Skip to main content

உடையாரின் அதிர்வலைகள்...30.09.2011!



















அதிர்வு I

அதிர்வு II


மனதைப் பிசைந்துகொண்டிருக்கிறது உடையார் நாவல். விளையாட்டாய் நான் தொட்ட எல்லாமே ஏதோ ஒரு தளத்திற்கு என்னை தர தரவென்று இழுத்துச்சென்று மூர்ச்சையாக்கி வாழ்வின் அடுத்த பாகத்திற்கான புரிதலை என்னுள் திணித்து பிரமாண்ட மெளனத்தைக் கொடுத்து விட்டுச் செல்லும். இங்கே கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விடயம். ஒரு மெளனம் கடும் தடிமனாய்அடர்ந்தது என்று ஒவ்வொரு முறையும் எண்ணும் போதும் அதை விடஅடர்த்தியாய் மீண்டுமொரு மெளனம் கிடைக்கும்.

அப்படியான ஒரு தளத்திற்கு ஒவ்வொரு முறையும் பாலாவின் எழுத்து என்னை இழுத்துச் சென்று இருக்கிறது. இதோ உடையாரின் மூலம் மீண்டுமொரு மெளனம். கதையை மட்டும் வாசிக்க எப்போதும் வெறும் புத்தகம்வாசிப்பவனல்ல நான். மாறாக அதன் பின்னணியில் ஒளிந்து கிடக்கும் ஒருமிகப்பிரமாண்ட வாழ்க்கையை ஒரு சக்கரவர்த்தியின் ஆசையினை, அவன் கோயில் செய்த பின்னணியினை அதை எழுத்தாக்கிய என் எழுத்துலக தகப்பன் அய்யா பாலகுமரனை மொத்தமாய் உள்வாங்கிக் கொண்டு பேச்சற்றுகண்ணீரோடு கசிந்து உருகிக் கிடக்கிறேன்.

என்ன அய்யா வாழ்க்கை வாழ்கிறோம் நாம் இப்போது? என்ன அய்யா கலாச்சாரம்பற்றி பேசுகிறோம்? நிஜத்தில் கலாச்சரம் என்றால் என்னவென்றறியாமல்நவீனத்தின் பின்னால் ஓடிக்கொண்டு நம்மை நாகரீகத்தின்உச்சத்திலிருப்பவர்களாய் ஒரு மன மயக்கம் கொண்டு இருக்கிறோம்அவ்வளவே. நாகரீகம் என்பது வெறுமனே உடையா? நடையா? புத்திகளுக்குள்ஏற்றி வைத்திருக்கும் விசய ஞானமா? புலமையா? இசையா? மொழியா? கலையா?

அல்ல அல்ல.... அது வெறுமனே விடயங்களை செய்வதல்ல. வெறுமனேபுறத்தை நோக்கிய ஒரு தொடல் அல்ல...நாகரீகம் என்பது உடையாலும், உணவாலும்,கலையாலும், பண்பாட்டாலும், வாழ்வியல் முறைகளாலும் சகமனிதனை மதித்தல். நாகரீகம் என்பது மனித நேயம். நாகரீகம் என்பது வசதிவாய்ப்புகளோ அறிவியலோ அல்ல.. நாகரீகம் என்பது அடுத்தவரின் சுயத்தைமதித்து நடத்தல்.

பத்தாம் நூற்றாண்டில் எம் பெருமான் ஸ்ரீ இராஜ இராஜ உடையார் காலத்தில்இருந்த நாகரீகத்தின் பழுப்பேறிய பாகங்களின் சிறு முனையேனும் தற்போது இல்லை என்றுதான் கூறவேண்டும். மக்களை சுபிட்சமாக நடத்தத் தெரிந்த ஒருஅரசன் செல்வச் செழிப்போடு அவர்களின் வாழ்க்கையை புறத்தில் அழகாக்குகிறான். தேவைகள் எல்லாம் அற்றுப் போய் நிறைவாய் தன் மக்கள் வாழ தன் வீரத்தையும் விவேகத்தையும் விதைத்து தேசத்தின் எல்லைகளைவிரிவு படுத்தி கட்டுக்கோப்பான எதிரிகளின் பயமில்லாத ஒரு தேசமாக்குகிறான்.

