
தெருவெல்லாம்
இறைந்து கிடக்கிறது
உன்னோடு சுற்றித் திரிந்த
ஞாபகங்களின் சுவடுகள்...!
காதலோடு கை சேர்த்து
சிரித்து எழுப்பிய...
ஒலிகளின் அதிர்வுகள்
கலைத்துப் போடுகின்றன
சம கால நினைவுகளை...!
காதலா? நட்பா..?
என்று தீர்மானிக்க முடியாமல்
மத்திமத்தில் கிளைத்த
உணர்வுகளின் தெளிவற்ற...
பிம்பங்களால் இதோ...
நிகழ்ந்தே விட்டது நம் பிரிவு...!
உன்னைப் பற்றிய...
நினைவுகளோடும் செரிக்க முடியா...
ஆசைகளோடும் இறுக்கத்தில்..
மூடிக் கிடக்கிறது தீர்மானித்தல்களில்...
தோற்றுப் போன மனது....!
ஒரு மழையின் ஸ்பரிசம் போல
தீண்டாமல் தீண்டிச் சென்ற
உன் இயல்புகளின் விருப்பங்கள்
ஒரு தென்றலைப் போல
வருடி மறைந்துதான் போனது...!
ஒரு கோப்பை தேநீரும்...
ஒரு மழை நேரத்து மாலையும்
என்னை சுற்றி பரவிக் கிடந்த
உன் நினைவுகளும்....
என்னிலிருந்து சிணுங்கலாய்
உதிரத் தொடங்கியிருந்த...
கவிதைகளும், சொல்லாமல்...
சொல்லிக் கொண்டிருந்தன...
உன் மீதான என் காதலை...!
என் பெயர் சொல்லி...
நீ அழைத்த தருணங்களும்...
என் முகம் பார்த்து நீ ....
மறைத்த வெட்கங்களும்....
காற்றிப் பறந்த உன் கூந்தலை..
ஒதுக்கிவிட்டு..நீ பார்த்த பார்வையும்...
குவித்துப் போட்டிருக்கின்றன்...
எனக்குள் ஏதேதோ உணர்வுகளை...!
படாமல் படும் பனியாய்
தொடாமலேயே நிறைந்திருக்கும்
உன் நினைவுகள் கொடுத்த...
வெளிச்சத்தில் துளிர்த்து நிற்கிறது
சொல்லாத காதலின் ஒரு தளிர்.....!!!
பிரிவோம் என்று தெரிந்தே...
பழகிய நாட்களின் ஓரங்களில்
ஒட்டியிருந்த காதலின்
படிமாணங்களை பகுத்தெடுத்து
வைத்திருக்கிறேன்..என் உள்ளங்கையில்
உன் நினைவுகளின் எச்சங்களோடு...!
உனை தேட எடுக்கும்
முயற்சிகளை மனதுக்குளேயே
மரித்துப் போகச் செய்து.....
இந்தக் கணம் வரை..
விளையாடிக் கொண்டிருக்கிறேன்....
நீ என் மீது வைத்திருந்த...
காதல் என்ற பெயருக்குள்
ஒளிந்திருக்கும் ஒரு நிஜக்காதலோடு....!
தேவா. S
Comments
நீ அழைத்த தருணங்களும்...
என் முகம் பார்த்து நீ ....
மறைத்த வெட்கங்களும்....
காற்றிப் பறந்த உன் கூந்தலை..
ஒதுக்கிவிட்டு..நீ பார்த்த பார்வையும்...
குவித்துப் போட்டிருக்கின்றன்...
எனக்குள் ஏதேதோ உணர்வுகளை...!
.... romantic!
ஒளிந்திருக்கும் ஒரு நிஜக்காதலோடு....!//
அட!!! செம
ஒரு மழை நேரத்து மாலையும்
என்னை சுற்றி பரவிக் கிடந்த
உன் நினைவுகளும்....
என்னிலிருந்து சிணுங்கலாய்
உதிரத் தொடங்கியிருந்த...
கவிதைகளும், சொல்லாமல்...//
இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா .., ஆனா என்ன செய்வது எனக்குத்தான் வடை போச்சே ..!!
கமெண்ட் போட முடியாது... எனக்கு பிடிச்ச லைன் சித்ரா மேடம் போட்டாங்க...கிர்ர்ர்ர்ர்
நீ அழைத்த தருணங்களும்...
என் முகம் பார்த்து நீ ....
மறைத்த வெட்கங்களும்....
காற்றிப் பறந்த உன் கூந்தலை..
ஒதுக்கிவிட்டு..நீ பார்த்த பார்வையும்...
குவித்துப் போட்டிருக்கின்றன்...
எனக்குள் ஏதேதோ உணர்வுகளை...!//
எனக்கும் இந்த வரிகளே மிக பிடித்திருக்கின்றன.
Nice Kavithai.
சூப்பர் அண்ணா
பழகிய நாட்களின் ஓரங்களில்
ஒட்டியிருந்த காதலின்
படிமாணங்களை பகுத்தெடுத்து
வைத்திருக்கிறேன்..என் உள்ளங்கையில்
உன் நினைவுகளின் எச்சங்களோடு...! /
எனக்கும் இருக்கு இந்த உணர்வு அண்ணா...
விளையாடிக் கொண்டிருக்கிறேன்....
நீ என் மீது வைத்திருந்த...
