Skip to main content

எது...?



சுழலும் நுரையில்
அடித்துச் செல்லும்
மனதோடு நகர்கிறது
கவலைகள் அற்ற
ஒரு கடும் காட்டாறு..!

வெறித்த விழிகளில்
தேங்கிக் கிடக்கும்....
கவலைகளில் நிறைந்திருக்கும்
வாழ்க்கையை வேடிக்கையாய்
பார்க்கிறது.... தூரத்தில் பறக்கும்
ஒரு ஊர்குருவி!

ஒரு காற்றோடு கூடிய
நிறைவில் தலையசத்த
மரத்தின் சந்தோசங்கள்
சாரலாய் பரவி சப்தமாய்
என்னுள் கேள்வி எழுப்புகின்றன்
எங்கே தொலைகின்றன மானுட
மகிழ்ச்சிகளென்று....?

இசைக் கச்சேரியை
சற்றுமுன் தொடங்கிய
ஒரு பேடைக்குயிலின்
கீதம் எங்கும் நிறைக்கிறது
சந்தோசத்தின் அதிர்வுகளை

கனமாய் கலைந்திருக்கும்
மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!



தேவா. S

Comments

எந்த ஒரு விசயத்திலும் ரொம்ப எதிர்பார்ப்பது தப்பு தாங்க ........எனக்கு புரிஞ்சது இவ்வளவு தான் ............
//vadai .?//
போடா தம்பி கிறிஸ்துமஸ் வருது இல்ல வீட்டுல போய் கேக் சாப்பிடு
//கனமாய் கலைந்திருக்கும்
மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!//

வாழ்வின் பல தருணங்களில் இதை நான் உணர்ந்திருக்கிறேன்!
/சுழலும் நுரையில்
அடித்துச் செல்லும்
மனதோடு நகர்கிறது
கவலைகள் அற்ற
ஒரு கடும் காட்டாறு..!///

அருமை..
//வெறித்த விழிகளில்
தேங்கிக் கிடக்கும்....
கவலைகளில் நிறைந்திருக்கும்
வாழ்க்கையை வேடிக்கையாய்
பார்க்கிறது.... தூரத்தில் பறக்கும்
ஒரு ஊர்குருவி!///

குருவியின் கதை சூப்பர்.
ஒரு காற்றோடு கூடிய
நிறைவில் தலையசத்த
மரத்தின் சந்தோசங்கள்
சாரலாய் பரவி சப்தமாய்
என்னுள் கேள்வி எழுப்புகின்றன்
எங்கே தொலைகின்றன மானுட
மகிழ்ச்சிகளென்று....?//

கலக்கல்
//இசைக் கச்சேரியை
சற்றுமுன் தொடங்கிய
ஒரு பேடைக்குயிலின்
கீதம் எங்கும் நிறைக்கிறது
சந்தோசத்தின் அதிர்வுகளை///

நல்ல இசை விமர்சனம்
//கனமாய் கலைந்திருக்கும்
மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!///

வாழ்க்கை தத்துவம்
/////கனமாய் கலைந்திருக்கும்
மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!/////

அருமை மாப்ஸ்.....அழிக்க அழிக்க வரையனும், அதான் வாழ்க்கையின் இயல்பு........!
மனதின் சோகத்தையும்... அதை மாற்றும் விதத்தையும் அருமையா சொல்லி இருக்கீங்க
உங்க தமிழ் வாத்தியார் யார்ன்னு சொன்னா நம்ம தமிழ் சேனல் காம்பியர் பொண்ணுங்கள டியூசன் அனுப்பலாம்...ஹி ஹி ஒரு சமூக சேவையா நினைச்சு சொல்லுங்க...

தயவுசெஞ்சு ரிப்ளை தமிழ்-ல போடுங்க, இல்லைன்னா எனக்கு புரியாது.
அருண் பிரசாத் said...
மனதின் சோகத்தையும்... அதை மாற்றும் விதத்தையும் அருமையா சொல்லி இருக்கீங்க
///////////////////////

இப்போ தெரிஞ்சு போச்சுய்யா, இவர் இப்பிடி எழுதுறதுக்கு யார் காரணம்ன்னு...

அய்ய்ய்ய்ய்யய்ய்யய்யோ தொல்லை தாங்க முடியலப்பா :)
வினோ said…
எதிர்பார்ப்புகள் எப்பவும் ஏமாற்றம் தரும்... அதில் சோகம் வாழும்...

அழகுகளை தேடியே வாழ்க்கை பயணம்...
dheva said…
மனிதர்களே..............

'ஒன்றுமில்லை.......அலட்டிக்காதீங்க............எங்கேயும் போய் நீங்கள் சேரப் போவது இல்லை நிதானமா வாழுங்க '

இதுதான் கவிதையின் கரு.
//கனமாய் கலைந்திருக்கும்
மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!//

கனமான வரிகள் தேவா.
இதே மாதிரி நான் ஒரு கவிதை ட்ரை பண்ண போறேன் ;P
சுழலும் நுரையில்
அடித்துச் செல்லும்
மனதோடு நகர்கிறது
கவலைகள் அற்ற
ஒரு கடும் காட்டாறு..!//

நல்ல வரிகள்!
வெறித்த விழிகளில்
தேங்கிக் கிடக்கும்....
கவலைகளில் நிறைந்திருக்கும்
வாழ்க்கையை வேடிக்கையாய்
பார்க்கிறது.... தூரத்தில் பறக்கும்
ஒரு ஊர்குருவி!//

குருவியாய்ப் பறக்க மனம் விரும்புகிறது!
இசைக் கச்சேரியை
சற்றுமுன் தொடங்கிய
ஒரு பேடைக்குயிலின்
கீதம் எங்கும் நிறைக்கிறது
சந்தோசத்தின் அதிர்வுகளை//

அழகு!
கனமாய் கலைந்திருக்கும்
மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!//

எதிபார்ப்புகள்தான் கவலையின் அடிப்படை, நன்கு முடித்துள்ளீர்!
கடைசி ஐந்து வரிகள் சூப்பர்..
தேர்ந்தெடுத்த வார்த்தைகள்... superb
aavee said…
நல்ல நடை. இயற்கையை வார்த்தைகளில் விவரிப்பது அவ்வளவு எளிதல்ல. மிக இயல்பாய் கையாண்டிருக்கிறீர்கள்
ஹேமா said…
வாழ்வுக்கு மீறிய எதிர்பார்ப்பே மானுட சந்தோஷங்களை விழுங்கிக்கொண்டிருக்கிறது.
இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு நினைத்தால்...!
Anonymous said…
வாழ்வின் அழகுகளை அப்போதே ரசித்திருங்கள் மீண்டும் வருவதற்கு நீங்களோ அவைகளோ காத்திருக்காது! சரிதானே அண்ணே?
Arun Prasath said…
நான் என்ன சொல்ல எல்லாம் நம்ம மக்களே சொல்லிடாங்க
//கனமாய் கலைந்திருக்கும்
மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!//

மிக இயல்பாய் கையாண்டிருக்கிறீர்கள்.
உண்மைலேயே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா .

சொல்லப்போனா இந்த கவிதை எனக்கு புரிஞ்சிருக்கு ..



///கனமாய் கலைந்திருக்கும்

மனதுக்குள் எப்போதும்....
அமர்ந்திருக்கும் எதிர்பார்ப்புகளோ
தப்பாமல் அழித்துப் போடுகின்றன
வாழ்வின் அழகுகளை...!///

ரொம்ப ரொம்ப அருமையான வரிகள் ..!!

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...