புறத்தில் அழகான வாழ்க்கைத் தேவையான எல்லா விடயங்களையும் பூர்த்திசெய்த பின் இவர்களின் அகத்திற்கு என்ன செய்யமுடியும் என்று உடையார் இராஜ இராஜத் தேவர் சிந்திக்க அவருள் எழுந்த பிரமாண்டம்தான் இராஜ இராசேச்வரம்என்னும் தஞ்சை பெரிய கோயில். கோயில் கட்டவேண்டும் என்று தீர்மானித்த பின்பு அதற்கான திட்ட வரைவுகளை திரைச்சீலையில் வரைந்து சிதம்பரத்தில்இருந்து தேவரடியார்கள் மூலமாக தஞ்சைக்கு கொணரும் வழியில் அதைக்கொண்டு வரும் மாட்டு வண்டிகள் ஆற்றில் சிக்கிக் கொண்டு விடுகின்றன.

இங்கே தேவரடியார்கள் சோழர்காலத்தில் மிகப்பெரிய இயங்கு சக்தியாய்இருந்ததைக் கவனிக்க முடிகிறது. இந்த மாட்டு வண்டிகள் சிக்கிக் கொண்டனஎன்றவுடன் விடயம் கேள்விபட்டு அங்கே வருகிறார் சோழ தேசத்தின்சேதுபதியான பிரம்மராயர் எனப்படும் கிருஷ்ணன் ராமன். பிறப்பால் ஒருஅந்தணர் ஆனால் வாள் ஏந்தும் சேனாதிபதியாகி சோழ தேசத்தை தனதுஅசாதரண திட்டமிடல்களால் காத்து வரும் பராக்கிரமசாலி. ஒரு மன்னன்திறமையாக நகர அவனின் முழுமையான அன்பில், அவனைச் சுற்றி மிகதிறமையான ஆட்கள் நிறைந்து போய் விடுகிறார்கள். அப்படித்தான் இராஜஇராஜத் தேவரை சுற்றி சுற்றியே சிந்திக்கும் பெருமக்கள் அவருக்கு அற்புதமானஒரு அரணாய் அமைந்து போய் விட்டார்கள்...!

கோவில் செய்ய வேண்டும் என்ற இராஜ இராஜனின் கனவினை சமகாலத்தில்வாழ்ந்த மக்கள் அதை ஒரு தேவையற்ற வேலையாகவும் கருதியிருக்கவாய்ப்புண்டு. எல்லா வசதிகளும் நவீனங்களும் உள்ள தற்காலத்தில் கூடஇப்படியான ஒரு செயல் திட்டத்தை முடிப்பது எவ்வளவு சிரமம் என்பதை நான்சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. ஏழு பனை உயரத்தில் ஒரு கோயில். அதுவும் முழுக்க முழுக்க கல்லால் செய்ய வேண்டும் என்று சொன்ன போதேசுற்று வட்டாரத்தில் மலைகளே இல்லாத ஒரு இடத்திலிருந்து இதை எப்படிசெய்யப் போகிறார்? என்றுதான் அனைவரும் பிரம்மித்திருக்கத்தான் வேண்டும்.

ஆனால் எல்லாம் வல்ல இறையை சிவனாய் தன்னுள் உருவேற்றிக் கொண்டுதானே தன்னுள் தானாகி அந்த பிரமாண்டத்தை உணர்ந்த உடையார் தன்னின்புரிதலை, தான் கண்ட பிரமாண்டத்தை ஒரு கோவிலாக்கிச் செல்ல வேண்டும்என்பதில் தீவிரமாய் இருந்திக்கிறார். அய்யனின் மனம் முழுதும் சிவன், சிவன், சிவன், என்று அந்தப் பேரிறையே எப்போதும் மூச்சாயிருந்திருக்கிறது. திக்குகளெட்டும் வெற்றி வாகைச் சூடிய ஒரு பேரரசன், எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாய் விளங்கிய ஒரு பராக்கிரமசாலி தன்னின் சுயத்தை தொட்டுஈசனவனை விளங்கிக் கொள்ள அதனால் ஏற்பட்ட அன்பில், நெகிழ்ச்சியில்கருணையில் அந்த சூட்சும உணர்வின் ஸ்தூல வடிவமாய் இன்று நின்றுகொண்டிருக்கிறது தஞ்சை பெரிய கோயில்.

தனது மனைவியரை எல்லாம் அழைத்து அமரச் செய்து அவர்களோடு அமுதுண்டுகண்ணப்ப நாயனார் கதையை பகிர்ந்து," நில்லு கண்ணப்ப " என்று இறைவன்திண்ணன் என்னும் வேடுவனை கண்ணப்ப நாயனார் ஆக்கிய இடத்தை சொல்லிகசிந்து கண் கலங்கி நிற்கிறார் உடையார். ஒரு மனிதன் வாழ்க்கையில் எப்போதுநெகிழ முடியும் தெரியுமா? அவனின், அவனைச் சுற்றியுள்ள வாழ்க்கையின்நிலையாமையை விளங்கிய பின்புதான் நெகிழ்ச்சி என்பதை ஒரு மனிதன்உணர்ந்து உருக முடியும்.

