Skip to main content

பிம்பம்....!



















சொல்வதற்கு ஒன்றுமில்லை
உன்னிடமும் என்னிடமும்
கொட்டி இறைத்தாயிற்று
நம் காதலை...
உலக விருப்பங்களாய்!

எனக்கு பிடித்ததெல்லாம்
நீ சொன்னாய்...
உனக்கு பிடித்ததெல்லாம்
நான் சொன்னேன்...
பரிமாற முடியாமல் நீ சுற்றிப்
பரவவிட்ட காதலை
பற்றிக் கொள்ள முடியாமல்
பரவிக் கிடகிறேன்
நிலவின் வெளிச்சம் போல....

தொடுவது போலத்தான் வருகிறாய்..
நானும் தொட்டு விடுவாய் ....
என்றுதான் நினைக்கிறேன்...
படாமல் தொடும் காற்றைப் போல
ஸ்பரிசமாய் பரவிவிட்டு....
அருவமாய் மறைந்து போகிறாய்...!

அடிக்கடி பேசிக் கொள்கிறோம்...
ஏதோ கேட்கிறாய்...
நானும் ஏதோ சொல்கிறேன்...
ஒவ்வொரு முறையும்...
காத்திருப்பதை காட்டிக் கொடுக்காமல்
மெளனித்து நிற்கிற ஒன்றைத்தானே
உலகம் காதல் என்கிறது....!

இடமாய் நீ தலை அசைக்கும் போது
வலமாய் நான் நகர்கிறேன்....
நீ வலமாய் தலையசைக்கும் போது
நான் இடமாய் நகர்கிறேன்...
ஆமாம் பல கருத்துக்களின்
இசைவுகளில் நீ இடம் என்றால்
நான் வலம்...
நீ வலம் என்றால்...
நான் இடம்...
ஈர்ப்பின் விதிகள் புரியாததா என்ன?
அது எப்போதும் எதிர்தானே.....?

என் கூட்டம் உனக்கு பிடிக்காது...
எனக்கோ உன் தனிமை பிடிக்காது....
கூட்டத்தை விட்டு நானும்
தனிமையை விட்டு நீயும்...
வரும் பொழுதுகளில்
நம்மை சேர்க்கும் பொருள்...
எதுவாயிருக்கும்....?

நீ சொல்லி நான் கேட்கப் போகும்
கவிதையா? இல்லை
சலனமின்றி உன்னோடு நான் சீரான
இடைவெளியில் நிசப்தத்தை
பரவவிட்டு நடக்கும் ஒரு....
நீண்ட நடையா? இல்லை
மெளனம் உடைத்து...
நம்மை ஆட்கொள்ளப் போகும்
காதலா?

அது கடற்கரையா...?
இல்லை அதிகாலை ஆளில்லா
சாலைகளின் ஓரமா?
நெரிசல் நிறைந்த கடைத் தெருவா?
எதோ ஒரு மொட்டை மாடியா?
மழை பெய்து முடித்த மாலையா?
இல்லை ...
உணவருந்தி முடித்த ஒரு முன்னிரவா?

கற்பனைகளை கரைத்து
ஒரு ஓவியமாய் வரைந்து பார்க்கிறேன்...
வர்ணங்களின் கூட்டு கொடுத்த
தொகுப்பு அழகா? அழகற்றதா...
விவாதத்திற்கு அப்பாற்பட்டு...
அசாத்தியமாய் மறைந்து கிடக்கும்
உன் அழகைப் போல.....
கடைசியில் என்னைத்தான்..
கலைத்துப் போடுகிறது...
சாயங்களில் ஊடுருவியிருக்கும்
ஒரு ஊமை ஓவியம்..!

காத்திருப்போம்....
ஒரு புத்தகத்தின் வரிகளூடே
ஊடுருவிப் படர்ந்து....
நாம் தொலையும் ஒரு அற்புத கணத்தின்
அனுபவங்கள் கொடுக்கும்
சிலிர்ப்பைப் போல...
புரியாமலேயே கிடக்கட்டும் காதல்....!

சொல்லாமல் கொள்ளாமல்..
பிம்பமாய் பிரதிபலிக்கும்..
உணர்வுகளை காதல் என்ற
வார்த்தைக்குள் போட்டு
பூட்டாமல்.. பிம்பங்களாய்
உன்னை நானும் என்னை
நீயும் பிரதிபலித்தேதான்...
போனால் தவறா என்ன?


தேவா. S

Comments

ஒருவருக்கொருவர் பிம்பமாய் இருந்தாலே... அது காதலின் பிரதிபலிப்பு தானே..!! :-))
//அதிகாலை ஆளில்லா
சாலைகளின் ஓரமா?
நெரிசல் நிறைந்த கடைத் தெருவா?
எதோ ஒரு மொட்டை மாடியா?
மழை பெய்து முடித்த மாலையா?
இல்லை ...
உணவருந்தி முடித்த ஒரு முன்னிரவா?//

நான் விரும்பும் வித்தியாசமான ரசனைகள் :)

நடுநிசி நாய்கள் - வீராவின் பக்கங்கள்
க ரா said…
I LIKE THIS ONE NA.. EPADI IRUKINGA :)
Chitra said…
காத்திருப்போம்....
ஒரு புத்தகத்தின் வரிகளூடே
ஊடுருவிப் படர்ந்து....
நாம் தொலையும் ஒரு அற்புத கணத்தின்
அனுபவங்கள் கொடுக்கும்
சிலிர்ப்பைப் போல...
புரியாமலேயே கிடக்கட்டும் காதல்....!


.... Simply Superb! ரொம்ப நாட்கள் கழித்து, கவிதை பக்கம் வந்து இருக்கீங்க.... அருமையாக வந்து இருக்கிறது.
வினோ said…
காதலை காதலித்திருக்கிரீர்கள்.... :)
//ஒரு புத்தகத்தின் வரிகளூடே
ஊடுருவிப் படர்ந்து....
நாம் தொலையும் ஒரு அற்புத கணத்தின்
அனுபவங்கள் கொடுக்கும்
சிலிர்ப்பைப் போல...
புரியாமலேயே கிடக்கட்டும் காதல்....!//

ரொம்ப ரசிச்ச வரிகள்..
காதல் கவிதைகள் எத்தனை முறை படித்தாலும் அலுப்பதில்லை! காதலைப் போல!!

உங்கள் கவிதையும் காதல் உணர்வை தூண்டச் செய்கிறது!!
ரசித்தேன்!
VELU.G said…
//சொல்லாமல் கொள்ளாமல்..
பிம்பமாய் பிரதிபலிக்கும்..
உணர்வுகளை காதல் என்ற
வார்த்தைக்குள் போட்டு
பூட்டாமல்.. பிம்பங்களாய்
உன்னை நானும் என்னை
நீயும் பிரதிபலித்தேதான்...
போனால் தவறா என்ன?
//

அற்புதமான வரிகள்

உணர்வுகளை வார்த்தைகளுக்குள் அடக்குவதால் நிறைய பிரச்சனைகள்

very nice
//தொடுவது போலத்தான் வருகிறாய்..
நானும் தொட்டு விடுவாய் ....
என்றுதான் நினைக்கிறேன்...//

அணைப்பாய் என நான் தவியாய் தவித்தேன் ,
இருந்தும் வெளியில் பொய்யாய் முறைத்தேன் !!

( இந்த வரிகள் நியாபகம் வருது அண்ணா )

கவிதை புரிந்ததுடன் காதலுடன் இருக்கிறது ..

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...