Skip to main content

நீ.....!















தெருவெல்லாம்
இறைந்து கிடக்கிறது
உன்னோடு சுற்றித் திரிந்த
ஞாபகங்களின் சுவடுகள்...!

காதலோடு கை சேர்த்து
சிரித்து எழுப்பிய...
ஒலிகளின் அதிர்வுகள்
கலைத்துப் போடுகின்றன
சம கால நினைவுகளை...!

காதலா? நட்பா..?
என்று தீர்மானிக்க முடியாமல்
மத்திமத்தில் கிளைத்த
உணர்வுகளின் தெளிவற்ற...
பிம்பங்களால் இதோ...
நிகழ்ந்தே விட்டது நம் பிரிவு...!

உன்னைப் பற்றிய...
நினைவுகளோடும் செரிக்க முடியா...
ஆசைகளோடும் இறுக்கத்தில்..
மூடிக் கிடக்கிறது தீர்மானித்தல்களில்...
தோற்றுப் போன மனது....!

ஒரு மழையின் ஸ்பரிசம் போல
தீண்டாமல் தீண்டிச் சென்ற
உன் இயல்புகளின் விருப்பங்கள்
ஒரு தென்றலைப் போல
வருடி மறைந்துதான் போனது...!

ஒரு கோப்பை தேநீரும்...
ஒரு மழை நேரத்து மாலையும்
என்னை சுற்றி பரவிக் கிடந்த
உன் நினைவுகளும்....
என்னிலிருந்து சிணுங்கலாய்
உதிரத் தொடங்கியிருந்த...
கவிதைகளும், சொல்லாமல்...
சொல்லிக் கொண்டிருந்தன...
உன் மீதான என் காதலை...!

என் பெயர் சொல்லி...
நீ அழைத்த தருணங்களும்...
என் முகம் பார்த்து நீ ....
மறைத்த வெட்கங்களும்....
காற்றிப் பறந்த உன் கூந்தலை..
ஒதுக்கிவிட்டு..நீ பார்த்த பார்வையும்...
குவித்துப் போட்டிருக்கின்றன்...
எனக்குள் ஏதேதோ உணர்வுகளை...!

படாமல் படும் பனியாய்
தொடாமலேயே நிறைந்திருக்கும்
உன் நினைவுகள் கொடுத்த...
வெளிச்சத்தில் துளிர்த்து நிற்கிறது
சொல்லாத காதலின் ஒரு தளிர்.....!!!

பிரிவோம் என்று தெரிந்தே...
பழகிய நாட்களின் ஓரங்களில்
ஒட்டியிருந்த காதலின்
படிமாணங்களை பகுத்தெடுத்து
வைத்திருக்கிறேன்..என் உள்ளங்கையில்
உன் நினைவுகளின் எச்சங்களோடு...!

உனை தேட எடுக்கும்
முயற்சிகளை மனதுக்குளேயே
மரித்துப் போகச் செய்து.....
இந்தக் கணம் வரை..
விளையாடிக் கொண்டிருக்கிறேன்....
நீ என் மீது வைத்திருந்த...
காதல் என்ற பெயருக்குள்
ஒளிந்திருக்கும் ஒரு நிஜக்காதலோடு....!

தேவா. S

Comments

சொல்லாத காதலின் வலி அருமை
Chitra said…
என் பெயர் சொல்லி...
நீ அழைத்த தருணங்களும்...
என் முகம் பார்த்து நீ ....
மறைத்த வெட்கங்களும்....
காற்றிப் பறந்த உன் கூந்தலை..
ஒதுக்கிவிட்டு..நீ பார்த்த பார்வையும்...
குவித்துப் போட்டிருக்கின்றன்...
எனக்குள் ஏதேதோ உணர்வுகளை...!