சோழ தேசத்தின் எல்லைகள் விரிந்து பரந்து கிடந்தன. வீரமும், செல்வமும், கல்வியும் கரை புரண்டுக் கொண்டிருந்தது, ஸ்ரீ இராஜ இராஜத் தேவரைச்சுற்றிலும் அற்புதமான மனிதர்களை இந்த பிரபஞ்சம் படைத்து அவனின்மிகப்பெரிய இலட்சியத்தை எல்லாம் அடைய வழி வகை செய்திருந்தது. ஆனால்பெருவுடையத் தேவரோ நிலையாமையைத் தெளிவாக உணந்தவராய்இருந்திருக்கிறார்.

செல்வத்தையும், பொருளையும் வீரத்தையும் காலம் புசித்துச் செரித்து விட்டுப்போய்விடும். ஒரு மன்னன் இவ்வளவு வீரனாய் இருந்தான், இவ்வளவுதேசங்களை வெற்றிக் கொண்டான் என்பது வெறுமனே ஒரு செய்தியாய் மட்டும்காலம் விட்டுச் செல்லத்தான் வாய்ப்பிருக்கிறது. ஆனால் அவனே மிகப்பெரியஆன்ம பலம் கொண்டவனாய் நின்று தான் ஒன்றுமில்லை என்று எண்ணி தனதுஆற்றலை தனது பராக்கிரமத்தை எல்லாம் உடைத்தெறிந்து விட்டு பிரபஞ்சம்என்னும் பிரமாண்டத்தை ஒரு கோயில் வடிவிலாவது செய்து விட்டுப்போகவேண்டும் என்று ஒரு குழந்தையைப் போல பிடிவாதமாய் நின்று தன்னைசுற்றி இருந்த மக்களை எல்லாம் இந்த செயலுக்காய் பணி செய்ய வைத்துஆன்மம் என்னும் ஒரு சங்கமத்தில் எல்லோரையும் ஒன்றுசேர்த்திருக்கிறானென்றால்...

இந்த பூமி உள்ள வரை பெருவுடையார் ஸ்ரீ இராஜ இராஜத் தேவரும், தஞ்சைப்பெரிய கோயிலும் சோழர் நாகரீகமும், அவருடன் உறுதுணையாய் கூட இருந்த பெருமக்களும் எல்லோரின் நினைவிலும் இருந்துதான் ஆக வேண்டும். இது காலத்தால் அழியாதது. காலத்தை வென்றது. காலம் தோற்றுப் போய் சுருங்கிநின்று கோயிலை அதனை ஆக்கிய பெருவுடையத்தேவரை தானே தன்னைஆக்கிக் கொண்டது. எல்லாம் வல்ல ஒன்று எல்லாம் வல்லதாகி இன்று அதுவேறு, காலம் வேறு என்று பிரித்தறிய முடியாமல் இணைந்து பிணைந்துநிற்கிறது.

நிறைய நிறைய பேசுமளவிற்கு உடையாரில் பல கோணங்களில் சோழர்களைபற்றியும் பெருவுடையத் தேவரைப் பற்றியும் அய்யா திரு. பாலகுமாரன் அவர்கள் பேசியிருக்கிறார்கள். ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு வாக்கியமும்ஒவ்வொரு விடயமும் ஆழ அமிழ்ந்து பொருளுணர்ந்து சுவை உணர்ந்து அதில்மூழ்கி எண்ணமற்று கடும் ஆழமான ஒரு தியான நிலைக்குக் கூட்டிச் சென்றுவெவ்வேறு காட்சிகளை எடுத்தியம்பிக் கொண்டிருக்கிது.

ஒரு நாளைக்கு இரண்டு பக்கங்கள் வாசித்து விட்டு ஒரு வாழ்க்கை முழுதும்யோசித்துக் கொண்டிருக்க வேண்டுமோ என்ற பயம் கூட வருகிறது. இரண்டாம் பாகத்தின் இறுதியில் இராஜ இராஜ பெருந்தச்சரோடு கருவூர்த் தேவர் கோயில்கட்டும் வேலைகளை பற்றிய திட்டங்களைக் கேட்டுக் கொண்டிருக்கையில்கொஞ்சம் பொறுங்கள்.... இதோ வந்து விடுகிறேன் என்று அனுமதி கேட்டு விட்டுவந்து இதை எழுதுகிறேன்..!