காதல் என்ற பெயருக்குள்
ஒளிந்திருக்கும் ஒரு நிஜக்காதலோடு....!//
நம்பிக்கையை உணர்த்தும் இந்த வரிகளை நான் ரொம்ப ரசித்தேன்!!
இறைந்து கிடக்கிறது
உன்னோடு சுற்றித் திரிந்த
ஞாபகங்களின் சுவடுகள்...!///
சரி சரி அது தான் காலசுவடுகள்
காதலோடு கை சேர்த்து
சிரித்து எழுப்பிய...
ஒலிகளின் அதிர்வுகள்
கலைத்துப் போடுகின்றன
சம கால நினைவுகளை...////
ஓஹ சரி சரி மீண்டும் அடுக்கி வையுங்கள்
காதலா? நட்பா..?
என்று தீர்மானிக்க முடியாமல்
மத்திமத்தில் கிளைத்த
உணர்வுகளின் தெளிவற்ற...
பிம்பங்களால் இதோ...
நிகழ்ந்தே விட்டது நம் பிரிவு...!///
ஓஹ பிரிந்து போயடாங்களா...
உன்னைப் பற்றிய...
நினைவுகளோடும் செரிக்க முடியா...
ஆசைகளோடும் இறுக்கத்தில்..
மூடிக் கிடக்கிறது தீர்மானித்தல்களில்...
தோற்றுப் போன மனது....!/////
அதுக்கு தான் நல்ல தீர்மானம் போடனும்
ஒரு மழையின் ஸ்பரிசம் போல
தீண்டாமல் தீண்டிச் சென்ற
உன் இயல்புகளின் விருப்பங்கள்
ஒரு தென்றலைப் போல
வருடி மறைந்துதான் போனது...!////
தீண்டமையே இப்படி இன்னும் தீண்டினால் அவ்ளவுதான்
ஒரு கோப்பை தேநீரும்...
ஒரு மழை நேரத்து மாலையும்
என்னை சுற்றி பரவிக் கிடந்த
உன் நினைவுகளும்....
என்னிலிருந்து சிணுங்கலாய்
உதிரத் தொடங்கியிருந்த...
கவிதைகளும், சொல்லாமல்...
சொல்லிக் கொண்டிருந்தன...
உன் மீதான என் காதலை...!////
நல்லா தெரிகிறது உங்கள் சிணுங்கள்
என் பெயர் சொல்லி...
நீ அழைத்த தருணங்களும்...
என் முகம் பார்த்து நீ ....
மறைத்த வெட்கங்களும்....
காற்றிப் பறந்த உன் கூந்தலை..
ஒதுக்கிவிட்டு..நீ பார்த்த பார்வையும்...
குவித்துப் போட்டிருக்கின்றன்...
எனக்குள் ஏதேதோ உணர்வுகளை...!////
என்ன என்ன எல்லாம் நோட் பண்ணி இருக்கார்
படாமல் படும் பனியாய்
தொடாமலேயே நிறைந்திருக்கும்
உன் நினைவுகள் கொடுத்த...
வெளிச்சத்தில் துளிர்த்து நிற்கிறது
சொல்லாத காதலின் ஒரு தளிர்.....!!!/////
இனி சூரியனே தேவை இல்லை
பிரிவோம் என்று தெரிந்தே...
பழகிய நாட்களின் ஓரங்களில்
ஒட்டியிருந்த காதலின்
படிமாணங்களை பகுத்தெடுத்து
வைத்திருக்கிறேன்..என் உள்ளங்கையில்
உன் நினைவுகளின் எச்சங்களோடு...!////
உள்ளங்ககை தாங்குதா...
உனை தேட எடுக்கும்
முயற்சிகளை மனதுக்குளேயே
மரித்துப் போகச் செய்து.....
இந்தக் கணம் வரை..
விளையாடிக் கொண்டிருக்கிறேன்....
நீ என் மீது வைத்திருந்த...
காதல் என்ற பெயருக்குள்
ஒளிந்திருக்கும் ஒரு நிஜக்காதலோடு....!//////
அப்போ தேடுறேன் தேடுறேன் சொன்னது இது தானா...?
படிக்க படிக்க சலிப்பதில்லை காதலும், கவிதையும்....!!
சில்லுனு ஒரு காதல்......சூப்பர்...
தொடாமலேயே நிறைந்திருக்கும்
உன் நினைவுகள் கொடுத்த...
வெளிச்சத்தில் துளிர்த்து நிற்கிறது
சொல்லாத காதலின் ஒரு தளிர்.....!!!///
காதலியின் நினைவுகளை...
கதிரவனுக்கு ஒப்பிட்டு
அந்த நினைவில் துளிர்க்கும்
உங்கள் காதல் அருமை... :-))))
செமையா இருக்கு தேவா... :-))
ஒரு மழை நேரத்து மாலையும்
என்னை சுற்றி பரவிக் கிடந்த
உன் நினைவுகளும்....
என்னிலிருந்து சிணுங்கலாய்
உதிரத் தொடங்கியிருந்த...
கவிதைகளும், சொல்லாமல்...
சொல்லிக் கொண்டிருந்தன...
உன் மீதான என் காதலை...!// lovely poem.. can feel the touch of true love.. by: sriviji
பொருத்தமாய் வந்துள்ள கவிதை
அருமை
தொடர வாழ்த்துக்கள்
புலவர் சா இராமாநுசம்
புலவர் குரல்