.... romantic!
Arun Prasath said…
//காதல் என்ற பெயருக்குள்
ஒளிந்திருக்கும் ஒரு நிஜக்காதலோடு....!//

அட!!! செம
//ஒரு கோப்பை தேநீரும்...
ஒரு மழை நேரத்து மாலையும்
என்னை சுற்றி பரவிக் கிடந்த
உன் நினைவுகளும்....
என்னிலிருந்து சிணுங்கலாய்
உதிரத் தொடங்கியிருந்த...
கவிதைகளும், சொல்லாமல்...//

இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா .., ஆனா என்ன செய்வது எனக்குத்தான் வடை போச்சே ..!!
@தேவா

கமெண்ட் போட முடியாது... எனக்கு பிடிச்ச லைன் சித்ரா மேடம் போட்டாங்க...கிர்ர்ர்ர்ர்
நானும் வந்துட்டேன்....
//என் பெயர் சொல்லி...
நீ அழைத்த தருணங்களும்...
என் முகம் பார்த்து நீ ....
மறைத்த வெட்கங்களும்....
காற்றிப் பறந்த உன் கூந்தலை..
ஒதுக்கிவிட்டு..நீ பார்த்த பார்வையும்...
குவித்துப் போட்டிருக்கின்றன்...
எனக்குள் ஏதேதோ உணர்வுகளை...!//

எனக்கும் இந்த வரிகளே மிக பிடித்திருக்கின்றன.
Repeattttttteeeeeeeee ANBARASAN..,

Nice Kavithai.
Anonymous said…
தயக்கங்களும் தவிப்புகளும் நிறைந்த காதலின் வடிவம் அழகு..
சூப்பர் அண்ணா
அழகான கவிதை!
வினோ said…
/ பிரிவோம் என்று தெரிந்தே...
பழகிய நாட்களின் ஓரங்களில்
ஒட்டியிருந்த காதலின்
படிமாணங்களை பகுத்தெடுத்து
வைத்திருக்கிறேன்..என் உள்ளங்கையில்
உன் நினைவுகளின் எச்சங்களோடு...! /

எனக்கும் இருக்கு இந்த உணர்வு அண்ணா...
dheva said…
வினோ...@ தம்பி...கேட்ச் பண்ணிக்கிட்டியா இந்த உணர்வா...சரி நாம இது பத்தி போன்ல பேசுவோம்...!!!!!!
NaSo said…
//இந்தக் கணம் வரை..
விளையாடிக் கொண்டிருக்கிறேன்....
நீ என் மீது வைத்திருந்த...
காதல் என்ற பெயருக்குள்
ஒளிந்திருக்கும் ஒரு நிஜக்காதலோடு....!//

நம்பிக்கையை உணர்த்தும் இந்த வரிகளை நான் ரொம்ப ரசித்தேன்!!
தெருவெல்லாம்
இறைந்து கிடக்கிறது
உன்னோடு சுற்றித் திரிந்த
ஞாபகங்களின் சுவடுகள்...!///

சரி சரி அது தான் காலசுவடுகள்

காதலோடு கை சேர்த்து
சிரித்து எழுப்பிய...
ஒலிகளின் அதிர்வுகள்
கலைத்துப் போடுகின்றன
சம கால நினைவுகளை...////

ஓஹ சரி சரி மீண்டும் அடுக்கி வையுங்கள்

காதலா? நட்பா..?
என்று தீர்மானிக்க முடியாமல்
மத்திமத்தில் கிளைத்த
உணர்வுகளின் தெளிவற்ற...
பிம்பங்களால் இதோ...
நிகழ்ந்தே விட்டது நம் பிரிவு...!///

ஓஹ பிரிந்து போயடாங்களா...

உன்னைப் பற்றிய...
நினைவுகளோடும் செரிக்க முடியா...
ஆசைகளோடும் இறுக்கத்தில்..
மூடிக் கிடக்கிறது தீர்மானித்தல்களில்...
தோற்றுப் போன மனது....!/////

அதுக்கு தான் நல்ல தீர்மானம் போடனும்

ஒரு மழையின் ஸ்பரிசம் போல
தீண்டாமல் தீண்டிச் சென்ற
உன் இயல்புகளின் விருப்பங்கள்
ஒரு தென்றலைப் போல
வருடி மறைந்துதான் போனது...!////

தீண்டமையே இப்படி இன்னும் தீண்டினால் அவ்ளவுதான்

ஒரு கோப்பை தேநீரும்...
ஒரு மழை நேரத்து மாலையும்
என்னை சுற்றி பரவிக் கிடந்த
உன் நினைவுகளும்....
என்னிலிருந்து சிணுங்கலாய்
உதிரத் தொடங்கியிருந்த...
கவிதைகளும், சொல்லாமல்...
சொல்லிக் கொண்டிருந்தன...
உன் மீதான என் காதலை...!////

