Skip to main content

மரபு.....!














ட்ரெய்லர் II


சுற்றிப் பரவியிருந்த மண்ணின் தாதுக்களுக்குள் நான் கலந்து ஒளிந்திருந்தேன், செடி கொடிகளுக்குள் சத்துப்பொருளாய் மாறி விரவியிருந்தேன், காய், கனிகளுக்குள் தைரியமாய் அடர்ந்து போயிருந்தேன்...வீசும் காற்றில் பிராணனில் பரவிப்போயிருந்தேன்..ஹைட்ரஜனுக்குள் கலந்து போயிருந்தேன்....ஓடும் நீரில் நனைந்து போயிருந்தேன்......

எம்மை சுவாசித்தவரின் நாசிகளுக்குள் பிராணணாயும், உண்டவரின் உடலுக்குள் சக்திப்பொருளாகவும், கண்டவரின் புத்தியில் நினைவுப் படிமமாகவும் படிந்து போயிருந்தேன். உடலுக்குள் எல்லாமாகி சக்தியாய் விரவி......இரத்தத்தில் கலந்து....உடலின் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஓட்டமாயிருந்தேன்....மேலும் ஒரு ஒரத்தில் இருந்த விந்துப் பையில் ஜீவசத்தாய் கலந்து போயிருந்தேன்...வேறொரு உடலின் கருப்பை உள்ளே சினைமுட்டைகளாய் அடர்ந்து போயிருந்தேன்.....

ஒரு இயற்கை சுழற்சியில் இரண்டும் ஒன்றாய் கலந்த கணத்தில் ஒரு திரண்ட உருவாய் வளர்ந்து போயிருந்தேன்...நீரும் காற்றும் எனைச் சுற்றி நிறைந்து போயிருந்தேன்....ஏதோ தினத்தில் ஒரு உருவாய் இந்த பூமியில் விழுந்து போயிருந்தேன்......

எந்த மண்ணில் இருந்து என் பிண்டத்துக்கான சத்து உருவப்பட்டதோ.....? எந்த பூமியில் இருந்து எனக்கான காற்று சுவாசிக்கப்பட்டதோ....? எந்த சூழ்நிலையில் அல்லது மனோ நிலையில் கருவாய் நான் ஜனிக்கப்பட்டேனோ அது எனக்குள் ஒரு வித குணாமாய் நிறைந்து போயிருந்தேன். எந்த உடல்களின் ஜீவசத்தாய் நான் வெளிப்பட்டு இருந்தேனோ...அந்த உடலில் இருந்த குணம் குரோமோசோம்களாய் என்னுள் பரவிக் கிடந்தது.....! டி.என்.ஏ க்களில் எல்லாம்...எந்த இடத்திலிருந்து எந்த மூலத்திலிருந்து தருவிக்கப்பட்டதோ அதன் மொத்த தொடர்ச்சியின் வேர்கள் மறைந்து ஒளிந்து போயிருந்தன....!

என் குணாதியங்களின் பின்ணனியில் காற்றும், நீரும், காய்களும் கனிகளும் இன்ன பிற தாதுக்களும், உப்புக்களும், உணவுப் பொருட்களும் மறைமுகமாய் விஸ்வரூபம் எடுத்துக் கிடந்தன. உடல் ஜனிக்க காரணாமாயிருந்த ஜீவன்கள் எல்லாம் என் புத்தியில் நிறைந்து போயிருந்தனர்.

ஆமாம்.....எல்லா உயிர்களின் குணாதிசயங்களின் பின்ணணியில் நாம் துச்சமென நினைக்கும் பல்வேறு விசயங்கள் இருக்கின்றன. அதுவும் ஒவ்வொரு மண்ணின் இயல்பும் ஒவ்வொரு மாதிரி...அந்த இயல்புக்கேற்ப உடலும் மனமும் சேர்ந்தே பிசையப்படுகின்றன. மலைகளில் வாழும் மனிதர்களுக்கு ஒரு இயல்பும், சமவெளியில் வாழ்பவர்களுக்கு ஒரு இயல்பும், பாலையில் வாழ்பவர்களுக்கு ஒரு இயல்பும்,,, நீர் நிலைகள் நிறைந்த பகுதியில் வாழ்பவர்களுக்கு ஒரு இயல்பும், காடுகளில் சுற்றித் திரிபவர்களுக்கு ஒரு இயல்பும், குளிர் பிரதேசங்கங்களில் இருப்பவர்களுக்கு ஒரு இயல்பும் ...என்று....மனிதர்கள் மாறி மாறி குணங்களுடன் இருந்தார்கள்....

