Skip to main content

எது...?



சுழலும் நுரையில்
அடித்துச் செல்லும்
மனதோடு நகர்கிறது
கவலைகள் அற்ற
ஒரு கடும் காட்டாறு..!

வெறித்த விழிகளில்
தேங்கிக் கிடக்கும்....
கவலைகளில் நிறைந்திருக்கும்
வாழ்க்கையை வேடிக்கையாய்
பார்க்கிறது.... தூரத்தில் பறக்கும்
ஒரு ஊர்குருவி!

ஒரு காற்றோடு கூடிய
நிறைவில் தலையசத்த
மரத்தின் சந்தோசங்கள்
சாரலாய் பரவி சப்தமாய்
என்னுள் கேள்வி எழுப்புகின்றன்
எங்கே தொலைகின்றன மானுட
மகிழ்ச்சிகளென்று....?

இசைக் கச்சேரியை
சற்றுமுன் தொடங்கிய
ஒரு பேடைக்குயிலின்
கீதம் எங்கும் நிறைக்கிறது
சந்தோசத்தின் அதிர்வுகளை

கனமாய் கலைந்திருக்கும்
மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!



தேவா. S

Comments

எந்த ஒரு விசயத்திலும் ரொம்ப எதிர்பார்ப்பது தப்பு தாங்க ........எனக்கு புரிஞ்சது இவ்வளவு தான் ............
//vadai .?//
போடா தம்பி கிறிஸ்துமஸ் வருது இல்ல வீட்டுல போய் கேக் சாப்பிடு
//கனமாய் கலைந்திருக்கும்
மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!//

வாழ்வின் பல தருணங்களில் இதை நான் உணர்ந்திருக்கிறேன்!
/சுழலும் நுரையில்
அடித்துச் செல்லும்
மனதோடு நகர்கிறது
கவலைகள் அற்ற
ஒரு கடும் காட்டாறு..!///

அருமை..
//வெறித்த விழிகளில்
தேங்கிக் கிடக்கும்....
கவலைகளில் நிறைந்திருக்கும்
வாழ்க்கையை வேடிக்கையாய்
பார்க்கிறது.... தூரத்தில் பறக்கும்
ஒரு ஊர்குருவி!///

குருவியின் கதை சூப்பர்.
ஒரு காற்றோடு கூடிய
நிறைவில் தலையசத்த
மரத்தின் சந்தோசங்கள்
சாரலாய் பரவி சப்தமாய்
என்னுள் கேள்வி எழுப்புகின்றன்
எங்கே தொலைகின்றன மானுட
மகிழ்ச்சிகளென்று....?//

கலக்கல்
//இசைக் கச்சேரியை
சற்றுமுன் தொடங்கிய
ஒரு பேடைக்குயிலின்
கீதம் எங்கும் நிறைக்கிறது
சந்தோசத்தின் அதிர்வுகளை///

நல்ல இசை விமர்சனம்
//கனமாய் கலைந்திருக்கும்
மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!///

வாழ்க்கை தத்துவம்
/////கனமாய் கலைந்திருக்கும்
மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!/////

அருமை மாப்ஸ்.....அழிக்க அழிக்க வரையனும், அதான் வாழ்க்கையின் இயல்பு........!
மனதின் சோகத்தையும்... அதை மாற்றும் விதத்தையும் அருமையா சொல்லி இருக்கீங்க
உங்க தமிழ் வாத்தியார் யார்ன்னு சொன்னா நம்ம தமிழ் சேனல் காம்பியர் பொண்ணுங்கள டியூசன் அனுப்பலாம்...ஹி ஹி ஒரு சமூக சேவையா நினைச்சு சொல்லுங்க...

தயவுசெஞ்சு ரிப்ளை தமிழ்-ல போடுங்க, இல்லைன்னா எனக்கு புரியாது.
அருண் பிரசாத் said...
மனதின் சோகத்தையும்... அதை மாற்றும் விதத்தையும் அருமையா சொல்லி இருக்கீங்க
///////////////////////

இப்போ தெரிஞ்சு போச்சுய்யா, இவர் இப்பிடி எழுதுறதுக்கு யார் காரணம்ன்னு...

அய்ய்ய்ய்ய்யய்ய்யய்யோ தொல்லை தாங்க முடியலப்பா :)
வினோ said…
எதிர்பார்ப்புகள் எப்பவும் ஏமாற்றம் தரும்... அதில் சோகம் வாழும்...

அழகுகளை தேடியே வாழ்க்கை பயணம்...
dheva said…
மனிதர்களே..............

'ஒன்றுமில்லை.......அலட்டிக்காதீங்க............எங்கேயும் போய் நீங்கள் சேரப் போவது இல்லை நிதானமா வாழுங்க '

இதுதான் கவிதையின் கரு.
//கனமாய் கலைந்திருக்கும்
மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!//

கனமான வரிகள் தேவா.
இதே மாதிரி நான் ஒரு கவிதை ட்ரை பண்ண போறேன் ;P
சுழலும் நுரையில்
அடித்துச் செல்லும்
மனதோடு நகர்கிறது
கவலைகள் அற்ற
ஒரு கடும் காட்டாறு..!//

நல்ல வரிகள்!
வெறித்த விழிகளில்
தேங்கிக் கிடக்கும்....
கவலைகளில் நிறைந்திருக்கும்
வாழ்க்கையை வேடிக்கையாய்
பார்க்கிறது.... தூரத்தில் பறக்கும்
ஒரு ஊர்குருவி!//

குருவியாய்ப் பறக்க மனம் விரும்புகிறது!
இசைக் கச்சேரியை
சற்றுமுன் தொடங்கிய
ஒரு பேடைக்குயிலின்
கீதம் எங்கும் நிறைக்கிறது
சந்தோசத்தின் அதிர்வுகளை//

அழகு!
கனமாய் கலைந்திருக்கும்
மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!//

எதிபார்ப்புகள்தான் கவலையின் அடிப்படை, நன்கு முடித்துள்ளீர்!
கடைசி ஐந்து வரிகள் சூப்பர்..
தேர்ந்தெடுத்த வார்த்தைகள்... superb
aavee said…
நல்ல நடை. இயற்கையை வார்த்தைகளில் விவரிப்பது அவ்வளவு எளிதல்ல. மிக இயல்பாய் கையாண்டிருக்கிறீர்கள்
ஹேமா said…
வாழ்வுக்கு மீறிய எதிர்பார்ப்பே மானுட சந்தோஷங்களை விழுங்கிக்கொண்டிருக்கிறது.
இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு நினைத்தால்...!
Anonymous said…
வாழ்வின் அழகுகளை அப்போதே ரசித்திருங்கள் மீண்டும் வருவதற்கு நீங்களோ அவைகளோ காத்திருக்காது! சரிதானே அண்ணே?
Arun Prasath said…
நான் என்ன சொல்ல எல்லாம் நம்ம மக்களே சொல்லிடாங்க
//கனமாய் கலைந்திருக்கும்
மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!//

மிக இயல்பாய் கையாண்டிருக்கிறீர்கள்.
உண்மைலேயே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா .

சொல்லப்போனா இந்த கவிதை எனக்கு புரிஞ்சிருக்கு ..



///கனமாய் கலைந்திருக்கும்

மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!///

ரொம்ப ரொம்ப அருமையான வரிகள் ..!!