நல்லா தெரிகிறது உங்கள் சிணுங்கள்


என் பெயர் சொல்லி...
நீ அழைத்த தருணங்களும்...
என் முகம் பார்த்து நீ ....
மறைத்த வெட்கங்களும்....
காற்றிப் பறந்த உன் கூந்தலை..
ஒதுக்கிவிட்டு..நீ பார்த்த பார்வையும்...
குவித்துப் போட்டிருக்கின்றன்...
எனக்குள் ஏதேதோ உணர்வுகளை...!////

என்ன என்ன எல்லாம் நோட் பண்ணி இருக்கார்

படாமல் படும் பனியாய்
தொடாமலேயே நிறைந்திருக்கும்
உன் நினைவுகள் கொடுத்த...
வெளிச்சத்தில் துளிர்த்து நிற்கிறது
சொல்லாத காதலின் ஒரு தளிர்.....!!!/////

இனி சூரியனே தேவை இல்லை


பிரிவோம் என்று தெரிந்தே...
பழகிய நாட்களின் ஓரங்களில்
ஒட்டியிருந்த காதலின்
படிமாணங்களை பகுத்தெடுத்து
வைத்திருக்கிறேன்..என் உள்ளங்கையில்
உன் நினைவுகளின் எச்சங்களோடு...!////

உள்ளங்ககை தாங்குதா...

உனை தேட எடுக்கும்
முயற்சிகளை மனதுக்குளேயே
மரித்துப் போகச் செய்து.....
இந்தக் கணம் வரை..
விளையாடிக் கொண்டிருக்கிறேன்....
நீ என் மீது வைத்திருந்த...
காதல் என்ற பெயருக்குள்
ஒளிந்திருக்கும் ஒரு நிஜக்காதலோடு....!//////

அப்போ தேடுறேன் தேடுறேன் சொன்னது இது தானா...?
Kousalya Raj said…
ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒவ்வொரு அர்த்தம் வருகிறது தேவா....! இப்பதான் புரிகிறது காதல் தான் அவஸ்தை என்று பார்த்தால் காதல் கவிதை படிப்பதும் பெரிய அவஸ்தைதான் போல....!!

படிக்க படிக்க சலிப்பதில்லை காதலும், கவிதையும்....!!

சில்லுனு ஒரு காதல்......சூப்பர்...
என்னன்னு சொல்ல... நான் வந்திட்டு ஞாபகம் இருக்கட்டும்..
//படாமல் படும் பனியாய்
தொடாமலேயே நிறைந்திருக்கும்
உன் நினைவுகள் கொடுத்த...
வெளிச்சத்தில் துளிர்த்து நிற்கிறது
சொல்லாத காதலின் ஒரு தளிர்.....!!!///



காதலியின் நினைவுகளை...
கதிரவனுக்கு ஒப்பிட்டு
அந்த நினைவில் துளிர்க்கும்
உங்கள் காதல் அருமை... :-))))

செமையா இருக்கு தேவா... :-))
ஹேமா said…
அனுபவித்துக்கொண்டிருக்கும் உணர்வு அப்படியே !
Ramesh said…
அருமையா எழுதியிருக்கீங்க தேவா..
Anonymous said…
ஒரு கோப்பை தேநீரும்...
ஒரு மழை நேரத்து மாலையும்
என்னை சுற்றி பரவிக் கிடந்த
உன் நினைவுகளும்....
என்னிலிருந்து சிணுங்கலாய்
உதிரத் தொடங்கியிருந்த...
கவிதைகளும், சொல்லாமல்...
சொல்லிக் கொண்டிருந்தன...
உன் மீதான என் காதலை...!// lovely poem.. can feel the touch of true love.. by: sriviji
Unknown said…
கருத்தாழமும் நல்ல காதலும்
பொருத்தமாய் வந்துள்ள கவிதை
அருமை
தொடர வாழ்த்துக்கள்

புலவர் சா இராமாநுசம்
புலவர் குரல்

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...