
யாரோ கல்லெறிந்திருக்கிறார்கள்
இந்த முறையும்...தப்பாமல்
நடனமாடுகிறது குளம்....
தடுமாறி நிற்கிறேன் நான்!
***
நிசப்தமான நடு நிசி
குளிரில் நடுங்கிக் கொண்டே
நடக்கிறேன்....சூடான
உன் நினைவுகளோடு....!
***
ஒரு மழை
ஒரு சாரல்
ஒரு காதல்
ஒரு கவிதை
நீ.....!
***
பேருந்துப் பயணம்
ஜன்னலோர இருக்கை
வழி நெடுக வாழ்க்கை
பார்வையாளனாய் நான்....!
***
ஒரு சிட்டுக் குருவி
ஈரச் சிறகு..
படபடக்கும் உலர்த்தல்
சிறகடிக்கும் மனசு...!
***
காற்றில் பறக்கும்
சருகுகள்....
கலைந்து திரியும்
மனிதர்கள்.....
நிற்கப் போகும் காற்று!
***
கனவுகள் மொய்க்கின்றன
நீ சிந்திச் சென்ற
புன்னைகையின் மிச்சங்கள்
இன்னும் இறைந்து கிடக்கின்றன
மூளைக்குள்...!
***
தேவா. S
Comments
By சே.குமார் on சிதறல்...! on 11/16/10
==========================================
அழகான கவிதைகள் மாப்ஸ்...
By TERROR-PANDIYAN(VAS) on சிதறல்...! on 11/15/10
==========================================
//நிசப்தமான நடு நிசி குளிரில் நடுங்கிக் கொண்டே நடக்கிறேன்.... சூடான உன் நினைவுகளோடு....!// ஓஹோ
By அன்பரசன் on சிதறல்...! on 11/15/10
=============================================
அருமைண்ணா ஒவ்வொன்னும்.. புது டெம்ப்ளெட் மின்னுது :)
By இராமசாமி கண்ணண் on சிதறல்...! on 11/15/10
==============================================
பேருந்துப் பயணம் ஜன்னலோர இருக்கை வழி நெடுக வாழ்க்கை பார்வையாளனாய் நான்....! truth
By Anonymous on சிதறல்...! on 11/15/10
ஊ புல்லா வம்பிழுத்தா கல்லால அடிக்காம என்ன பண்ணுவாங்க?
//இந்த முறையும்...தப்பாமல்//
செம அடியா?
தடுமாறி நிற்கிறேன் நான்!//
ஜோடி no 1 ல சேத்துடுவமா? இல்லை மானாட மயிலாட?
குளிரில் நடுங்கிக் கொண்டே
நடக்கிறேன்....சூடான
உன் நினைவுகளோடு....!///
நா வேணா ஒரு சஜஷன் சொல்லவா..? அப்படியே சூடா ஒரு கப் காபி-யும் குடிங்க.. :D :D
சருகுகள்....
கலைந்து திரியும்
மனிதர்கள்.....
நிற்கப் போகும் காற்று!//
அருமையான ஒப்பீட்டு உவமை மாப்ள...
//நிற்கப் போகும் காற்று!//
இந்த வரியை நான் ரொம்பவே ரசிச்சேன்...
ஒவ்வொன்றும் முத்துச் சிதறல்கள்!!
மிக நன்று..
இது எவ்வளோ அழகா ரசிக்க முடியுது... இதவிட்டுட்டு தேடல், புரிதல்னு குழப்ப கவிதை எழுதிட்டு...
எல்லாமே கலக்கல் அண்ணே
குளிரில் நடுங்கிக் கொண்டே
நடக்கிறேன்....சூடான
உன் நினைவுகளோடு....!
கிளாஸ் தேவ்
And i shared this page in facebook....
ஒரு சாரல்
ஒரு காதல்
ஒரு கவிதை
நீ.....!
சிதறலாய் எங்கள் மனசு..
ரசனையான கவிதை.. ரசனையான பின்னூட்டங்கள்..(ரமேஷ் ரொம்ப நல்லவன் - நான் என்னைச் சொல்லலை)
நீ சிந்திச் சென்ற
புன்னைகையின் மிச்சங்கள்
இன்னும் இறைந்து கிடக்கின்றன
மூளைக்குள்...!////
இந்தக் கவிதை டாப்..
வாழ்த்துக்கள்
இந்த முறையும்//
எத்தனை முறை எறிந்தாலும்... ம்ம்ம்..கூடுதல் அர்த்தம்..அருமை!
***
//நடு நிசி
குளிரில் நடுங்கிக் கொண்டே
நடக்கிறேன்....சூடான
உன் நினைவுகளோடு....!//
மௌனமான இரவில் பேசும் நினைவுகள்..அழகு. அனுபவம்.
***
//ஒரு மழை
ஒரு சாரல்
ஒரு காதல்
ஒரு கவிதை
நீ.....!//
மிகவும் கவர்ந்த கவிதை...ஆறே வார்த்தைகளில் அற்புதம். “நீ”க்கு நிகர் யாருமில்லை.. இப்போது.
***
//ஜன்னலோர இருக்கை
வழி நெடுக வாழ்க்கை//
எதார்த்தம்.. ஒத்த உணர்வுகள் ;-)
***
//படபடக்கும் உலர்த்தல்
சிறகடிக்கும் மனசு...!//
சிறகடிக்குது மனசு.. கவிதையை ரசித்து.
***
//கலைந்து திரியும்
மனிதர்கள்.....
நிற்கப் போகும் காற்று!//
நிதர்சனம்.
***
//கனவுகள் மொய்க்கின்றன
நீ சிந்திச் சென்ற
புன்னைகையின் மிச்சங்கள்
இன்னும் இறைந்து கிடக்கின்றன
மூளைக்குள்...!//
வாவ்...கற்பனை அழகு. :-)