையின் நிதர்சனம்.
நல்ல பதிவு.
VELU.G said…
பதிவு அருமையா இருக்கு தேவா

இருந்தாலும் எனக்கும் விந்தைமனிதன் சொல்றதுதான் சரின்னு படுது

கொஞ்சம் அந்த subject விட்டு ரிலாக்ஸ் பண்ணிட்டு எழுத ஆரம்பிச்சிங்கன்னா இன்னும் வீரியமாக இருக்கும்னு தோனுது

வாழ்த்துக்கள்
Unknown said…
அருமையான பதிவு..

நல்லாயிருக்குங்க..
Mahi_Granny said…
அநியாயத்துக்கு சாமியார் கணக்கா போய்கிட்டே இருக்கீங்க; இது தான் நான் சொல்ல வந்ததும் .
இருளான நேரத்தில்
எதுவும் தோன்றா மோனத்தில்
அலை பாயும் மனத்தை
அங்கேயே நிறுத்தி வைக்கும்
ஆத்ம தேடலில்.....
அமைதியாய் கரைந்து
அடங்கிப் போகின்றேன்....
ஆர்ப்பாட்டங்கள் ஏதும் அற்று..!!!

....தேவா.. உங்கள் உறக்கம் கவிதைக்கு... பதில் இப்படி சொல்ல ஆசை.. :-)

Popular posts from this blog

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

முரட்டுக் காளை....!

தலைவரை பத்தி எழுத சொல்லிட்டு தம்பி அருண் பாட்டுக்கு போய்ட்டான்....! நாம ஏற்கனவே ரஜினினு சொன்னாலே பத்திகிட்டு எரிவோம்....இதுல பெட்ரோல வேற ஊத்துன எப்டி? ....சும்மா பத்திகிட்டு எரியும்ல..எரிமலை மாதிரி..ஹா...ஹா..ஹா...! தலிவர் படத்த லிஸ்ட் எல்லாம் பண்ண முடியாது.. என்ன பொறுத்த வரைக்கும்....எல்லாமே... நம்பர் 1 தான்...!!! இது எப்டி இருக்கு....ஸ்ட்ரெய்ட்டா மேட்ருக்குள்ள போவமா....இப்டிச் சூடு..... முரட்டுக்காளை (1980) படம் போட்ட கொஞ்ச நேரத்துல நான் பயந்தே போய்ட்டேன்....! ஒரு காளை மாடு முரட்டுத்தனமா நிக்கும் போது.. அத அடக்க சிங்கம் மாதிரி நம்ம சூப்பர் ஸ்டார்.....! என்னோட கவலை எல்லாம் தலிவருக்கு ஒண்ணும் ஆகக்கூடாதுன்னுதான்....அது எப்டி ஆகும் தலைவர் சும்மா பிரிச்சு மேஞ்சு காளைய அடக்குற வரைக்கும் பக்கத்து சீட்ல இருந்த ஆள டேமேஜ் ஆக்கிட்டேன்...ஜு ஜு பி....!எப்பவுமே தலிவர் படம்னா...அப்டிதான்...இஹ் ஹா...ஹா ஹா..! அதுக்கு அப்புறம் வர்ற பாட்டு...நான் சொல்ல தேவயில்ல..உங்க ஹிட் இல்ல எங்க ஹிட் இல்ல.. உலக ஹிட்.... தமிழ் சினிமாவுக்கே பஞ்சர் பாத்த படம்.... ! எங்க ஊர்..(எந்த ஊர்னு கேட்டா ரூட்டு மாறிடும்...ட்ராக்க ...