திரு. பாலகுமாரன் அவர்கள் வரலாற்றை உள்வாங்கி, கோயில் செய்த தொழில்நுட்பத்தை யோசித்து, எல்லா செய்தி தொகுப்புகளையும் ஆதாரத் தரவுகளாகமனதிலாக்கிக் கொண்டு அதன் பின் சூட்சுமமாய் சோழர் காலத்துக்குச் சென்றுஅங்கே நின்று கொண்டு எல்லாமவற்றையும் விவரிக்கிறார். ஒவ்வொருபாத்திரத்திலும் அவர் உடலற்று விரவி அந்த பாத்திரமாகவே நின்று பேசும்இடங்களில் இரத்தமும் சதையுமாய் அந்த அந்த பாத்திரங்களின் குணாதிசயங்கள்எழுத்தின் மூலம் வெளிப்படுவதை தெளிவாய் உணர முடிகிறது.

நான் இன்னும் உடையாரைப் பற்றியும் அதன் ஆழமான வீச்சுக்கள், நாகரீகம், பாத்திரங்களின் படைப்புக்கள், தெய்வங்களின் பலம், கருவூர்த் தேவர் என்னும்குருவின் தீர்க்கம், பிரம்மராயரின் பராக்கிரமம், இராசேந்திர சோழனின் வீரம், அருண் மொழி பட்டரின் விவேகம், பஞ்சவன் மாதேவியின் தீரம், கோவிலைச்செய்யும் இராஜ பெருந்தச்சரின் தொழில் நுட்பம், செம்பியன் மாதேவியின்மரணம், சேரதேசத்து அந்தணர்களின் கடிகை என்னும் போர் பயிற்சி களத்தின்ஆழம், இன்னமும் 10,000 சேர, சாளுக்கிய, பாண்டிய, கங்க நாட்டு போர்அடிமைகளின் மனோநிலைகள், தேவரடியார்கள், சிற்பிகள் பற்றியவிவரணைகள், கருந்தட்டாங்குடி கருமார்கள், சோழ தேசத்துஅதிகாரிச்சிகள்..........மேலும் ஒவ்வொரு பக்கத்திலும் நிறைந்திருக்கும்பெருவுடையத்தேவரின் ஆளுமை...

இப்படி எல்லாம் ஒன்றுமே பேச ஆரம்பிக்கவில்லை...! காலம் செலுத்தும்திசையில் என் எழுத்துலக குருநாதரின் ஒரு மிகப்பெரிய படைப்பினை வாசிக்கும்பாக்கியத்தையும் அதனால் ஏற்படும் உணர்வுகளை எழுத்தாக்கும் திறத்தையும்கொடுத்த எல்லாம் வல்ல ஏக இறை தெளிவாய் வழிகாட்டும், என்று தீர்க்கமாய்நம்புகிறேன். இன்னும் விரிவாக பேசலாம் அடுத்த அடுத்த பாகங்களில்...


" ஸ்ரீராஜராஜீச்சரமுடையார்க்கு நாங்குடுத்தனவும், நம் அக்கண் கொடுத்தனவும்நம் பெண்டுகள் குடுத்தனவும் மற்றும் குடுத்தார் குடுத்தனவும் ஸ்ரீவிமானத்தின்கல்லிலே வெட்டுக என்று திருவாய் மொழிந்தருள, கல்லில் வெட்டின. யாண்டுஇருபதாவது நாள் முன்னூற்றொரு பத்திரண்டினால் உடையார் ஸ்ரீராஜராஜதேவர்குடுத்த ஸ்ரீபலி எழுந்தருளும் பொன்னின் கொள்கை தேவர் ஒருவர் ஆடவல்லான்என்னுங் கல்லால் நிறை எண்ணூற்றிருபத்தொன்பதின் கழஞ்சேய் முக்காலேமூன்று மஞ்சாடி நாளதினாலேயே டுத்த பொன்னின் பத்மாஸன ஸ்ரீபலி தலம்ஒன்று மேற்படி கல்லால் நிறை தொள்ளாயிரத்து தொன்னூற்றைய்ங்கழஞ்சரையே நாலுமஞ்சாடி”.

சோழம்...! சோழம்....! சோழம்....!

(இன்னும் அதிரும்....)


தேவா. S




Comments

Mahi_Granny said…
நானும் அதிர்ந்து தான் போகிறேன் உங்களின் உணர்ச்சி பூர்வமான எழுத்தை வாசித்து. துபாயில் தமிழ் நாவல் கூட கிடைக்கிறதா.தொடருங்க தம்பி
நல்ல பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
உணர்ச்சிப் பூர்வமான எழுத்து எங்களையும் உணர்வில் ஆழ்த்துகிறது.
தொடருங்கள்.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...