குணாதிசயத்தையும், வாழும் போது மனோ நிலையையும் நிர்ணயிக்கும் மிகப் பெரிய காரணியாய் நீரும் காற்றும் இருந்தன......!

மனிதர்களின் குணம் மற்றும் பெற்று வந்த மரபணுக்கள் எல்லாம் சேர்ந்து ஒவ்வொரு முறையான வாழ்க்கை முறைகள் ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ப தீர்மானிக்கப்ட்டது. அது அந்த அந்தப் பகுதிகளின் செளகரியத்தை முன்னிலைப்படுத்தி தீர்மானிக்கப்பட்டது......கரடு முரடான வாழ்க்கையில் ....மனம் என்ற விசயம் ஈடுபட விதிமுறைகளை உருவாக்க மனிதனின் ஆழ்மனம் ....மிகவும் உதவியது......

மனித ஆழ்மனம் எதோடு தொடர்புடையது என்று உங்களுக்கே தெரியும் அல்லவா.....?

அச்சச்சோ.....ரொம்ப பேசிட்டேங்க....எனக்கு நேரமும் ஆயிடுச்சு....ஒரு மிகப்பெரிய உண்மையை கொஞ்சமா சொல்லணும்னு நினைச்சேன்....ஆனா அது முடியாது போல இருக்கு....! வாழ்க்கைல எப்பவுமே...இருக்குற சுவாரஸ்யமும் த்ரில்லும்தான் இந்த நிமிசம் வரைக்கும் எல்லாத்தையும் இழுத்துப் பிடிச்சு நிறுத்தி வைச்சு இருக்கு இல்லீங்களா....! சுவாரஸ்யமாவே பார்ப்போம் வாழ்க்கையை.....

இப்போதைக்கு கிளம்புறேன்....மிச்சத்த...பாக்குறப்போ பாக்கலாம்.....!


அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்டா.........!



தேவா. S

Comments

தேவா,

/குணாதிசயத்தையும், வாழும் போது மனோ நிலையையும் நிர்ணயிக்கும் மிகப் பெரிய காரணியாய் நீரும் காற்றும் இருந்தன......!//

உண்மை.

தொடர்நுங்கள். இந்த போஸ்ட் சின்னதா இருக்கற மாதிரி ஒரு பீலிங்
//சுற்றிப் பரவியிருந்த மண்ணின் தாதுக்களுக்குள் நான் கலந்து ஒளிந்திருந்தேன்//

இன்னும் கடனை அடைக்கிலியா. எவ்ளோ நாள்தான் இப்படி ஓடி ஒளிவீங்க?
//செடி கொடிகளுக்குள் சத்துப்பொருளாய் மாறி விரவியிருந்தேன், காய், கனிகளுக்குள் தைரியமாய் அடர்ந்து போயிருந்தேன்...வீசும் காற்றில் பிராணனில் பரவிப்போயிருந்தேன்..ஹைட்ரஜனுக்குள் கலந்து போயிருந்தேன்....ஓடும் நீரில் நனைந்து போயிருந்தேன்......//

கடன்காரங்களுக்கு பயந்து வீட்டை தவிர எல்லா இடத்துலையும் இருந்திருக்கீங்க
இப்போதைக்கு கிளம்புறேன்....மிச்சத்த...பாக்குறப்போ பாக்கலாம்.....!


அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்டா.........!
புறச்சூழ்நிலைகள் தான் நம் வாழ்க்கையையும், குணாதியங்களையும் தீர்மாணிக்கின்ற மிகப் பெரிய பொறுப்ப ஏத்துக்கிட்டிருக்குங்க. அப்போ அகத்துல இருக்கக்கூடிய ஒன்னு புறப்பொருள்களைக் கண்ட்ரோல் பண்ணி உங்க குணத்தை மாத்த முடியுமா?
dheva said…
தம்பி.. ஜீவன் பென்னி...@

சித்தத்தில் தெளிவிருந்தால் சீவன் முக்தி எய்துமப்பா....

தெளிவு நிறைந்த சித்தம்..எல்லாம் கட்டுப்பட வைக்குமப்பா....!!!!!!
இயற்கை மனிதனின் நிர்ணயிப்பதில் பெரும் காரணியாய் விளங்கியது என்பது கற்காலம் முதல் இக்காலம் வரை உண்மைதான். ஆனால் அவை ஒரு எல்லை வரைதான்!
Anonymous said…
//மனித ஆழ்மனம் எதோடு தொடர்புடையது என்று உங்களுக்கே தெரியும் அல்லவா.....? //
எனக்கு தெரியாது.. அதையும் நீங்களே சொல்லிடுங்க அண்ணே..
//எந்த மண்ணில் இருந்து என் பிண்டத்துக்கான சத்து உருவப்பட்டதோ.....? எந்த பூமியில் இருந்து எனக்கான காற்று சுவாசிக்கப்பட்டதோ....? எந்த சூழ்நிலையில் அல்லது மனோ நிலையில் கருவாய் நான் ஜனிக்கப்பட்டேனோ அது எனக்குள் ஒரு வித குணாமாய் நிறைந்து போயிருந்தேன். எந்த உடல்களின் ஜீவசத்தாய் நான் வெளிப்பட்டு இருந்தேனோ...அந்த உடலில் இருந்த குணம் குரோமோசோம்களாய் என்னுள் பரவிக் கிடந்தது.....! டி.என்.ஏ க்களில் எல்லாம்...எந்த இடத்திலிருந்து எந்த மூலத்திலிருந்து தருவிக்கப்பட்டதோ அதன் மொத்த தொடர்ச்சியின் வேர்கள் மறைந்து ஒளிந்து போயிருந்தன....!//

இந்த பத்தியே போதும் அண்ணா ., மனித வாழ்வின் நிலையாமை பற்றி விளக்குவதற்கு அல்லது மனித வாழ்வின் உண்மையை சொவதற்கு ..!!
.//.இதை அடித்து நொறுக்கி துவம்சம் செய்ய.... உங்களுக்கு முழு உரிமை இருக்கு.....அதில் உண்மையிருந்தா பின்பற்ற எனக்கு மனமும் இருக்கு.....//

அண்ணன் சண்டைக்கு கூப்பிடுவாரு போல ., யாரவது வாங்களேன் ..!!
@தேவா

கொஞ்ச நாள் இந்த புள்ள நால்ல எழுதுச்சி. ஊர் வம்புக்கு போகாத போகாத சொன்னேன். கேக்கல.. இப்பொ மறுபடியும் யருக்கும் புரியாம எழுத ஆரம்பிசிடுத்து... அவ்வ்வ்வ்..
dheva said…
பாலாஜி சரவணா....@ பிரபஞ்சத்தோடு தொடர்புடையது தம்பி.....!!!!!!!
dheva said…
டெரர்...@ மாப்பு...ஊர் வம்பா???? என்ன சொல்றா..ஒண்ணும் புரியலையே..ராஜா....!!! நீ என்ன சொல்றா......?????(சிவாஜி ஸ்டைல்)
nis said…
//ஒவ்வொரு மண்ணின் இயல்பும் ஒவ்வொரு மாதிரி...அந்த இயல்புக்கேற்ப உடலும் மனமும் சேர்ந்தே பிசையப்படுகின்றன.//

true anna.
ட்ரைலர்-I புரிந்தது,.. இது சிரமப்படுத்துகிறது... இன்ன்னும் சில முறை படிக்க வேண்டும் தேவா அண்ணா.
பாட்டு பட்டைய கெளப்புதே பங்க்ஸ்!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...